முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏழாவது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

ஏழாவது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்


உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் இன்று (நவம்பர் 1, 2022) 7வது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி


வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், "நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. இந்திய நாகரிகத்தில் தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பிந்தைய பயணத்திலும் முக்கியமானதாக உள்ளது. அதனால்தான் அனைத்து நீர் ஆதாரங்களும் புனிதமாக கருதப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகையால், நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது. கிராமங்களில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன. பல உள்ளூர் ஆறுகள் அழிந்து வருகின்றன. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளால் தண்ணீர் அதிகமாக சுரண்டப்படுகிறது. பூமியில் சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைந்து, வானிலை மாற்றம் ஏற்படுவதுடன் பருவம் தவறி அதிகப்படியான மழைப்பொழிவு பொதுவாக அதிகரித்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், நீர் மேலாண்மை குறித்து விவாதிப்பது மிகவும் பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்." என்றார்.

தண்ணீர் பிரச்சனை இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகமுழுவதுமே பொதுவான பிரச்சனையாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே, பரந்த அளவிலான நன்னீர் ஆதாரங்கள் பரவியுள்ள நிலையில், இப்பிரச்சனை தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாகவும் அமைகிறது என்று அவர் கூறினார். எனவே இந்த ஒருங்கிணைந்த நீர்வளம் குறித்த பிரச்சனைகளில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமானது என்று அவர் தெரிவித்தார். 7-வது இந்திய நீர்வார விழாவில், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டமைப்பில் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாறிகொள்ளப்படும்போது,அனைவரும் அதனால் பயனடைவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேளாண்மைக்கு நீர் முக்கிய ஆதரமாக திகழ்கிறது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். ஒரு மதீப்பிட்டின் அடிப்படையில் அந்நாட்டில் உள்ள மொத்த நீர்வளத்தில் 80 சதவீதம் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளதாகவம் அவர் கூறினார். எனவே, நீர் சேமிப்புக்கு பாசன முறைகளில் நீரின் சரியான பயன்பாடு மற்றும்  முறையான நீர் மேலாண்மை ஆகியவை மிக முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார். இப்பிரிவில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டம் (பிரதம மந்திரி க்ரிஷி சின்ச்சாய் யோஜனா) திட்டம் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார். தேசிய அளவிலான இந்த திட்டம் நாட்டின் பாசனப் பரப்பை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.  நீர் சேமிப்பு இலக்குகளுக்கு ஏற்ப, “ஒரு துளியில் அதிக பயிர்” என்ற அம்சத்தை உறுதி செய்ய துல்லியமான நீர்ப்பாசனம் மற்றும் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை இத்திட்டம் ஏற்று அதன்படி செயல்பாடுகளை கொண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தூய குடிநீரை விநியோகிப்பது வருங்காலங்களில் பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் கூறினார். நீர்ப்பிரச்சனை என்பது பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான அம்சமாக உள்ளது என்று கூறி்ய அவர், இதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் முயற்சிகள் அவசியம் என்றார். தண்ணீர் என்பது குறிப்பிட்ட வரம்புக்குள் உட்பட்டது என்பதை அனைவரும் உணர்ந்து முறையாக அவற்றை பயன்படுத்துவது மற்றும் நீர் மறு சுழற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளால்  மட்டுமே  நீர்வளத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். எனவே, இந்த வளத்தை அனைவரும் கவனமாக கையாள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  தண்ணீரின் முறையற்ற பயன்பாடு குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், நீர் சேமிப்பு குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  இந்த 7 வது நீர் வார கொண்டாட்டத்தின் பலன்கள்  இந்த பூமி மற்றும் மனித குலத்தின் நலனுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கையை தெரிவித்தார். பொதுமக்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள் மற்றும் குழந்தைகள் நீர் சேமிப்பை தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இப்படி செயல்படுவதன் மூலம் மட்டுமே இனி வரும் தலைமுறையினருக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நாம் பரிசளிக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...