முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறப்புச் சான்றிதழின் நகலை பொது தகவலாக வழங்க- மத்தியத் தகவல் ஆணையம் உத்தரவு.

இறப்பு சான்றிதழின் நகலை பொது தகவல்களாக வழங்கவேண்டும் என  - மத்திய தகவல் ஆணையம் உத்தரவு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சார்பாகப் பெறலாம் ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும்.இதனை ஆன்லைன் மூலம் பெற்று கொள்ளலாம்.இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும்தற்போது பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இலவசமாக இணையதளம் மூலமாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2018ம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டுக்கான மருத்துவமனை மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்புகள் அனைத்தும் மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த சான்றிதழை இலவசமாக இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம். மேலும் எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு கிராம பஞ்சாயத்துகளில் (டவுன் பஞ்சாயத்துகள்) இறப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இறப்பு பதிவுகளை மேற்கொள்கின்றன.




கிராம பஞ்சாயத்துகளில் மரணம் ஏற்பட்டால், இறப்புகளை பதிவு செய்யும் பொறுப்பு வருவாய்த்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ளது.

ஒரு மருத்துவ நிறுவனத்தில் இறப்பு நிகழ்வானது, பதிவு செய்யும் அதிகாரத்துடன் நேரடியாக நிறுவனத்தால் பதிவு செய்யப்படுவதைக் குறிக்கிறது.

ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால், குடும்பத் தலைவர் அல்லது குடும்பத்தின் நெருங்கிய உறவினர் அந்தச் சம்பவத்தை மருத்துவச் சான்றிதழுடன் குறிப்பிட்ட வடிவத்தில் பதிவு செய்ய வேண்டும்இறப்பு நிகழ்ந்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் இறப்பு பதிவாகியிருந்தால் சரிபார்த்த பிறகு இறப்புச் சான்றிதழின் இலவச நகல் வழங்கப்படும். நிகழ்ந்த தேதியிலிருந்து பிற்பட்ட தேதியில் சான்றிதழைப் பெற்றால், விண்ணப்பதாரர் அதை நபரின் பெயர், வயது, இறந்த தேதி, இறந்த இடம் மற்றும் இறந்த நேரத்தில் வசிக்கும் முகவரியுடன் வேறு வடிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். . இந்தப் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, ஒரு ஒப்புதலைப் பெற வேண்டும்.கிராமப்புறங்களில், இறப்புச் சான்றிதழை தாலுகா அலுவலகத்தில், இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அதன் பிறகு, துணை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். டவுன்/முனிசிபல் பகுதிகளில், அந்தந்த டவுன்/முனிசிபல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்




1910 முதல் 2017 வரை நீங்கள் தொலைத்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை ஆன்லைன்னில் எடுப்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதற்க்கு tnurbanepay என்ற வலைப்பக்கத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கு இருக்க வேண்டும். அதன்மூலமாகத்தான் நீங்கள் தொலைத்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை ஆன்லைன்னில் எடுக்க முடியும். tnurbanepay இணையதளத்தில் எப்படி உங்களுக்கு என்று ஒரு கணக்கை உருவாக்குவது என்று ஏற்கனவே நமது இணையதலபக்கத்தில் ஒரு பதிவும். நமது Green Hand Tech Tamil Channel-லில் ஓரு வீடியோ பதிவு போடப்பட்டு உள்ளது. அதை பார்த்து உங்களுக்கான கணக்கை உருவாக்கி கொள்ளவும்.இப்போது tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு login பகுதியில் உங்கள் பயனர் பெயர் ,கடவுச் சொல் மற்றும் Captcha Code பதிவு செய்து Login பட்டனை அழுத்தவும்.இப்போது உங்கள் கணக்கின் Dashboard வரும். அதில் மேலே உள்ள தேர்வுகளில் Service எனும் தேர்வை தேர்ந்து எடுக்கவும்.இப்போது வரும் தேர்வுகளில் Birth and Death எனும் பகுதியில் இருக்கும் Print Birth Certificate என்னும் தேர்வை தேர்வு செய்யவும்.



இப்போது வரும் பக்கத்தில் உங்கள் பிறப்பு விவரங்களை தேர்வு செய்யவும். சிகப்பு நிற நட்ச்சத்திர குறியீடு உள்ள தேர்வுகளை மட்டும் தேர்வு செய்தால் போதும். முதலில் Organization எனும் இடத்தில் நீங்கள் பிறந்த நகராட்சியே தேர்வு செய்யவும்.Date of Birth என்ற இடத்தில் நீங்கள் பிறந்த தேதியே தேர்வு செய்யவும்.

Language Type என்ற இடத்தில் விவரங்களை காணவிரும்பும் மொழியை  தேர்வு செய்யவும்.

Birth Type என்ற இடத்த்தில் நீங்கள் பிறந்த வகையே தேர்வு செய்யவும்.

Sex எனும் இடத்தில் உங்கள் பாலினத்தை தேர்வு செய்யவும்

இந்த விவரங்கள் அனைத்தையும் தேர்வு செய்த பிறகு Search எனும் பட்டனை அழுத்தவும்.இப்போது முடிவுகள் கீழே வந்து இருக்கும். அதை பார்க்க Scroll செய்யவும். இப்போது அதில் உங்கள் தந்தை , தாய் பெயரை கொண்டு உங்கள் பிறப்பு சான்றிதழை தேடி எடுக்கலாம். உங்கள் சான்றிதழை அறிந்ததும் Action எனும் நெடு வரிசையில் இருக்கும் Select என்ற தேர்வை தேர்வு செய்து அதில் இருக்கும் Print எனும் தேர்வை தேர்வு செய்யவும்.2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த  போது தகவல்கள் அளிக்காத அலுவலர்களுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று தான் குறிப்பிட்டிருந்தது. அதில் சட்டதிருத்தம் செய்துதான் அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதிகாரிகள் இந்த சட்டத்தின் உண்மையையும், நோக்கத்தையும் புரிந்து கொண்டு மக்களுக்கு தகவல் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பிரிவை நீக்குகிறோம் என்று சொல்லி தகவல் அளிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை என்பதை நீக்கி சட்டம் நிறை வேற்றப்பட்டது.

