முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசமாகச் சிக்கிய ஊழல் பெருச்சாளியான மோட்டார் வாகன ஆய்வாளர் '

வசமாகச் சிக்கிய ஊழல் பெருச்சாளியான மோட்டார் வாகன ஆய்வாளர் 


'கட்டிங், கமிஷன், கலெக்க்ஷன்'  நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சம் மாதம் 60 லட்சம் டார்கெட் போட்டு  வசூல்செய்ய 25 புரோக்கர்கள் வசமாக சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்       (V&AC conducts joint surprise check at the O/o Road Transport Office, Motor Vehicle Inspector, Bhavani, Salem and seized unaccounted money of Rs.2,10,990/- were seized on 10.November.2022.)

ஈரோடு மாவட்ட வாகனப் போக்குவரத்துத் துறையில் கமிஷன் வசூலிக்கும் புரோக்கர்களை வைத்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்த பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு. ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை பகுதியில் இயங்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் சார்ந்த அதாவது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை மாலை மாவட்ட   ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர்  ராஜேஷ் தலைமையிலான காவல்துறை பணியாளர்கள்   அதிரடியாகச் சோதனை  நடத்திய போது, அங்கிருந்து யாரும் வெளியேறாதபடி முன், மற்றும்  பின்புறக் கதவுகள் அடைக்கப்பட்டு, 



அலுவலகத்திலிருந்த மோட்டார் வாகன ஆய்வாளருக்கும், இதர அலுவலர்களுக்கும் பணப்பட்டுவாடா செய்வதற்காக புரோக்கர்கள் காத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில் உட்புகுந்த போது 

லஞ்ச ஒழிப்புத் துறையினர் வந்திருப்பதை அறிந்த புரோக்கர்கள், அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த லஞ்சப் பணத்தை ஜன்னல் வழியாக தூக்கி வீசியதைக் கண்ட. காவல்துறை பணியாளர்கள்  வெளியே வீசிய பணத்தையும், ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ரூபாய் நோட்டுகளையும் சேகரித்த பின்னர், மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, வாகனப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், மற்றும் புரோக்கர்கள் பத்துக்கும் மேற்பட்டோரை சோதனையிட்டதில் கணக்கில் வராத ரூபாய். 2.10 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.




அதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி, புரோக்கர்களாகச் செயல்பட்ட சந்தோஷ், வரதன் என்கிற வரதராஜ், சம்பு என்கிற சண்முகம், நல்லசாமி உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். புதிய வாகனங்களுக்கு எண் அளித்தல், வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனங்கள் புதுப்பித்தல், எஃப்சி வாகனங்களுக்கு சான்றளித்தல், கூண்டு கட்டிய வாகனங்களுக்கு அனுமதியளித்தல், கன்டெய்னர் லாரிகளுக்கு சான்றளித்தல் என பலத்தரப்பட்ட பணிகளுக்கும் அரசு நிர்ணயித்ததை விடப் பல மடங்கு கட்டணத்தை புரோக்கர்கள் மூலமாக மோட்டார் வாகன ஆய்வாளர்  சுகந்தி வசூலித்தது தெரிய வருகிறது. குறிப்பாக எல்எல்ஆர் வழங்க ரூபாய்.1000 முதல் 1500-ம், எஃப்சிக்கு ரூ.1000 முதல் 5000 வரையும், கன்டெய்னர் லாரிகளுக்கு சான்றளிக்க ரூபாய். 10,000 வரை, பாடி கட்டிய வாகனங்களுக்கு ரூபாய்.5,000, புதிய இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய்.2,000 முதல் 5,000 வரை வாகனங்களின் மாடலுக்கு ஏற்றவாறு  லஞ்சமாக வசூலித்துள்ளனர்.

