முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபல தமிழ் திரைப்பட உரையாடல் எழுத்தாளர் ஆரூர்தாஸ் காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட உரையாடல் எழுத்தாளர்  ஆரூர்தாஸ் காலமானார்.

சில மாதங்களுக்கு முன் திரைத்துறையில் இவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக  கடந்த ஜூன் மாதம் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி்ச் சிறப்பித்தது.

இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழை ஒழுங்காக எழுதவோ, பேசவோ  தெரியவில்லை. என்ற நிலையில் இவர் குறித்து இந்த தலைமுறையினர் அறியவில்லை, ஆரூர் தாஸ் எழுதி கலைஞர் சக்தி கிருஷ்ணசாமி காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி என்று இரட்டைக் குதிரையில் சவாரி செய்தவர்.   கடைசியில் நடிகை லட்சுமி வழக்குறைஞராகக நடித்த படம் இவருடைய வசனம் காரணமாகவே ஓடியது தற்போது  வயது 91.ல் சென்னை - தியாகராய நகரிலுள்ள  இல்லத்தில் நேற்று (நவம்பர் 20) மாலை 6.40 மணி அளவில் அவர் காலமானார். 


1955 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு  வரையில் அவர் வசனங்கள் சிறப்பாக எழுதியுள்ளார் . சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்த படத்திற்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.


பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார் தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91. சென்னை - தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 20) மாலை 6.40 மணி அளவில் அவர் காலமானார். கடந்த ஜூனில் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.

தமிழ்த் திரையுலகின் பேராளுமைமிக்க ஆரூர்தாஸ். தனது 25 வயதில் திரையுலகில்  அடியெடுத்து வைத்தவர், பாசமலருக்கு உரையாடல் எழுதியபோது 27 வயது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல ஜொலித்தார்.


பெரும்பாலும் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்குமாக 500 படங்களுக்கும் மேலாக கதை,திரைக்கதை, வசனம் எழுதியவர்.

"அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இவர்களுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நல்ல நல்ல வசனங்களை எழுதியவர்" என்று நடிகர் திலகம் சிவாஜியால் பாராட்டப்பட்டவர்.

தாய் சொல்லைத் தட்டாதே படப்பிடிப்பின் தொடக்கம். கதாநாயகனுக்குத் தந்தையில்லை. கதாநாயகிக்குத் தாயில்லை. வசனம் ஆரூர்தாஸ்.

"எங்க அப்பா இறந்ததிலிருந்து எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்திலேயேயும் பங்கெடுத்துக்கிறது கிடையாது.

பொதுவா கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க.

ஆனா நான் விடிஞ்சதும், எங்க அம்மா முகத்தில் தான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்குது. 

எனக்குத் தாய்தான் தெய்வம். அந்தத் தாய் சொல்லைத் தட்டமாட்டேன் "

இந்த வசனத்தை எம்ஜிஆரிடம் தாஸ் சொன்னதும்- "எந்த நோக்கத்துல  எதுக்காக இந்த இடத்துல இந்த வசனத்தை எழுதி இருக்கீங்க?" என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். 

"ஒரு பிள்ளைக்குத் தன் தாய்கிட்டே இருக்கிற பாசத்தைச் சொல்லி தாய்மையைப் பெருமைப்படுத்துறதுக்கும் தாய் சொல்லைத்  தட்டாதே அப்படிங்கிற படத்தோட பெயரைக்  கதாநாயகன் வாயிலேயே சொல்ல வைக்கிறதுக்காகவும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கிட்டு இப்படி எழுதினேன்" என்கிறார் ஆரூர் தாஸ்.

"நீங்க முற்போக்கு எண்ணம் கொண்டவரா?" என்று கேட்ட எம்ஜிஆரிடம்.

 "ஆமா தெருவுல போற ஒருத்தன், ஒரு கைம்பெண்ணைக் கண்டு ஒதுங்குனா, கண்டிப்பா அவனை அடிக்க நான் தயங்கமாட்டேன். அடிப்பேன்" 

ஆரூர் தாஸ் சொல்லச்  சொல்ல. உணர்ச்சி வசப்பட்ட எம்ஜிஆர், சட்டென்று அவரைப்பிடித்து இழுத்து தன் மார்போடு அணைத்து,  தோளில் தட்டிக் கொடுத்து,

"இந்த வசனம் என்னை வச்சி எனக்காக எழுதுன மாதிரி இருக்கு. அதுக்கு நீங்க சொன்ன விளக்கம் பொருத்தமாகவும் எனக்குப் பொருந்துற மாதிரியும் இருக்கு.

என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா தெரியாதோ ஆனாலும் சொல்கிறேன்.

எனக்குத் தாய்தான் தெய்வம். அதனால்தான் உங்க வசனத்தை கேட்டுக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் 

ஒரு சமூகப் படத்துல இப்படிச் சின்னச் சின்ன சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்ல முடியும். சொல்லணுங்குறதை உங்க எழுத்து எடுத்துக்காட்டுது. 

மிக்க மகிழ்ச்சி. மதியம் என்னுடன் நீங்க சாப்பிடணும் போய்டாதீங்க" என்றாராம். இப்படி பல சுவையான சம்பவங்கள் அவர் வாழ்வில் உண்டு.

1955 முதல் 2014 வரையில் அவர் வசனகர்த்தாவாக இயங்கியுள்ளார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்த படத்திற்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.


திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், சுமார் 1000 திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரினான ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும்

நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...