முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் உட்பட எட்டு பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு.

மதுரையில், வீடுகளை காலி மனைகளாக பத்திரப்பதிவு செய்து, அரசுக்கு, 5.50 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் உட்பட எட்டு பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு துறையில் தணிக்கை பதிவாளரான அஞ்சனாகுமார், (வயது 57) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வழிகாட்டி மதிப்பு சார் - பதிவாளராக இருப்பவர் ஜவஹர், (வயது 54) மதுரை சொக்கிக்குளம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அஞ்சனா குமார், 2018 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் முதல், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை; 2019, ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஜவஹரும் சார் - பதிவாளராக இருந்த காலத்தில், வீடு கட்டி விற்கும் உரிமையாளர்கள் பத்திரப்பதிவு செய்ய இவரை அணுகினர். இவர் வீடுகளாகப் பதிவு செய்தால் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், மனைகளாகக் காட்டி வீட்டை மறைத்துப் பதிவு செய்தனர். அந்த வகையில், அஞ்சனாகுமார், அரசுக்கு 3.50 லட்சம் ரூபாயும்; ஜவஹர், 2 லட்சம் ரூபாயும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார்கள் சென்ற நிலையில், இருவரும் புதுக்கோட்டை, மற்றும் நாகர்கோவிலுக்கு இடம் மாற்றப்பட்டனர்.

இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து, அவர்கள் மீதும், வீடு கட்டி விற்பனை செய்த  உரிமையாளர்கள் எட்டு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுரை, பாண்டிக் கோவில் அருகேயுள்ள அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஜவஹர் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள அஞ்சனாகுமார் வீட்டிலும் சோதனை நடந்தது.      

பதவியை தவறாகப் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ததாக புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.

புதுக்கோட்டை பத்திரப்பதிவு துறையில் மாவட்டப் பதிவாளராக (தணிக்கை பிரிவு) பணியாற்றியவர் அஞ்சனக்குமார். இவரது வீடு புதுக்கோட்டையில் கே.எல்.கே.எஸ். நகரில் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வாளர் ஜவகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அஞ்சனகுமாரின் வீட்டிற்குள் சோதனை நடத்தியபோது அஞ்சனகுமார் வீட்டில் இருந்தார். வீட்டில் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர்.

இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகையில், ''அஞ்சனகுமார் மதுரையில் பணியாற்றிய காலத்தில் தனது பதவியை பயன்படுத்தி முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக மதுரை ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. அஞ்சனகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாறுதலில் புதுக்கோட்டை வந்தார். அதனால் இங்குள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது '' என்றனர்.

முன்னதாக சோதனையின் போது வீட்டிற்குள் யாரும் செல்லாதபடி நுழைவு வாயில் கதவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூடினர். வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டிற்குள் கதவினையும் உள்பக்கமாக பூட்டி சோதனை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதோடு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையானது காலையில் துவங்கி மாலை வரை நீடித்தது. அஞ்சனகுமார் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததின் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், அவர் பணியாற்றிய இடங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.              அரசு நிலங்களை ஆக்கிரமித்து போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். அதே வேளையில், வீட்டு மனைகளுக்கு இடையே பூங்கா, நுாலகம் என பொது பயன்பாடிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி இட ஒதுக்கீடு நிலங்களும் விற்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதை தடுக்க காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலங்களின் மதிப்பு காரணமாக, அரசு நிலங்களையும் சில தனியார் நிலங்களிலும் ஆக்கிரமித்து, போலியான ஆவணங்கள் மூலம், விற்பனை செய்கின்றனர்.

அதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதால், நில நிர்வாக ஆணையர் நாகராஜன் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறைகளுக்கு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி சுற்றறிக்கை  அனுப்பியுள்ளதில் கூறப்பட்டுள்ளதாவது:

பூங்கா, நுாலகம் என பொதுபயன்பாடிற்கு என உள்ள திறந்தவெளி இட ஒதுக்கீடு நிலங்கள் பலவும் இன்னும் தனியார் பெயரிலேயே உள்ளன. இதுபோன்ற பல இடங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. வருவாய் துறையின் நில ஆவணங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பெயர் இல்லை. இந்த நிலங்களை பராமரிக்காததால், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பெயர்களில் இந்த அரசு நிலங்களின் விபரங்களை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி துறை, பேரூராட்சி துறை ஊழியர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியதாவது:

ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி நிலங்களை ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு எழுதி கொடுக்கப்பட்ட பத்திரங்களைக் கொண்டு, அந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என கண்டறிந்து, வருவாய் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். வருவாய் துறையினர், ஓ.எஸ்.ஆர்., நிலங்களுக்கான பட்டாவை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அறிவுறுத்தி பேசினார்.

இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி துறை கமிஷனர்கள் ஓ.எஸ்.ஆர்., நிலங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஓ.எஸ்.ஆர்., நிலங்களை சிலர் விற்பனை செய்தது மட்டுமல்லாமல், சிலர் அந்த நிலங்களுக்கு பட்டா பெற்று, நில எடுப்பு அலுவலகங்களில் கோடிக்கணக்கில் இழப்பீடும் பெற்றுள்ளனர். உதாரணமாக, 2021 ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா பீமந்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்காக நில எடுப்பு செய்யும்போது, ஓ.எஸ்.ஆர்., நிலங்களை அரசுக்கே விற்று, 30 கோடி ரூபாய் மோசடி நடந்தது.

இந்த விவகாரத்தில், அப்போது நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரிக்கின்றனர். இதேபோல், ஜூலை மாதம் வல்லம்- வடகால் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கும்போதும், ஓ.எஸ்.ஆர்.,நிலங்களை விற்று 26 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்று ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது. இந்த விவகாரத்திலும் அப்போது நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராஜேந்திரன் உள்ளிட்ட 11 மீது சி.பி.சி.ஐ.டி., காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரிசு நிலங்களை லே அவுட் போட்டு வீட்டு மனைகளாக மாற்றும் போது, 30 சதவீதம் ஒதுக்கப்பட்டு, அதில், பூங்கா, கோவில், சாலை உள்ளிட்டவைக்கு இடம் ஒதுக்க வேண்டும். அந்த இடத்தை, சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பெயருக்கு பதிவு செய்து தர வேண்டும். அவ்வாறு பதிவு செய்த பிறகும் சில நில உரிமையாளர்கள், பழைய பட்டாவை வைத்து, புதிய பத்திரம் தயாரித்து, ஓ.எஸ்.ஆர்., நிலத்தை விற்று மோசடி செய்கின்றனர்.

தரிசு நிலங்களை 'லே அவுட்' போடும் போது, நகர ஊரமைப்புத் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போது, வீட்டு மனைகளுக்கு இடையே ஒதுக்கப்படும் சாலை, பூங்கா போன்ற இடங்களை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் பெயர்களுக்கு எழுதி தர வேண்டும். ஆனால், அவ்வாறு வழங்க வேண்டிய நிலங்களின் பட்டா விவரம், 'லேஅவுட்' போட்டவர்களின் பெயரிலையே இன்னும் உள்ளது. அவற்றை மீண்டும் பத்திரம் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற மோசடிகளை களையவே, இப்போது ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மீட்கும் பணிகளை நில நிர்வாக ஆணையர் முடுக்கி விட்டுள்ளார். இது சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து நடக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...