முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவில் வழிநாடத்தும் தலைமை மீண்டும்‌ இரண்டாக உடைந்த நிலையில் நடக்கும் போட்டி மற்றும் பசும் பொன் வரை நீளும் பதவிச் சண்டைக் களம்

 2014- ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளராக. இருந்து காலம்சென்ற முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா பசும்பொனில் உள்ள உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன்  நினைவிடத்தில் உள்ள உருவச் சிலைக்கு ரூபாய்.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தேவர் ஜெயந்தியன்றும் நினைவிடத்தில் பொருத்தப்படும்.

அ.தி.மு.க.வின்  பொருளாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணா நகரிலுள்ள வங்கி லாக்கரில் இந்தக் கவசம் வைக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்து பசும்பொன்னுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.   இதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு தேவர் ஜெயந்திக்கு முன்பும் வங்கிக்கு வந்து லாக்கரிலுள்ள தேவரின் தங்க கவசத்தை எடுத்து விழா கமிட்டி பொருப்பாளரிடம்  ஒப்படைப்பார். விழா முடிவடைந்ததும் அதே போன்று தங்க கவசத்தை முறைப்படி பெற்று வங்கிக்கு வந்து  ஒப்படைப்பார்.   அனால் தற்போது  பிரிந்துபோய் இரண்டு தரப்பிலும் தனித்தனியாக வங்கியில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவரின் தங்க கவசம் யார் கையில் ஒப்படைக்கப்படும் என்பது வங்கி நிர்வாகம் அறியாத நிலையில்  இருக்கிறது. இதன் காரணமாக  தேவரின் நினைவிடப்  பொறுப்பாளரான. தேவரின் அக்கா மகன் காலஞ்சென்ற நடராஜத்தேவர் மனைவி  காந்திமீனாள் நடராஜன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில்.



இரண்டு முறை மதுரை வந்த திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் கடிதம் அளித்தும் வங்கி நிர்வாகத்தினர் தேவர் நினைவிட பொறுப்பாளரான காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர வலியுறுத்திக் கூறியதாகத் தெரிகிற நிலையில் காந்தி மீனாள் நடராஜனைச் சந்தித்து பேசுவதற்காக திண்டுக்கல் சீனிவாசனுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் உள்ளிட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி  தரப்பில்  அ.தி.மு.க.வினர் பசும்பொன் சென்றனர்.  நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அருகிலுள்ள தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தனர்.


அதன் பின்னர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தர்மர்   ``தேவர் குருபூஜை விழா ஏற்பாடு குறித்து பார்வையிடுவதற்காக வந்த போது நினைவிடப் பொறுப்பாளர்களிடம் காலை முன்னாள் அமைச்சர்கள் வந்து என்ன பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என கேட்ட போது. அதிமுக முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ. ஜெயலலிதா வழங்கிய தங்கக் கவசத்தைப் பெற தங்களுக்கு ஆதரவளிக்கும் படி அவர்கள் கோரிக்கை வைத்ததாகவும். அதற்கு இது உங்களது உள் கட்சி விவகாரம், நாங்கள் நடுநிலையாகத்தான் செயல்படுவோம், வங்கி யாரிடம் ஒப்படைகிறதோ அவர்கள் தங்கக் கவசத்தைக் கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வதாக கூறியதாக அவரிடம் தெரிவித்ததாகவும். கூறிய நிலை ஆனால்

தேவர் தங்க கவச விவகாரத்தில்  ஓ.பன்னீர் செல்வமும்  வேண்டாம், எடப்பாடி கே.பழனிச்சாமியும் வேண்டாம் அரசு ஆதரவு மட்டுமே  வேண்டும்  என தேவர் நினைவில் அறங்காவலர் பரபரப்பு பேட்டி

தங்கக் கவசம் உள்ள வங்கியின் லாக்கர் சாவி என்னிடம் உள்ளது. வங்கியிலுள்ள தங்கக் கவசத்தைப் பெற்று தேவர் சிலைக்கு வைக்க உள்ளேன் என்றார் 

 தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் பசும் பொன்னில் செய்தியாளர்களிடம் பேட்டி.  ஆனால் அது சாத்தியமா என்பதே எழு வினா ? அதிமுக அதிகாரப் போட்டி தற்போது தேவர் ஜெயந்தி தங்கக் கவசம் வங்கியில்  வாங்குவது யார் என்ற நிலை அரசியல் அதிகாரம் பெறத் துடிக்கும் இவர்கள் தான்  நம்மை இதற்கு முன் ஆட்சி அதிகாரம் செய்த ஊழல் சுயநலக் கும்பல் என்பதே இங்கு    பொது நீதி.பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பொறுத்து எடப்பாடி எடுத்த முடிவுகள் மாறும். எதிர்க்கட்சி துணை தலைவர் மாற்றப்பட்ட முடிவும் மாறுதலுக்கு உரியதே என்ற நிலையில். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூடும் நிலையில் எதிர்க்கட்சி்த் துணைத் தலைவர் செட்டில் அமரப் போகும் நபர் குறித்து எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

அதிமுகவில் உட்கட்சி பூசல்  நிலவி வரும் நிலையில் தான் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது

சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை சம்பந்தப்பட்ட முக்கிய ஆலோசனையை  சபாநாயகர் நடத்த வேண்டிய நிலை 

உள்ளது தொடர்பாக கொறடா வேலுமணி சார்பாக சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதப்பட்டது. அதன் காரணமாக  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட காரணமாக . ஆர்பி உதயகுமாரை துணைத் தலைவராகத் தேர்வு செய்கிறோம் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது.

எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்குவதென்றால் அதற்கு சபாநாயகர்  தான் அனுமதி அளிக்க வேண்டும். என்ன முடிவு எடுக்க போகிறார் எனக் கேள்வி  எழுந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைப் பொறுத்து எடப்பாடி எடுத்த முடிவுகள் மாறும். எதிர்க்கட்சி்த் துணை தலைவர் மாற்றப்பட்ட முடிவும் மாறும உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பொறுத்து எடப்பாடி எடுத்த முடிவுகள் மாறும். 

 இதில் தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சபாநாயகர் (ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் இருந்தாலும்) இதை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வி உள்ள நிலையில் தான் தற்போது சட்டசபையில் இருக்கை பிரச்சனை 

எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அருகே ஓ. பன்னீர்செல்வத்தை அமர வைக்கக் கூடாதென்ற கோரிக்கையை எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு வைத்துள்ளது. எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் என்பதால் இரண்டு பேரையும் அருகருகே அமர வைத்துள்ளனர். இப்படி அமர வைக்க கூடாது. ஓ பன்னீர்செல்வதை வேறு இடத்தில் அமர வைக்கச் சொல்லலாம் என்று எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,