முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேற்குவங்காளத்தின் ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் நியமனம்

மணிப்பூர் மாநில  ஆளுநராக இருந்த இல.கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்காள மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார்.


தற்போதுள்ள சூழ்நிலையில்  மேற்கு வங்காளத்துக்கு தனி ஆளுநரை நியமனம் செய்து  குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே   மேற்கு வங்காள மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றிய ஜக்தீப் தன்கர், குடியரசு துணைத்தலைவராக ஆன நிலையில் அவ்விடத்தில்  புதிய ஆளுநர் அறிவிக்கும் வரை கூடுதல் பொறுப்பாக இல.கணேசன் பதவி வகித்த நிலையில் தற்போது சி.வி.ஆனந்த போஸ் மேற்கு வங்காள மாநிலத்துக்கான ஆளுநராக குடியரசுத் தலைவர் மாளிகையால் அறிவிக்கப்பட்டுள்ளார். இல.கணேசன் மேற்கு வங்க பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சி.வி.ஆனந்த போஸ்  முன்னாள் இந்திய ஆட்சிப் பணி  அதிகாரியாகவும், பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் , மாவட்ட ஆட்சித்தலைவர் ல, முதன்மைச் செயலாளர், தலைமைச் செயலாளர், ஆளுநருக்கான சிறப்பு ஆலோசகர் என பல நிர்வாகப் பதவிகளை வகித்தார். மேலும் ஐநா-அவையிலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். சுமார் 40 புத்தகங்கள் எழுதிய ஆசிரியர், 32 விருதுகளையும் பெற்றவர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளார் என இவரது பெயரிலான ட்விட்டர் பக்கம் விவரிக்கிறது.

மேற்கு வங்காளத்தின் முந்தைய ஆளுநர் ஜக்தீப் தன்கருடன் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்கொண்ட சச்சரவுகள் பற்றி முழுமையாக அறிந்த  ,  நிர்வாகத் திறனில் நெடிய அனுபவம் பெற்றவர் ஆனந்த போஸ், ஆட்சியாளர்களுடன் கொள்கை ரீதியாக மோதல் போக்கில்  சர்ச்சைக்கு ஆளாகும் மேற்கு வங்காள ஆளுநர் பொறுப்பை சிறப்பாக  சமாளிப்பாரா  என்பது தான் இனிமேல் தெரியும்கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் மண்ணனம்  கிராமத்தில் பிறந்த ஆனந்த் போஸ்.

 தந்தை வாசுதேவன் நாயர், சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து ஐஎன்ஏ வில் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதன் நினைவாக மகனுக்கு ஆனந்த போஸ் எனப் பெயர்


இராஜஸ்தான் பிட்ஸ்-பிலானி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் போஸ். 1977 ஆம் ஆண்டு பேட்ஜ் கேரளா கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாவர்.

கேரளாவின் கொல்லம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியவர் போஸ்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.கருணாகரன் கேரள முதலமைச்சராக இருந்த போது அவருக்கு முதன்மைச் செயலாளராக இருந்தார் ஆனந்த போஸ். மேலும், வேளாண்மை அமைச்சகத்துக்குக் கூடுதல் செயலாளராகவும் இருந்தார்.

2011-்ம் ஆண்டில் பணி ஓய்வுக்கு முன்பாக, புது டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு இயக்குநராகவும் இருந்தார்.

மேற்குவங்காளத்தின் ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் என்பவரை நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. கடந்த ஜூலை மாதத்தில் மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க கூட்டணி. இதையடுத்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், கூடுதல் பொறுப்பாக மேற்குவங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆனந்த போஸ் மேற்குவங்க ஆளுநராகப் பொறுப்பேற்கிறார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,