முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகாடமி விருதுக்கு போட்டியிடும் பர்த்டே பாய் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

அகாடமி விருதுக்கு போட்டியிடும் பர்த்டே பாய் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

ஒருவரது பிறந்தநாளில் மெழுகுவர்த்திகள், கேக், வெளிச்சம் மற்றும் நண்பர்கள் என இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஜிம்மி தனது 45வது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கடற்கரை இல்லத்தில் கொண்டாடுகிறார். கேக் வெட்டிய பிறகு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது.


ஆர்டுரோ மாண்டினீக்ரோ இயக்கிய பர்த்டே பாய் (கம்ப்ளேனெரோ) (2022) பனாமியன் த்ரில்லர் திரைப்படமாகும். கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போது ‘டேபிள் டோக்ஸ்’ நிகழ்ச்சியில் தனது திரைப்படத்தைப் பற்றிப் பேசிய , ஆர்டுரோ மாண்டினீக்ரோ, உலகில்  தற்கொலைகள் அதிகரித்து வருவது பற்றிக் குறிப்பிட்டார். “பர்த்டே பாய் நட்பைப் பற்றி பேசும் படம்” என்று அவர் கூறினார்.

படத்தின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான ஆண்ட்ரி ஜே பேரியண்டோஸும் டேபிள் டாக்ஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். “படத்தின் கருப்பொருள் பற்றிய யோசனை தொற்றுநோய் காலங்களில் உருவானது. நாங்கள் பெரிய அளவில் மரணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கதாநாயகனுக்கு கண்டறியப்பட்ட அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் பற்றி படம் பேசுகிறது. இந்த படத்தின் கருப்பொருள்  முன்னர் தொடப்படாதது" என்று அவர் கூறினார். 

இப்படம் இந்த ஆண்டு அகாடமி விருதுகளுக்கான போட்டியில்  உள்ளது.புகழ்பெற்ற அனிமேட்டர் டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸ்டிக் அனிமேஷன் பற்றி விளக்கம்

"அனிமேஷன் தொடருக்கான திரைக்கதை எழுதுவது புத்தகங்களில் பயன்படுத்தப்படும் திரைக்கதை மொழியிலிருந்து மிகவும் வித்தியாசமானது " என்று டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸ்டிக் கூறினார். 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மாஸ்டர் கிளாஸில் உரையாற்றிய அவர், அனிமேஷன் ஷோ தயாரிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகம் என்று  தெரிவித்தார். 26 நிமிட அனிமேஷன் நிகழ்ச்சிக்கு 7-10 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று அவர் கூறினார்.


வீடியோ கேம்ஸ், விஎஃப்எக்ஸ், அனிமேஷன் துறையில் பரிணாம வளர்ச்சியை விளக்கிய டாக்டர் ஜெஸ்டிக் கூறுகையில், இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பாரம்பரிய தொழில்துறையை மாற்றுகிறது என்றார். 

அனிமேஷன் டிவி தொடரை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.நடிப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரிக்க ஓடிடி தளங்கள் வழிவகுத்தன: நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் முகேஷ் சாப்ரா


இந்தியத் திரைப்படத் துறையில்  நடிகர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை மிகவும் பழைமையானது என்றும்,  நடிகர் மற்றும் இயக்குனருக்கு இடையேயான இணைப்பாக நடிப்பு தேர்வு  இயக்குனர் செயல்படுகிறார் என்றும் இத்துறைக்கான இயக்குநர் முகேஷ் சாப்ரா கூறினார்.  முன்பெல்லாம் இயக்குனர்கள் யார் கிடைக்கிறார்களோ அவர்களை நடிக்க வைத்தனர், ஆனால் இப்போது இந்த செயல்முறை மிகவும் தொழில்முறையாகிவிட்டது என்றார் அவர்.

53வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில்  ‘புதிய இந்திய சினிமாவில் நடிப்பு’ என்ற தலைப்பில் “உரையாடல்” நிகழ்ச்சியில் முகேஷ் சாப்ரா கலந்து கொண்டார்.


இந்தியத் திரையுலகில் நடிகர்கள் தேர்வுத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கு உந்து சக்தியாக விளங்கும் முகேஷ் சாப்ரா, க்ஷிதிஜ் மேத்தா ஆகியோர் இதில் பேசினர். நடிகர்கள் தேர்வு செயல்முறையின் பரிணாமம், இந்தியத் திரைப்படத் துறையில் நடிப்புத் துறையில் ஓடிடி தளங்களின் தாக்கம், ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவற்றில் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் உலகத்தின் தாக்கம் குறித்து பேசிய முகேஷ் சாப்ரா, இவற்றின் அதிகரிப்பு நடிப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்றார்.

 படங்களில் மிகச் சிறிய பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் இப்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் மற்றும் ஷோக்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்பதால், இவற்றுக்கு வரவேற்பு காணப்படுகிறது  என்று அவர்கள் தெரிவித்தனர்.


நடிகர்களுக்கான பயிற்சி பட்டறைகளை நடத்துவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் விவரித்த முகேஷ் சாப்ரா, இந்தப் பட்டறைகள் படத்தில் வாய்ப்புகளையும், புதிய நடிகர்கள் சிரமமின்றி செயல்படவும், அவர்களை பாத்திரத்திற்குத் தயாராகவும் வைக்கும் வகையிலும் நடத்தப்படுகின்றன. அவை நடிகர்களை மேலும் தயார்படுத்துவதற்கும் சீர்ப்படுத்துவதற்கும் உதவுகின்றன. பட்டறைகளை நடத்துவது பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட க்ஷிதிஜ் மேத்தா, இந்த செயல்முறையின் மூலம் செல்லாமல் யாராவது வெற்றியை அடைந்தால், அவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர மாட்டார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்தால் வித்தியாசத்தை உணருவார்கள் என்று கூறினார். இது நீண்ட காலத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...