பவானி, அந்தியூர் ஆகிய இரண்டு வட்டங்களிலுள்ள எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், பர்கூர், அம்மாபேட்டை, ஒலகடம் என 100 க்கும் மேற்பட்ட முக்கிய ஊர்களின் வாகனப்பதிவு தொடர்பான பணிகளுக்கு இந்த அலுவலகத்துக்குத்தான் வரவேண்டிய நிலை உள்ளது எனவே, இங்கு தினந்தோறும் அதிக லஞ்சம் வசூலாகும் எனக் கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூபாய் இரண்டு லட்சம் வரையிலும் லஞ்சம் கிடைக்கும் என்பதால் இங்கு பணியாற்ற வருவோரிடம் போட்டி நிலவி ஏலம் எடுத்து வருவது போல  கவனித்தால் தான் இங்கு நியமனம்  கிடைக்குமென்று கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் இங்கு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர்  சுகந்தி, இங்குள்ள 25 க்கும் மேற்பட்ட புரோக்கர்களின் உதவியுடன் லஞ்சம் வாங்கி கல்லா கட்டியது லஞ்ச ஒழிப்புத் துறையினரின்  விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   அனைத்து பதிவுகளையும் ஆன்லைனில் தான் மேற்கொள்ள வேண்டும் என அரசு  அறிவித்தாலும், ஆன்லைனில் பதிவு செய்திருக்கும் நபர்களை புரோக்கர்கள் மூலம் அணுகி அவர்கள் பணியை முடிக்க கூடுத்ல் தொகையை லஞ்சமாகப் பேசி முடிவு செய்கிறார்கள். பணம் இல்லாவிட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது என  கேட்ட தொகையை கொடுப்பவர்களுக்கே பணியில் முன்னுரிமை உண்டாம். இதனால் கடுப்பான சிலர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தந்த நிலையில், திடீர் சோதனை நடத்தி இங்கு நடக்கும் லஞ்ச ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத் துறையினர். சோதனை  குறித்து மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும்  லஞ்ச ஒழிப்புத் துறை  துணைக் கண்காணிப்பாளர்  ராஜேஷ் செய்தியாளர்களின் மத்தியில்  சதெரிவித்ததாவது, ``  வாகனப்பதிவு பணிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஆன்லைனில் கட்டினாலும் அவர்களுக்கு சான்றுகள் வழங்கப்படுவதில்லை. புரோக்கர்கள் மூலம் ரேட் பிக்ஸ் செய்பவர்களுக்கு மட்டுமே பணிகளை செய்து வருவதாகவும், புரோக்கர்களை தவிர்ப்பவர்களுக்கு ஏதாவது காரணம் சொல்லி அவர்களது விண்ணப்பங்களை நிராகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் ரெய்டு நடத்தியதில் ஒரேநாளில் ரூபாய்.2.10 லட்சம் லஞ்சப்பணம் சிக்கியது. தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சந்தோஷ், சுகந்தியின் டிரைவராகவும், சம்பளம் வாங்கி கொண்டு புரோக்கர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் ஏஜென்டாகச்  செயல்பட்டு வந்திருக்கிறார். இதுதவிர வரதன், சண்முகம் ஆகியோரும் முக்கியமான புரோக்கர்களாகச் செயல்பட்டிருக்கின்றனர்.சுமார் 50 கி.மீ. சுற்றுப் பரப்பளவில் வாகனப்பதிவு தொடர்பான பணிகளுக்கு இந்த அலுவலகத்தைத் தான் தேடி வருகின்றனர். பணம் தராதவர்களை இழுத்தடித்தால் அவர்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது என்பதால் கேட்ட தொகையை புரோக்கர்களிடம் கொடுத்து பணியை முடிக்கப் பார்க்கிறார்கள். மாதம் சராசரியாக ரூ.15 லட்சத்துக்கும் மேல் பணம் வசூலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவே, சுகந்தி உள்பட 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் சுகந்தி உள்ளிட்ட ஐந்து பேரின் வீடுகளிலும் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். தற்போது 

மேலும்  மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தியை சஸ்பெண்ட் செய்யுமாறு மண்டல போக்குவரத்துத் துறை  ஆணையருக்கு, ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பரிந்துரைத்துள்ளதன் படி அவர் பணி இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்