முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூட்டுக்கு பிரதமர் வாழ்த்து

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூட்டுக்கு பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் செய்தியில் ;

“இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் டி ஒய் சந்திரசூடுக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் பதவிக்காலம் அவருக்கு இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.”உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுள்ள நிலையில் அவர் வழங்கிய குறிப்பிடட தீர்ப்புகளைக் காண்போம் 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியேற்ற நீதிபதி யு.யு.லலித்தின் பதவிகாலம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து இன்று காலை உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுள்ளார் வழக்கறிஞராகப்பணியைத் தொடங்கி, பேராசிரியராகவும், இந்திய அரசின் சொலிஸிட்டர் ஜெனரலாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,


அலஹாபாத் உயர்நீதிமன்ற்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த பின் 2016 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் ஏற்றார்.அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக  ஆறண்டுகளாக இருந்து வரும் சந்திரசூட் 1057 அமர்வுகளில் சக நீதிபதிகளுடன் 513 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் 94 சேவை வழக்குகளிலும் 89 குற்ற வழக்குகளிலும் சந்திரசூட் தீர்ப்பளித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளில் 45 ம், சிவில் வழக்குகளில் 56 ம், நுகர்வோர் வழக்குகளில் 37 தீர்ப்புகளையும்  வழங்கியுள்ளார்

கேரளத்தின் மருத்துவ மாணவி ஹாதியா, இஸ்லாமிய மதத்துக்கு மாறி ஷபீன் ஜஹானை திருமணம் செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட், 'யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதையும், எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் முடிவெடுக்கும் உரிமை வயது வந்த பெண்ணுக்குள்ளது.' என்று திருமணம் செல்லும் எனத் தீர்ப்பளித்தார். மேலும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், '10 முதல் 50 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். தீண்டாமைக்குத் தடை விதித்திருக்கும் சட்டத்தையும் இது மீறுகிறது. பெண்களின் சுய உரிமை, சுதந்திரம், மற்றும் கண்ணியத்தை இது சீர்குலைக்கிறது.' என விமர்சித்தார். டெல்லி அரசில் துணை நிலை ஆளுநரின் தலையீடு தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், 'ஆளுநர் டெல்லியின் நிர்வாகத் தலைவர் கிடையாது.

ஜனநாயகம் என்பதே நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத அம்சம். எனவே நிர்வாகத்தை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவே வழிநடத்த வேண்டும். முதலமைச்சரின் உத்தரவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அவருக்கென ஜனநாயகத்தில் சுதந்திரமான அதிகாரமில்லை.' என்று தீர்ப்பளித்தார்.    

 மேலும்  உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்று இருக்கும் நிலையில் அவர் வழங்கிய குறிப்பிடத்தக்க தீர்ப்புகளாக 

 377 வது சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த அமர்வில் இடம்பெற்ற சந்திரசூட், இதை எதேச்சதிகராம் கொண்ட காலணியாதிக்க சட்டம் என்று விமர்சித்தார். இந்த சட்டம் சம உரிமை, கருத்து சுதந்திரம், வாழ்க்கை மற்றும் தனியுரிமைக்கு எதிராக உள்ளது என்று கூறி LGBTQ சமூகத்தினருக்கு அரசியலமைப்பு உரிமையுள்ளதாகக் கூறினார். மேலும்

நீதிபதி லோயா வழக்கில்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான சொராபுத்தீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தெஹ்சீன் பூணாவாலா தொடர்ந்த வழக்கை விசாரித்த சந்திரசூட், அதனைத் தள்ளுபடி செய்தார். என்பது குறிப்பிடத்தக்க தீர்ப்புகளாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த