முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2-வது இந்திய சர்வதேச திரைப்படவிழா: ஒரு பார்வை

2-வது இந்திய சர்வதேச திரைப்படவிழா: ஒரு பார்வை

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்க இன்னும் ஆறு நாட்களே உள்ளன.  இந்த கொண்டாட்டங்கள் புதுப்பொலிவுடன் நமது மனதை வருடும் இந்த சூழலில், இந்த திரைப்பட விழாவின் வரலாற்றுப் பக்கங்களில் நாம் சிறிது பயணித்து அதன் தொடக்கத்தை நினைவு கூர்வோம். கடந்த காலத்தின் வேர்களுடன் இணைந்திருப்பதன் மூலம் நிகழ்காலத்தை பற்றிய புரிதலும், எதிர்காலத்திற்கான பார்வையும் ஊக்குவிக்கப்படுகிறது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது இந்திய சர்வதேச  திரைப்பட விழாவுக்கும், 1961-ம் ஆண்டு நடைபெற்ற 2-வது இந்திய  திரைப்பட விழாவுக்கும் இடையேயான இடைவெளி  குறித்து நாம் பின்னோக்கி பார்ப்போம். ஆம், முதலாவது திரைப்பட விழா நடந்த பின்னர், 9 ஆண்டுகள் பிறகே இரண்டாவது விழா புதுதில்லியில் 1961-ம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி முதல் 2-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா என்ற நிகழ்ச்சி ஏன்?  இந்த திரைப்பட விழாவின் நோக்கம் தொடர்பாக 1961-ம் ஆண்டு 2-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அப்போதைய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பி வி கேஷ்கர் கூறிய கருத்துக்கள்:-

“சர்வதேச திரைப்பட விழாக்களின் நோக்கம் என்பது இதில் பங்கேற்கும் நாடுகளின் கலை மற்றும் கலாச்சார மதிப்புகள் மற்றும் உயர் தொழில்நுட்ப தரம் கொண்ட திரைப்படங்களை திரையிட ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதே. இத்தகைய திரையிடல்கள் பொதுவாக திரைப்படத்துறையின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு  கலாச்சார பரிவர்த்தனையை ஊக்குவித்து புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. பங்கேற்கும் நாடுகள் மற்றும் அந்த நாடுகளின் திரைத்துறையை இவை நெருக்கமாக்குகின்றன.”

2-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கவுரை ஆற்றிய  அப்போதைய குடியரசு துணைத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடுகளுக்கிடையேயான சிந்தனை பரிமாற்றத்தின் முக்கியத்துவம் குறித்தும், கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அதிக லாப நோக்கத்தை காட்டிலும், சிறந்த கலைத்திறனை மையமாக கொண்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் செயல்பட வேண்டும் என்று அப்போதைய குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தினார்.  திரைப்படங்கள் பொது மக்களின் ரசனையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் அவர்களது ரசனையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

திரைப்பட உருவாக்கத்தில் தொடர்புள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட அனைவருமே தங்களது அறிவு, திறமை, கற்பனைத்திறன், கலைத்திறன் ஆகியவற்றை நீதி, சுதந்திரம், அமைதி, கண்ணியம் ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும், வேறு எதற்காகவும் தங்களது திறனை பயன்படுத்த மாட்டோம் எனவும், உறுதியேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். லாபம் ஈட்டும் ஆர்வத்தில் மனித இயல்பை மாசுபடுத்துவதோ, தனிநபர்களை இழிவுபடுத்தவோ கூடாது என்று வலியுறுத்தினார். இதுபோன்ற செயல்கள் அபாயகரமானவை என்றும் இவற்றை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். தரமான திரைப்படங்களின் மூலம் லாபம் பெற முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறிய அவர் இதன் மூலம் மற்ற நாடுகளில் நமது திரைப்படங்கள் எந்தவிதமான தரநிலையை எட்டியுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.  இந்த திரைப்பட விழாவின் மூலம் சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவற்றின் மூலம் நாம் பயனடைய முடியும் எனவும் அப்போதைய குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...