முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் திட்ட வாரியான விநியோக விவரங்கள்: 2021-22

சென்னை மற்றும்  திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு வருடத்தின் தேவைக்கு மேலான உணவு தானிய கையிருப்பு வைத்திருக்கின்றோம் - இந்திய உணவுக் கழகம் - சென்னை மண்டல அலுவலகம், தகவல்

இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- இந்திய உணவுக் கழகம், உணவுக் கொள்கையின் பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உணவுக் கழகச் சட்டம் 1964ன் கீழ் உருவாக்கப்பட்டது:

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பயனுள்ள விலை நிர்ணயித்தல்

பொது விநியோக முறைக்காக உணவு தானியங்களை நாடு முழுவதும் விநியோகித்தல்.

தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு தானியங்களின் செயல்பாடு மற்றும் தேவைக்கான இருப்புகளின் திருப்திகரமான அளவைப் பராமரித்தல்.


இந்தியாவை நெருக்கடி மேலாண்மை சார்ந்த உணவுப் பாதுகாப்பிலிருந்து ஒரு நிலையான பாதுகாப்பு அமைப்பாக மாற்றுவதில், FCI தொடக்கத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.

FCIயின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 LMT சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் ஆவடி மற்றும் எழும்பூரில் உள்ளன. மேலும், எலாவூரில் 0.25 LMT சேமிப்பு திறன் கொண்ட சைலோ உள்ளது.

இக்கிடங்குகள் முலம், சென்னை / திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு வருடத்தின் தேவைக்கு மேலான உணவு தானிய கையிருப்பு வைத்திருக்கின்றோம் அரிசி/கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது. எனவே, பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா/ தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி/கோதுமை ரயில்/சாலை வழியாக பெறப்படுகிறது.

ஒரு வருடத்தில், தோராயமாக இப்பிரிவின் மூலம் 80 முதல் 100 ரேக்குகள், 2.5 LMT அளவுக்கு கையாளப்படுகிறது.

சென்னை பிரிவு, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திற்கு, 1.9 LMT அரிசி மற்றும் 0.17 LMT கோதுமையை இலவசமாக வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை/திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 24 லட்சம் மக்கள் பிரதி மாதம் பயன் பெறுகின்றனர்.


2021-22ல் செறிவூட்டப்பட்ட அரிசி (FRK) விநியோகம் தொடங்கப்பட்டது. இந்த அரிசியில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் ஆகிய நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை சமாளிக்க பெரிதும் உதவும் என தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் [NIN] தெரிவித்துள்ளது. இதன்படி, MDM மற்றும் WBNP [ICDS] திட்டத்தின் கீழ் 8883 MT செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டுள்ளது.

திட்ட வாரியான விநியோக விவரங்கள்: 2021-22

2021-22

Total Issued (in MTs)

Scheme

2021-2022

2022 (Till date)

NFSA

43930

21887

PMGKAY

127496

95711

MDM

2683

3284

WBNP

8154

3184

Defence

840

120

Total

183103

124186

மொத்தம் வழங்கப்பட்டது (MT)

FCI உணவு தானிய சேமிப்பு கிடங்குகளில் அனைத்து செயல்பாடுகளை மேம்படுத்த டிப்போ ஆன்லைன் சிஸ்டம்[DOS] செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மைக்காக நிகழ் நேரத் தரவைப் DOS பிடிக்கிறது.

தொலைதூர இடத்திலிருந்து கிடங்குகளை கண்காணிக்க, சி சி டி வி [CCTV] கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. FCI கிடங்குகளில் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து குடோன்களிலும் சிசிடிவி நேரலை செயல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கிடங்குகளும், கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை (WDRA)ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. FCI இல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி/கோதுமையின் தரம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. உணவு தானியங்கள், FSSAI விவரக்குறிப்பை பின்பற்றி பொது விநியோகத்திற்கு TNCSC வாயிலாக வழங்கப்படுகிறது என இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த