முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அகாடமி விருதுக்கு போட்டியிடும் பர்த்டே பாய் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

அகாடமி விருதுக்கு போட்டியிடும் பர்த்டே பாய் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

ஒருவரது பிறந்தநாளில் மெழுகுவர்த்திகள், கேக், வெளிச்சம் மற்றும் நண்பர்கள் என இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஜிம்மி தனது 45வது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கடற்கரை இல்லத்தில் கொண்டாடுகிறார். கேக் வெட்டிய பிறகு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியதும் நிலைமை தலைகீழாக மாறுகிறது.


ஆர்டுரோ மாண்டினீக்ரோ இயக்கிய பர்த்டே பாய் (கம்ப்ளேனெரோ) (2022) பனாமியன் த்ரில்லர் திரைப்படமாகும். கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போது ‘டேபிள் டோக்ஸ்’ நிகழ்ச்சியில் தனது திரைப்படத்தைப் பற்றிப் பேசிய , ஆர்டுரோ மாண்டினீக்ரோ, உலகில்  தற்கொலைகள் அதிகரித்து வருவது பற்றிக் குறிப்பிட்டார். “பர்த்டே பாய் நட்பைப் பற்றி பேசும் படம்” என்று அவர் கூறினார்.

படத்தின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான ஆண்ட்ரி ஜே பேரியண்டோஸும் டேபிள் டாக்ஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். “படத்தின் கருப்பொருள் பற்றிய யோசனை தொற்றுநோய் காலங்களில் உருவானது. நாங்கள் பெரிய அளவில் மரணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கதாநாயகனுக்கு கண்டறியப்பட்ட அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் பற்றி படம் பேசுகிறது. இந்த படத்தின் கருப்பொருள்  முன்னர் தொடப்படாதது" என்று அவர் கூறினார். 

இப்படம் இந்த ஆண்டு அகாடமி விருதுகளுக்கான போட்டியில்  உள்ளது.புகழ்பெற்ற அனிமேட்டர் டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸ்டிக் அனிமேஷன் பற்றி விளக்கம்

"அனிமேஷன் தொடருக்கான திரைக்கதை எழுதுவது புத்தகங்களில் பயன்படுத்தப்படும் திரைக்கதை மொழியிலிருந்து மிகவும் வித்தியாசமானது " என்று டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸ்டிக் கூறினார். 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மாஸ்டர் கிளாஸில் உரையாற்றிய அவர், அனிமேஷன் ஷோ தயாரிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகம் என்று  தெரிவித்தார். 26 நிமிட அனிமேஷன் நிகழ்ச்சிக்கு 7-10 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று அவர் கூறினார்.


வீடியோ கேம்ஸ், விஎஃப்எக்ஸ், அனிமேஷன் துறையில் பரிணாம வளர்ச்சியை விளக்கிய டாக்டர் ஜெஸ்டிக் கூறுகையில், இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பாரம்பரிய தொழில்துறையை மாற்றுகிறது என்றார். 

அனிமேஷன் டிவி தொடரை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.நடிப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரிக்க ஓடிடி தளங்கள் வழிவகுத்தன: நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் முகேஷ் சாப்ரா


இந்தியத் திரைப்படத் துறையில்  நடிகர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை மிகவும் பழைமையானது என்றும்,  நடிகர் மற்றும் இயக்குனருக்கு இடையேயான இணைப்பாக நடிப்பு தேர்வு  இயக்குனர் செயல்படுகிறார் என்றும் இத்துறைக்கான இயக்குநர் முகேஷ் சாப்ரா கூறினார்.  முன்பெல்லாம் இயக்குனர்கள் யார் கிடைக்கிறார்களோ அவர்களை நடிக்க வைத்தனர், ஆனால் இப்போது இந்த செயல்முறை மிகவும் தொழில்முறையாகிவிட்டது என்றார் அவர்.

53வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில்  ‘புதிய இந்திய சினிமாவில் நடிப்பு’ என்ற தலைப்பில் “உரையாடல்” நிகழ்ச்சியில் முகேஷ் சாப்ரா கலந்து கொண்டார்.


இந்தியத் திரையுலகில் நடிகர்கள் தேர்வுத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கு உந்து சக்தியாக விளங்கும் முகேஷ் சாப்ரா, க்ஷிதிஜ் மேத்தா ஆகியோர் இதில் பேசினர். நடிகர்கள் தேர்வு செயல்முறையின் பரிணாமம், இந்தியத் திரைப்படத் துறையில் நடிப்புத் துறையில் ஓடிடி தளங்களின் தாக்கம், ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவற்றில் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் உலகத்தின் தாக்கம் குறித்து பேசிய முகேஷ் சாப்ரா, இவற்றின் அதிகரிப்பு நடிப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்றார்.

 படங்களில் மிகச் சிறிய பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் இப்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் மற்றும் ஷோக்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்பதால், இவற்றுக்கு வரவேற்பு காணப்படுகிறது  என்று அவர்கள் தெரிவித்தனர்.


நடிகர்களுக்கான பயிற்சி பட்டறைகளை நடத்துவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் விவரித்த முகேஷ் சாப்ரா, இந்தப் பட்டறைகள் படத்தில் வாய்ப்புகளையும், புதிய நடிகர்கள் சிரமமின்றி செயல்படவும், அவர்களை பாத்திரத்திற்குத் தயாராகவும் வைக்கும் வகையிலும் நடத்தப்படுகின்றன. அவை நடிகர்களை மேலும் தயார்படுத்துவதற்கும் சீர்ப்படுத்துவதற்கும் உதவுகின்றன. பட்டறைகளை நடத்துவது பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட க்ஷிதிஜ் மேத்தா, இந்த செயல்முறையின் மூலம் செல்லாமல் யாராவது வெற்றியை அடைந்தால், அவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர மாட்டார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்தால் வித்தியாசத்தை உணருவார்கள் என்று கூறினார். இது நீண்ட காலத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்