முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்கள்

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

"ஆந்திரப் பிரதேச மக்கள் ஒவ்வொரு துறையிலும் முக்கியமான பெயரை தாங்களாகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்"

"வளர்ச்சியின் பாதை என்பது பன்முகத்தன்மை கொண்டது. சாமானிய மக்களின் தேவைகளை அது கவனத்தில் கொள்கிறது. நவீன அடிப்படை கட்டமைப்புக்கான வரைபடத்தை உருவாக்குகிறது"

"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு என்பது எங்களின் தொலைநோக்காகும்"

"தேசியப் பெருந்திட்டமான பிரதமரின் விரைவு சக்தி, அடிப்படைக் கட்டமைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது மட்டுமின்றி திட்டங்களின் செலவையும் குறைக்கிறது"


"முதன்முறையாக நீலப் பொருளாதாரம் இவ்வளவு பெரிய முன்னுரிமையைப் பெற்றிருக்கிறது"

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

விப்ளவ் வீருடு அல்லூரு சீதாராம் ராஜுவின் 125 ஆவது ஆண்டு விழாவின் போது ஆந்திரப் பிரதேசத்திற்குப்  பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை தான் பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து பிரதமர் தமது உரையைத்  தொடங்கினார். விசாகப்பட்டினம் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்று குறிப்பிட்ட பிரதமர், இது வர்த்தகம் மற்றும் வணிகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவிற்கும் ரோம் நகருக்கும் வர்த்தகப் பாதையின் ஒரு பகுதியாக இருந்ததையும்  பண்டைய இந்தியாவில் விசாகப்பட்டினம் முக்கிய துறைமுகமாக இருந்ததையும்  அவர் சுட்டிக்காட்டினார்.  இன்று ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும் அர்ப்பணித்ததும் விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் நம்பிக்கைகளை,  விருப்பங்களை அடைவதற்கும், அடிப்படைக்  கட்டமைப்பில் புதிய பரிமாணங்கள், வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், தற்சார்பு இந்தியா ஆகியவற்றுக்கும் ஒரு வழியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா  நாயுடு பற்றிப் பேசிய பிரதமர்,  ஆந்திரப் பிரதேசத்திற்கான அவரது அன்பும் அர்ப்பணிப்பும் எப்போதும்  இணையற்றது என்றார்.




கல்வி அல்லது தொழில்முனைதல், தொழில்நுட்பம் அல்லது மருத்துவப் பணி என ஒவ்வொரு துறையிலும்  முக்கியமான பெயரை ஆந்திரப் பிரதேச மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். இன்று அடிக்கல் நாட்டப்பட்டு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இது மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் என்றார்.

"இந்த 'அமிர்த காலத்தில்', 'வளர்ந்த இந்தியா' என்ற நோக்கத்துடன் நாடு வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது" என்று பிரதமர் கூறினார். வளர்ச்சிக்கான பாதை பல பரிமாணங்களைக்  கொண்டது என்று குறிப்பிட்ட பிரதமர், இது சாமானிய மக்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதாகவும், மேம்பட்ட உள்கட்டமைப்புக்கான வரைபடத்தை முன்வைப்பதாகவும் கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசின் தொலைநோக்குப் பார்வை பற்றி அவர் எடுத்துரைத்தார். உள்கட்டமைப்பு மேம்பாட்டில்  முந்தைய அரசுகளின் தனிமைப்படுத்தப்பட்ட  அணுகுமுறை, பொருள்கள் கொண்டுசெல்லும்  செலவுகளை உயர்த்தியதோடு விநியோகத் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தியது என்று பிரதமர் வருத்தம் தெரிவித்தார். வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பார்வையில் கவனம் செலுத்தும் அதே வேளையில், விநியோகத்  தொடர் மற்றும் பொருள்கள் போக்குவரத்து பலவகை  இணைப்பைச் சார்ந்திருப்பதால், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான புதிய அணுகுமுறையை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இன்றைய திட்டங்களிலிருந்து வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பார்வைக்கு உதாரணம் அளித்த பிரதமர், உத்தேச பொருளாதார வழித்தட திட்டத்தில் 6 வழிச் சாலைகள், துறைமுக இணைப்புக்கான தனிச்  சாலை, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல் மற்றும் மாநிலத்தின் நவீன மீன்பிடி துறைமுகம். கட்டுமானம் ஆகியவற்றைப் பட்டியலிட்டார். தேசியப் பெரும் திட்டமான  பிரதமரின் விரைவு சக்திக்கு வளர்ச்சியின் இந்த ஒருங்கிணைந்த பார்வை இருப்பதைப் பிரதமர் பாராட்டினார். மேலும் இது உள்கட்டமைப்பின் கட்டுமான வேகத்தை விரைவுபடுத்தியது மட்டுமின்றி  திட்டங்களின் செலவையும் குறைத்துள்ளது என்று குறிப்பிட்டார். "பல மாதிரியிலான போக்குவரத்து அமைப்பு ஒவ்வொரு நகரத்தின் எதிர்காலமாகும். விசாகப்பட்டினம் இந்த திசையில் ஒரு படி முன்னெடுத்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார். ஆந்திரப் பிரதேசமும் அதன் கடலோரப் பகுதிகளும் இந்த வளர்ச்சிப் போட்டியில் புதிய வேகத்துடனும் ஆற்றலுடனும் முன்னேறும் என்று அவர் கூறினார்.

தெளிவான இலக்குகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஆந்திரப் பிரதேசத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஆழ் கடல் ஆற்றல்  பிரித்தெடுக்கப்படுவதை உதாரணமாகக் கூறினார். நீலப் பொருளாதாரத்தில் அரசின் கவனத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "நீல பொருளாதாரம் முதல் முறையாக ஒரு பெரிய முன்னுரிமையாக மாறியுள்ளது," என்று அவர் கூறினார். மீனவர்களுக்கான விவசாயக் கடன் அட்டை, இன்று தொடங்கப்பட்ட விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுக நவீனமயமாக்குதல் போன்ற நடவடிக்கைகள் பற்றி அவர் குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின்  செழிப்புக்கான ஆதாரமாகக் கடல் உள்ளது என்றும், நமது கடற்கரைகள் இந்த செழுமைக்கான நுழைவாயிலாக செயல்பட்டதாகவும் பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டில் துறைமுகத்தை முதன்மைப்படுத்தி மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்றைக்குப் பிறகு மேலும் விரிவாக்கம் பெறும் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

“21ஆம் நூற்றாண்டின் இந்தியா, வளர்ச்சியின் முழுமையான சிந்தனையை செயலுக்குக்  கொண்டுவருகிறது” என்று கூறி உரையை நிறைவு செய்த பிரதமர்,  நாட்டின் வளர்ச்சி இயக்கத்தில் ஆந்திரப் பிரதேசம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. ஒய்.எஸ்.ஆர். ஜெகன் ரெட்டி, ஆந்திரப் பிரதேச  ஆளுநர் திரு பிஸ்வ பூஷன் ஹரிசந்தன், மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை சுமார் 450 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிலையம்  நாளொன்றுக்கு  75,000 பயணிகளுக்கு சேவை செய்யும் மற்றும் நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்.

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்கவும் மேம்படுத்துவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். திட்டத்தின் மொத்தச் செலவு  ரூ. 150 கோடி.  மீன்பிடித் துறைமுகம், மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட பின்,  அதன் கையாளும் திறன் நாளொன்றுக்கு  150 டன்களில் இருந்து சுமார் 300 டன்களாக இரட்டிப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...