முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபல தமிழ் திரைப்பட உரையாடல் எழுத்தாளர் ஆரூர்தாஸ் காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட உரையாடல் எழுத்தாளர்  ஆரூர்தாஸ் காலமானார்.

சில மாதங்களுக்கு முன் திரைத்துறையில் இவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக  கடந்த ஜூன் மாதம் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி்ச் சிறப்பித்தது.

இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழை ஒழுங்காக எழுதவோ, பேசவோ  தெரியவில்லை. என்ற நிலையில் இவர் குறித்து இந்த தலைமுறையினர் அறியவில்லை, ஆரூர் தாஸ் எழுதி கலைஞர் சக்தி கிருஷ்ணசாமி காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி என்று இரட்டைக் குதிரையில் சவாரி செய்தவர்.   கடைசியில் நடிகை லட்சுமி வழக்குறைஞராகக நடித்த படம் இவருடைய வசனம் காரணமாகவே ஓடியது தற்போது  வயது 91.ல் சென்னை - தியாகராய நகரிலுள்ள  இல்லத்தில் நேற்று (நவம்பர் 20) மாலை 6.40 மணி அளவில் அவர் காலமானார். 


1955 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு  வரையில் அவர் வசனங்கள் சிறப்பாக எழுதியுள்ளார் . சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்த படத்திற்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.


பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார் தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91. சென்னை - தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 20) மாலை 6.40 மணி அளவில் அவர் காலமானார். கடந்த ஜூனில் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.

தமிழ்த் திரையுலகின் பேராளுமைமிக்க ஆரூர்தாஸ். தனது 25 வயதில் திரையுலகில்  அடியெடுத்து வைத்தவர், பாசமலருக்கு உரையாடல் எழுதியபோது 27 வயது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல ஜொலித்தார்.


பெரும்பாலும் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்குமாக 500 படங்களுக்கும் மேலாக கதை,திரைக்கதை, வசனம் எழுதியவர்.

"அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவர்களுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நல்ல நல்ல வசனங்களை எழுதியவர்" என்று நடிகர் திலகம் சிவாஜியால் பாராட்டப்பட்டவர்.

தாய் சொல்லைத் தட்டாதே படப்பிடிப்பின் தொடக்கம். கதாநாயகனுக்குத் தந்தையில்லை. கதாநாயகிக்குத் தாயில்லை. வசனம் ஆரூர்தாஸ்.

"எங்க அப்பா இறந்ததிலிருந்து எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்திலேயேயும் பங்கெடுத்துக்கிறது கிடையாது.

பொதுவா கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க.

ஆனா நான் விடிஞ்சதும், எங்க அம்மா முகத்தில் தான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்குது. 

எனக்குத் தாய்தான் தெய்வம். அந்தத் தாய் சொல்லைத் தட்டமாட்டேன் "

இந்த வசனத்தை எம்ஜிஆரிடம் தாஸ் சொன்னதும்- "எந்த நோக்கத்துல  எதுக்காக இந்த இடத்துல இந்த வசனத்தை எழுதி இருக்கீங்க?" என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். 

"ஒரு பிள்ளைக்குத் தன் தாய்கிட்டே இருக்கிற பாசத்தைச் சொல்லி தாய்மையைப் பெருமைப்படுத்துறதுக்கும் தாய் சொல்லைத்  தட்டாதே அப்படிங்கிற படத்தோட பெயரைக்  கதாநாயகன் வாயிலேயே சொல்ல வைக்கிறதுக்காகவும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கிட்டு இப்படி எழுதினேன்" என்கிறார் ஆரூர் தாஸ்.

"நீங்க முற்போக்கு எண்ணம் கொண்டவரா?" என்று கேட்ட எம்ஜிஆரிடம்.

 "ஆமா தெருவுல போற ஒருத்தன், ஒரு கைம்பெண்ணைக் கண்டு ஒதுங்குனா, கண்டிப்பா அவனை அடிக்க நான் தயங்கமாட்டேன். அடிப்பேன்" 

ஆரூர் தாஸ் சொல்லச்  சொல்ல. உணர்ச்சி வசப்பட்ட எம்ஜிஆர், சட்டென்று அவரைப்பிடித்து இழுத்து தன் மார்போடு அணைத்து,  தோளில் தட்டிக் கொடுத்து,

"இந்த வசனம் என்னை வச்சி எனக்காக எழுதுன மாதிரி இருக்கு. அதுக்கு நீங்க சொன்ன விளக்கம் பொருத்தமாகவும் எனக்குப் பொருந்துற மாதிரியும் இருக்கு.

என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா தெரியாதோ ஆனாலும் சொல்கிறேன்.

எனக்குத் தாய்தான் தெய்வம். அதனால்தான் உங்க வசனத்தை கேட்டுக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் 

ஒரு சமூகப் படத்துல இப்படிச் சின்னச் சின்ன சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்ல முடியும். சொல்லணுங்குறதை உங்க எழுத்து எடுத்துக்காட்டுது. 

மிக்க மகிழ்ச்சி. மதியம் என்னுடன் நீங்க சாப்பிடணும் போய்டாதீங்க" என்றாராம். இப்படி பல சுவையான சம்பவங்கள் அவர் வாழ்வில் உண்டு.

1955 முதல் 2014 வரையில் அவர் வசனகர்த்தாவாக இயங்கியுள்ளார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்த படத்திற்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.


திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், சுமார் 1000 திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரினான ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும்

நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்