முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிஓபி 27-ல் தேசிய அறிக்கையை இந்தியா வெளியிட்டது

சிஓபி 27-ல் தேசிய அறிக்கையை இந்தியா வெளியிட்டது

சிஓபி 27-ல் இந்தியாவின் தேசிய அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று வெளியிட்டார்.

மேன்மை தாங்கியவர்களே,

நமது விருந்தினர்களுக்கும், சிஓபி-27-ன் தலைமைக்கும், பெருமுயற்சிகள் மற்றும் கனிவான விருந்தோம்பலை அளித்துள்ள எகிப்து அராப் குடியரசுக்கும், முதற்கண் எங்களின் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓராண்டுக்கு முன்  கிளாஸ்கோவில் அறிவியலின் அறைகூவலை ஏற்று முக்கியமான உறுதிமொழிகளை ஏற்க முன்வந்தோம்.

இந்த ஆண்டு, ஷார்ம்-எல்-ஷேக்கில் நமது செயல்பாட்டுத் தருணமாக உள்ளது.  இதனை அமலாக்கத்தின் சிஓபி என எகிப்து தலைமை மிகச் சரியாகவே வடிவமைத்துள்ளது.

மேன்மை தாங்கியவர்களே,

எங்களின் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி, 2070-க்குள் ஒட்டுமொத்தமாக கரியமில வாயு வெளியேற்றத்தை தடுப்பது இந்தியாவின் நோக்கம் என்று கிளாஸ்கோவில் அறிவித்தார். ஓராண்டுக்குள் குறைந்த அளவு கரியமில வாயு வெளியேற்றத்திற்கான நீண்டகால உத்தியை இந்தியா சமர்ப்பித்திருப்பது, முக்கியமான பொருளாதார துறைகளில், குறைந்த அளவு கரியமில வாயு வெளியேற்றத்திற்கான  பணிகளை கண்டிருப்பதைக் குறிக்கிறது.

2030 பருவநிலை இலக்குகளின் அதிகரிக்கப்பட்ட லட்சியத்திற்கான அழைப்புக்கு மதிப்பளித்து இந்தியா 2022 ஆகஸ்டில் தேசிய தீர்மானகரமான பங்களிப்பை காலத்திற்கேற்ப மாற்றியுள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி,  மின்சார போக்குவரத்து, எத்தனால் கலந்த எரிபொருள்கள், பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய மாற்று எரிசக்தி முன்முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

இந்தியாவால் தொடங்கப்பட்டு பேணப்பட்டு வருகின்ற சர்வதேச சூரிய எரிசக்திக் கூட்டணி, பேரிடரை தாங்கவல்ல அடிப்படைக் கட்டமைப்பு கூட்டணி போன்றவற்றின் செயல்பாடு மற்றும் தீர்வுகள் அடிப்படையிலான ஒருங்கிணைப்புகள் மூலம் வலுவான சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்க நாங்கள் கோருகிறோம். உலகளாவிய நன்மைக்கு கூட்டுச் செயல்பாடு என்ற எங்களின் நெறிமுறைக்கு இது சான்றாக உள்ளது.

1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின், ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றம் உலக பங்கில்  4 சதவீதத்திற்கும் குறைவாகும். இதில் வருடாந்தர தனிநபர் பங்கு உலகளாவிய சராசரியில், மூன்றில் ஒரு பங்காகும். இருப்பினும் இது தொடர்பான கடினமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

பாதுகாப்பான புவிக்கோளம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் மையப் பகுதியாக லைஃப்ஸ்டைல் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை)  என்ற  ஒரு சொல் மந்திரம் உள்ளது. இதனை சிஓபி-26-ன் எங்களது தேசிய அறிக்கையில், பிரதமர் மோடி முன்வைத்தார்.

இந்த லைஃப் இயக்கம், 2022 அக்டோபர் 20 அன்று ஐநா தலைமைச் செயலாளர் மேன்மை தாங்கிய ஆன்டனியோ குட்ரஸ் முன்னிலையில்,  பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. சிந்தனையற்ற அழிவுக்குரிய நுகர்வு என்பதிலிருந்து சிந்தனை மிகுந்த தீர்மானகரமான பயன்பாடு என்ற மாற்றத்தை ஏற்படுத்துவது உலகிற்கு உடனடித் தேவையாகும். நாம் இந்தப் புவிக்கோளின் காவலர்கள். ஆதார வளங்களை அதிகபட்சம் பயன்படுத்தி, கழிவுகளைக் குறைக்கின்ற நீடித்த வாழ்க்கை முறை மூலம் இதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

உலகின் மிகுந்த செல்வாக்கு மிக்க ஜனநாயகம் மற்றும் வளர்ந்து வரும் துடிப்புமிக்க பொருளாதாரம் என்ற முறையில், உதாரணமாக இருந்து தலைமை ஏற்க விரும்பும் இந்தியா, தனிநபர், குடும்பம் சமூக அடிப்படையிலான செயல்பாடுகளுக்கு லைஃப் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு உலக சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறது.

மேன்மை தாங்கியவர்களே,

ஒரே பூமி, ஒரே குடும்பம் , ஒரே எதிர்காலம் என்ற குறிக்கோளுடன்  2023-க்கான ஜி-20 அமைப்பின் தலைமைத்துவத்தை  இந்தியா ஏற்றுள்ளது. மனிதகுலத்திற்கு பாதுகாப்பான புவிக்கோளை நோக்கிய நமது பயணம் எந்தவொரு நாடும் தனியாக செயல்படமுடியாது என்பதைக் காட்டுகிறது. சமத்துவம் மற்றும் பருவநிலை நீதியை நமது வழிகாட்டும் கோட்பாடுகளாகக் கொண்டு இந்தக் கூட்டுப்பயணம் இருக்கட்டும்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம்  இந்த உலகத்தை ஒரே குடும்பம் என்பதாக ஒன்றுபடுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...