ஆனால், எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதால் தகவல் அலுவலர்கள் பெரும்பாலும் அலட்சியமாகத்தான் விண்ணப்பங்களை எதிர்கொள்ளுகின்றனர். இரண்டாம் மேல்முறையீட்டு நிலை வரை பொதுமக்களுக்கு முறையாக தகவல் அளிக்காதவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் மற்றும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க  சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட மிகவும் அரிதாகத்தான் அப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதுவே ஊழல் வளரக்கூடிய நிலை வருகிறது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொதுமக்கள் வேண்டுகின்ற தகவல் கோரிக்கை விண்ணப்பம் முதலில் பொதுத் தகவல் அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும்.

அவர் தகவல் தராதபட்சத்தில் மேல்முறையீட்டு அலுவலரிடம்  விண்ணப்பிக்கலாம், அவரிடமிருந்தும் கிடைக்கப் பெறவில்லையெனில் தகவல் ஆணையத்தில் சென்று வழக்கு மூலம் தான் தகவலைப் பெற வேண்டும்.

அப்படி சென்றால் தகவல் கிடைக்க சுமார் ஒரு வருடம் ஆகிறது. ஏனெனில், தகவல் ஆணையத்தில் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இப்பொழுதே நிலைமை இப்படித்தான் இருக்கின்றது. இந்தச் சூழலில் இந்தச் சட்ட திருத்தங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை வலிமைப்படுத்துவதற்கு மாறாக அதை வலிமை இழக்கச் செய்வதாக அமைந்து விடக்கூடாது என்ற நிலை ஆரம்பத்தில் எழுந்தது. ஆனால்  தற்போது ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. அதிலும் தப்பிக்க முயலும் அலுவலர்கள் ஊழல்வாதிகளாகவே இருப்பார்கள் அவர்கள் மீது இன்னும் சரியாக நடவடிக்கை வராத வரை தீர்வில்லை.ரூ10-மதிப்புள்ள ஒரு இ -சலானை வைத்து பல பொதுத் தகவல் விண்ணப்பங்களுக்கு  கட்டணமாகப்   பயன்படுத்துவதைத் தடுக்க  முடியும் 

தகவல் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 10 மதிப்புள்ள கருவூல செலுத்துச்சீட்டு சமர்ப்பிக்க வழிவகை உண்டு ( Letter No.39998/AR III/2007-5, P & AR (AR III) Department, dated 18.12.2007)

தகவல் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 10 கருவூலத்தில் நேரடியாக நாம் செலுத்தினால் நமக்கு ஒரு அசல் படி அல்லது அசல் செலுத்துச்சீட்டு மட்டுமே தருவார்கள் அதைத் தகவல் விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்பிப்போம், அதையே மறுமுறை பயன்படுத்த இயலாது ஆனால் தற்பொழுது  ஆன்லைனில் பணம் செலுத்தி இ -சலான் பெறும் முறை நடைமுறையிலுள்ளது, எத்தனை முறை வேண்டுமானாலும் அதைப் பதிவிறக்கம் செய்யலாம் என்பதால் இதை வைத்து சிலர் மோசடிகள் செய்ய வாய்ப்புள்ளது,

ஒருவர் ஒரே நேரத்தில் பல தகவல் விண்ணப்பம் பல துறைகளுக்கு அனுப்புகிறார் என்று வைத்துக்கொள்வோம் ,ரூபாய் 10-மதிப்புள்ள ஒரு இ -சலான் ஒன்றுக்கு ரூபாய் 10 மட்டுமே செலவழித்து பல முறை அதே இ-சலானை பதிவிறக்கம் செய்து பல விண்ணப்பங்களுக்கு அதையே பயன்படுத்த வாய்ப்புள்ளது , இப்படி ஒருவர் செய்தால் இந்த மோசடியைக் கண்டறிந்து  தடுத்திட முடியும் ஆன்லைன் வழியாக  அரசின்  கணக்குத் தலைப்பில் தகவல் கட்டணம் செலுத்துவது மிக மிக எளிது 

ஆன்லைன் வழியாக  அரசின்  கணக்குத் தலைப்பில் கருவூல வலைதளத்தின் ஊடாக அரசுக்கு கட்டணம் செலுத்திச் சமர்ப்பிக்கப்பட்ட செலுத்துச்சீட்டினை  பொதுத்தகவல் அலுவலர்கள்  யாரவது  ஏற்காமல் போனால் இந்த அரசின் உத்தரவை குறிப்பிடுங்கள் Letter No.39998/AR III/2007-5, P & AR (AR III) Department, dated 18.12.2007

E-Challan மூலம் தகவல் கட்டணம்  செலுத்தப்பட்டதை  ஏற்காத  பொதுத்தகவல் அலுவலர்களுக்கு இப்படிக் குறிப்பிடுங்கள்

E-Challan மூலம் தகவல் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள

செலுத்துச்சீட்டில் கண்டுள்ள பார்கோடு ஸ்கேன் செய்வது,

கருவூலம் மற்றும் கணக்குத்துறை வலைத்தளத்தில் https://www.karuvoolam.tn.gov.in/challan/search சலான் எண் ............. மற்றும் சலான் எடுத்தவரின் அலைபேசி எண் ………. உள்ளீடு செய்து மேற்படி இ -சலான் பதிவிறக்கம் செய்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்