முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன் மாநாடு நிறைவு

கூட்டு நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை தேர்தல் மேலாண்மை அமைப்புகள் வலுப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே


'தேர்தல் ஒருமைப்பாடு' குறித்த கூட்டு செயல்பாட்டுக்கான நடவடிக்கையாக, 'தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்' குறித்து தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு நிறைவு

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேர்தல் ஒருமைப்பாடு’ குறித்த கூட்டு செயல்பாட்டுக்கான நடவடிக்கையாக, ‘தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச மாநாட்டின் நிறைவு விழாவிற்கு தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே இன்று தலைமை வகித்தார்.

நிறைவு விழாவில் பேசிய தேர்தல் ஆணையர் திரு. அனுப் சந்திர பாண்டே தனது உரையில், தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்றாலும்,  தேர்தல்களை நடத்தும்போது சவால்களை எதிர்கொள்வதிலும் சுதந்திரத்தைப் பேணுவதைப் பொறுத்தும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் செயல்பாட்டுத் திறன் உள்ளது என்றார். ஜனநாயக விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை வலுப்படுத்தவும், கூட்டு நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்து தளங்களையும் மேம்படுத்தவும் வேண்டும் என அனைத்து தேர்தல் மேலாண்மை அமைப்புகளையும் அவர் வலியுறுத்தினார்.

உலக அளவில் தேர்தல் அமைப்புகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் வாக்காளர்களின் அக்கறையின்மை போன்ற வளர்ந்து வரும் சவால்களை எடுத்துரைத்த தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே, இந்த சவால்களை எதிர்கொள்ள பரஸ்பர ஒத்துழைப்பு, தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் அறிவாற்றல் தகவல் பகிர்வு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தினார். வாக்காளர் பட்டியல் மேலாண்மை, வாக்குப்பதிவு மேலாண்மை, தேர்தல் தொழில்நுட்பம், தவறான தகவல்களைக் களைதல், போலிச் செய்திகளை ஒழித்தல், இணையப் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து அம்சங்களிலும் உலகளாவிய தரநிலைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பாக செயல்படும் விதத்தில் மேலும் மேலும் ஜனநாயகங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தேவைப்படும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் திறன் மேம்பாட்டுக்காக கூட்டு நிறுவனங்களின் பங்களிப்புகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


கடந்த இரண்டு நாட்களில், மூன்று அமர்வுகளில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.

'தேர்தல் ஒருமைப்பாடு'' என்ற அம்சத்தை உறுதி செய்வதற்கு தேர்தல் அமைப்புகளின் பங்கு மற்றும் கட்டமைப்பு தொடர்பாக நடைபெற்ற, "தேர்தல் மேலாண்மை அமைப்புகள் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள்" என்ற தலைப்பிலான முதல் அமர்வு மொரீஷியஸின் தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் மெக்சிகோ, சிலி, நேபாளம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் விளக்க உரைகள் இடம்பெற்றன.  சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் நம்பகமான தேர்தலுக்காக, தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் முன்முயற்சிகளைப் பாராட்டி முதல் அமர்வு நிறைவு பெற்றது. ஒருவருக்கொருவர் மேற்கொள்ளும் நல்ல நடைமுறைகளில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ளும் வகையில் இது அமைந்தது.

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் பொதுச்செயலாளர் மற்றும் கிரீஸ்சின் ஹெலனின் குடியரசின் தேர்தல் இயக்குனரகத்தின் தலைவர் ஆகியோர், “எதிர்கால சவால்கள்” என்ற தலைப்பிலான இரண்டாவது அமர்வுக்கு தலைமை வகித்தனர் என்றார். ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் இந்த அமர்வில் உரையாற்றினர். டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் சவால்களை எதிர்கொள்வது மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின்  சுமூகமான செயல்பாடுகள் போன்றவை தொடர்பாக இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் திறன் என்ற தலைப்பிலான மூன்றாவது அமர்வுக்கு  தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தலைமை வகித்தார். இந்த அமர்வில், இலங்கை  மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளை தலைவர்கள் மற்றும் ஐநா வளர்ச்சித்திட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் தலைவர் பேசுகையில், பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார். தேர்தல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஒருவருகொருவர் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார். தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தவறான தகவல்கள், திரித்துக்கூறப்படும் தகவல்கள், உள்ளிட்ட அச்சுறுத்தல்களை அடையாளம் காணவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தேர்தல் வேளாண்மை அமைப்புகளின் திறன். அதிகாரம் மற்றும் பொறுப்புகள் ஆகியவை  தேவைக்கேற்ப மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் அமர்வில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...