முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மல்லிகார்ஜுன் கார்கே தலைவராகப் பதவி ஏற்பு

இன்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன் கார்கே பதவி ஏற்பு விழாவில்


காங்கிரஸ் முன்னால் தலைவர்  சோனியா காந்தி முன்னால் செயம் தலைவர் ராகுல் காந்தி  கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.           


டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின்  தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம்  17-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் அகியோர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முறையில் தேர்தல் நடைபெற்றது. 19- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் மல்லிகார்ஜுன கார்கே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதையடுத்து இன்று டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் இந்திய தேசிய  காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றுக் கொண்டார். இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி கார்கேவிடம் தலைவர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

கிட்டத்திட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜவகர்லால் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸுக்கு முழு நேரத் தலைவர் மற்றும் புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ளது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். பதவியேற்றப்பின்னர் கட்சியின் தொண்டர்களிடம் பேசியவர், “ஒரு தொழிலாளியின் மகன், சாதாரண காங்கிரஸ் ஊழியர், கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றது உணர்ச்சிகரமான தருணம். இதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி.

1969- ஆம் ஆண்டில் ஒரு தொகுதி குழுத் தலைவராக எனது பயணத்தைத் தொடங்கினேன். இன்று இவ்வளவு பெரிய உயர் பதவிக்கு என்னை உயர்த்தியுள்ளீர்கள். மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது எனது பாக்கியமும், பெருமையுமாகும்.தலைவர் என்ற முறையில் எனது தொண்டர்களை கவனிப்பது தலையாய கடமையாகும். ஒற்றுமையுடன் செயல்படுவோம்.




அனைவருக்குமான சமமான இந்தியாவை உருவாக்குவோம். நாங்கள் இந்த நாட்டின் அரசியலமைப்பை நிலைநிறுத்துவோம், அனைவரின் உரிமைகளையும் மதித்து சம வாய்ப்புகளை வழங்குவோம், வெறுப்பை பரப்புபவர்களை தோற்கடிப்போம், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பட்டினிக்கு எதிராக போராடுவோம்” எனக் தெரிவித்தார்.தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத் தேர்தல்கள் குறித்து பேசியவர், “இந்த மாநிலங்களில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாம் நம் கட்சியின் பலத்தைக் காட்ட வேண்டும். நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம். நாம் மகாத்மா காந்தி வழிவந்தவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். காங்கிரஸ் தொண்டர் பயத்தை போக்கினால், பெரிய ராஜ்ஜியங்களும் தோற்கடிக்கப்படும்” என்றார்.

உதய்பூர் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் குறித்து பேசுகையில், 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கட்சியில் 50 சதவீத பதவிகள் வழங்கும் முறை செயல்படுத்தப்படும் என்று கூறினார்

மேலும் அனைவருக்குமான சமமான இந்தியாவை உருவாக்குவோம். நாங்கள் இந்த நாட்டின் அரசியலமைப்பை நிலைநிறுத்துவோம், அனைவரின் உரிமைகளையும் மதித்து சம வாய்ப்புகளை வழங்குவோம், வெறுப்பை பரப்புபவர்களை தோற்கடிப்போம், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பட்டினிக்கு எதிராக போராடுவோம்” என்று கூறினார்.

கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “காங்கிரஸ் தலைவர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு. நான் என் கடமைகளை நேர்மையுடன் செய்ய முயற்சித்தேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மாற்றம்  தான் உலகின் ஆட்சி. காங்கிரஸ் முன்பு நிறைய பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் இந்த பிரச்சனைகளை சமாளித்து மீண்டு வருவோம் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, கார்கேவிடம் வெற்றி பெற்றதற்கான தேர்தல் சான்றிதழை வழங்கினார். பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அக்டோபர் 24 முதல் 26 வரை 3 நாட்கள் இடைவெளியில் உள்ளார்.

புதிய தலைவராக கார்கே பொறுப்பேற்றதையடுத்து, காங்கிரஸ் காரியக் கமிட்டி அனைத்து உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவரிடம் கொடுத்தனர். இப்பதவிகளுக்கு புதிய நபர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கார்கேவிற்கு வாழ்த்து கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...