முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன் மாநாடு நிறைவு

கூட்டு நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை தேர்தல் மேலாண்மை அமைப்புகள் வலுப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே


'தேர்தல் ஒருமைப்பாடு' குறித்த கூட்டு செயல்பாட்டுக்கான நடவடிக்கையாக, 'தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்' குறித்து தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு நிறைவு

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேர்தல் ஒருமைப்பாடு’ குறித்த கூட்டு செயல்பாட்டுக்கான நடவடிக்கையாக, ‘தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச மாநாட்டின் நிறைவு விழாவிற்கு தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே இன்று தலைமை வகித்தார்.

நிறைவு விழாவில் பேசிய தேர்தல் ஆணையர் திரு. அனுப் சந்திர பாண்டே தனது உரையில், தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்றாலும்,  தேர்தல்களை நடத்தும்போது சவால்களை எதிர்கொள்வதிலும் சுதந்திரத்தைப் பேணுவதைப் பொறுத்தும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் செயல்பாட்டுத் திறன் உள்ளது என்றார். ஜனநாயக விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை வலுப்படுத்தவும், கூட்டு நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்து தளங்களையும் மேம்படுத்தவும் வேண்டும் என அனைத்து தேர்தல் மேலாண்மை அமைப்புகளையும் அவர் வலியுறுத்தினார்.

உலக அளவில் தேர்தல் அமைப்புகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் வாக்காளர்களின் அக்கறையின்மை போன்ற வளர்ந்து வரும் சவால்களை எடுத்துரைத்த தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே, இந்த சவால்களை எதிர்கொள்ள பரஸ்பர ஒத்துழைப்பு, தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் அறிவாற்றல் தகவல் பகிர்வு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தினார். வாக்காளர் பட்டியல் மேலாண்மை, வாக்குப்பதிவு மேலாண்மை, தேர்தல் தொழில்நுட்பம், தவறான தகவல்களைக் களைதல், போலிச் செய்திகளை ஒழித்தல், இணையப் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து அம்சங்களிலும் உலகளாவிய தரநிலைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பாக செயல்படும் விதத்தில் மேலும் மேலும் ஜனநாயகங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தேவைப்படும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் திறன் மேம்பாட்டுக்காக கூட்டு நிறுவனங்களின் பங்களிப்புகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


கடந்த இரண்டு நாட்களில், மூன்று அமர்வுகளில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.

'தேர்தல் ஒருமைப்பாடு'' என்ற அம்சத்தை உறுதி செய்வதற்கு தேர்தல் அமைப்புகளின் பங்கு மற்றும் கட்டமைப்பு தொடர்பாக நடைபெற்ற, "தேர்தல் மேலாண்மை அமைப்புகள் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள்" என்ற தலைப்பிலான முதல் அமர்வு மொரீஷியஸின் தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் மெக்சிகோ, சிலி, நேபாளம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் விளக்க உரைகள் இடம்பெற்றன.  சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் நம்பகமான தேர்தலுக்காக, தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் முன்முயற்சிகளைப் பாராட்டி முதல் அமர்வு நிறைவு பெற்றது. ஒருவருக்கொருவர் மேற்கொள்ளும் நல்ல நடைமுறைகளில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ளும் வகையில் இது அமைந்தது.

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் பொதுச்செயலாளர் மற்றும் கிரீஸ்சின் ஹெலனின் குடியரசின் தேர்தல் இயக்குனரகத்தின் தலைவர் ஆகியோர், “எதிர்கால சவால்கள்” என்ற தலைப்பிலான இரண்டாவது அமர்வுக்கு தலைமை வகித்தனர் என்றார். ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் இந்த அமர்வில் உரையாற்றினர். டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் சவால்களை எதிர்கொள்வது மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின்  சுமூகமான செயல்பாடுகள் போன்றவை தொடர்பாக இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் திறன் என்ற தலைப்பிலான மூன்றாவது அமர்வுக்கு  தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தலைமை வகித்தார். இந்த அமர்வில், இலங்கை  மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளை தலைவர்கள் மற்றும் ஐநா வளர்ச்சித்திட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் தலைவர் பேசுகையில், பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார். தேர்தல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஒருவருகொருவர் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார். தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தவறான தகவல்கள், திரித்துக்கூறப்படும் தகவல்கள், உள்ளிட்ட அச்சுறுத்தல்களை அடையாளம் காணவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தேர்தல் வேளாண்மை அமைப்புகளின் திறன். அதிகாரம் மற்றும் பொறுப்புகள் ஆகியவை  தேவைக்கேற்ப மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் அமர்வில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த