முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏழாவது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

ஏழாவது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்


உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் இன்று (நவம்பர் 1, 2022) 7வது இந்திய நீர் வாரத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி


வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், "நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. இந்திய நாகரிகத்தில் தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பிந்தைய பயணத்திலும் முக்கியமானதாக உள்ளது. அதனால்தான் அனைத்து நீர் ஆதாரங்களும் புனிதமாக கருதப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகையால், நமது ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நிலை மோசமடைந்து வருகிறது. கிராமங்களில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன. பல உள்ளூர் ஆறுகள் அழிந்து வருகின்றன. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளால் தண்ணீர் அதிகமாக சுரண்டப்படுகிறது. பூமியில் சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைந்து, வானிலை மாற்றம் ஏற்படுவதுடன் பருவம் தவறி அதிகப்படியான மழைப்பொழிவு பொதுவாக அதிகரித்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், நீர் மேலாண்மை குறித்து விவாதிப்பது மிகவும் பாராட்டுக்குரிய நடவடிக்கையாகும்." என்றார்.

தண்ணீர் பிரச்சனை இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், உலகமுழுவதுமே பொதுவான பிரச்சனையாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே, பரந்த அளவிலான நன்னீர் ஆதாரங்கள் பரவியுள்ள நிலையில், இப்பிரச்சனை தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாகவும் அமைகிறது என்று அவர் கூறினார். எனவே இந்த ஒருங்கிணைந்த நீர்வளம் குறித்த பிரச்சனைகளில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமானது என்று அவர் தெரிவித்தார். 7-வது இந்திய நீர்வார விழாவில், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டமைப்பில் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாறிகொள்ளப்படும்போது,அனைவரும் அதனால் பயனடைவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேளாண்மைக்கு நீர் முக்கிய ஆதரமாக திகழ்கிறது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். ஒரு மதீப்பிட்டின் அடிப்படையில் அந்நாட்டில் உள்ள மொத்த நீர்வளத்தில் 80 சதவீதம் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளதாகவம் அவர் கூறினார். எனவே, நீர் சேமிப்புக்கு பாசன முறைகளில் நீரின் சரியான பயன்பாடு மற்றும்  முறையான நீர் மேலாண்மை ஆகியவை மிக முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார். இப்பிரிவில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டம் (பிரதம மந்திரி க்ரிஷி சின்ச்சாய் யோஜனா) திட்டம் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார். தேசிய அளவிலான இந்த திட்டம் நாட்டின் பாசனப் பரப்பை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.  நீர் சேமிப்பு இலக்குகளுக்கு ஏற்ப, “ஒரு துளியில் அதிக பயிர்” என்ற அம்சத்தை உறுதி செய்ய துல்லியமான நீர்ப்பாசனம் மற்றும் நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களை இத்திட்டம் ஏற்று அதன்படி செயல்பாடுகளை கொண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தூய குடிநீரை விநியோகிப்பது வருங்காலங்களில் பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் கூறினார். நீர்ப்பிரச்சனை என்பது பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான அம்சமாக உள்ளது என்று கூறி்ய அவர், இதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் முயற்சிகள் அவசியம் என்றார். தண்ணீர் என்பது குறிப்பிட்ட வரம்புக்குள் உட்பட்டது என்பதை அனைவரும் உணர்ந்து முறையாக அவற்றை பயன்படுத்துவது மற்றும் நீர் மறு சுழற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளால்  மட்டுமே  நீர்வளத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். எனவே, இந்த வளத்தை அனைவரும் கவனமாக கையாள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  தண்ணீரின் முறையற்ற பயன்பாடு குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், நீர் சேமிப்பு குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  இந்த 7 வது நீர் வார கொண்டாட்டத்தின் பலன்கள்  இந்த பூமி மற்றும் மனித குலத்தின் நலனுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கையை தெரிவித்தார். பொதுமக்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள் மற்றும் குழந்தைகள் நீர் சேமிப்பை தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இப்படி செயல்படுவதன் மூலம் மட்டுமே இனி வரும் தலைமுறையினருக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நாம் பரிசளிக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...