முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் திட்ட வாரியான விநியோக விவரங்கள்: 2021-22

சென்னை மற்றும்  திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு வருடத்தின் தேவைக்கு மேலான உணவு தானிய கையிருப்பு வைத்திருக்கின்றோம் - இந்திய உணவுக் கழகம் - சென்னை மண்டல அலுவலகம், தகவல்

இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- இந்திய உணவுக் கழகம், உணவுக் கொள்கையின் பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உணவுக் கழகச் சட்டம் 1964ன் கீழ் உருவாக்கப்பட்டது:

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான பயனுள்ள விலை நிர்ணயித்தல்

பொது விநியோக முறைக்காக உணவு தானியங்களை நாடு முழுவதும் விநியோகித்தல்.

தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு தானியங்களின் செயல்பாடு மற்றும் தேவைக்கான இருப்புகளின் திருப்திகரமான அளவைப் பராமரித்தல்.


இந்தியாவை நெருக்கடி மேலாண்மை சார்ந்த உணவுப் பாதுகாப்பிலிருந்து ஒரு நிலையான பாதுகாப்பு அமைப்பாக மாற்றுவதில், FCI தொடக்கத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது.

FCIயின் சென்னைப் பிரிவின் கீழ், 1.9 LMT சேமிப்பு திறன் கொண்ட உணவு தானிய சேமிப்பு கிடங்குகள் ஆவடி மற்றும் எழும்பூரில் உள்ளன. மேலும், எலாவூரில் 0.25 LMT சேமிப்பு திறன் கொண்ட சைலோ உள்ளது.

இக்கிடங்குகள் முலம், சென்னை / திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு வருடத்தின் தேவைக்கு மேலான உணவு தானிய கையிருப்பு வைத்திருக்கின்றோம் அரிசி/கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது. எனவே, பற்றாக்குறையை சமாளிக்க, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா/ தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி/கோதுமை ரயில்/சாலை வழியாக பெறப்படுகிறது.

ஒரு வருடத்தில், தோராயமாக இப்பிரிவின் மூலம் 80 முதல் 100 ரேக்குகள், 2.5 LMT அளவுக்கு கையாளப்படுகிறது.

சென்னை பிரிவு, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திற்கு, 1.9 LMT அரிசி மற்றும் 0.17 LMT கோதுமையை இலவசமாக வழங்கியது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை/திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 24 லட்சம் மக்கள் பிரதி மாதம் பயன் பெறுகின்றனர்.


2021-22ல் செறிவூட்டப்பட்ட அரிசி (FRK) விநியோகம் தொடங்கப்பட்டது. இந்த அரிசியில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் ஆகிய நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை சமாளிக்க பெரிதும் உதவும் என தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் [NIN] தெரிவித்துள்ளது. இதன்படி, MDM மற்றும் WBNP [ICDS] திட்டத்தின் கீழ் 8883 MT செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டுள்ளது.

திட்ட வாரியான விநியோக விவரங்கள்: 2021-22

2021-22

Total Issued (in MTs)

Scheme

2021-2022

2022 (Till date)

NFSA

43930

21887

PMGKAY

127496

95711

MDM

2683

3284

WBNP

8154

3184

Defence

840

120

Total

183103

124186

மொத்தம் வழங்கப்பட்டது (MT)

FCI உணவு தானிய சேமிப்பு கிடங்குகளில் அனைத்து செயல்பாடுகளை மேம்படுத்த டிப்போ ஆன்லைன் சிஸ்டம்[DOS] செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மைக்காக நிகழ் நேரத் தரவைப் DOS பிடிக்கிறது.

தொலைதூர இடத்திலிருந்து கிடங்குகளை கண்காணிக்க, சி சி டி வி [CCTV] கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. FCI கிடங்குகளில் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து குடோன்களிலும் சிசிடிவி நேரலை செயல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கிடங்குகளும், கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை (WDRA)ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. FCI இல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி/கோதுமையின் தரம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. உணவு தானியங்கள், FSSAI விவரக்குறிப்பை பின்பற்றி பொது விநியோகத்திற்கு TNCSC வாயிலாக வழங்கப்படுகிறது என இந்திய உணவுக் கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...