முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெங்களூரில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்


பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள துறவி கவிஞர் ஸ்ரீ கனகதாசர், மகரிஷி வால்மீகி சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில்  உள்ள துறவி கவிஞர் ஸ்ரீ கனகதாசர் மற்றும் மகரிஷி வால்மீகி சிலைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


ஸ்ரீ கனகதாசருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இன்று, கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கனகதாசர் சிலைக்கு  நான் மரியாதை செலுத்தினேன். பக்தியின் பாதையை நமக்குக்  காட்டியதற்காகவும், கன்னட இலக்கியத்தை வளப்படுத்தியதற்காகவும், சமூக ஒற்றுமைக்கான செய்தியை வழங்கியதற்காகவும் அவருக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’.


மகரிஷி வால்மீகிக்கு மரியாதை  செலுத்தியது  குறித்தும் பிரதமர் ட்விட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் இருந்தனர்.மைசூரு - புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் & காசி பாரத் கௌரவ் ரயில்களை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார்


மைசூரு மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டில் தொடங்கப்பட்ட ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பதுடன் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயிலையும் பிரதமர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

'மேக் இன் இந்தியா' வெற்றிக்கு  ஒரு சிறந்த உதாரணமாக, இந்திய ரயில்வே இந்தியாவின் முதல் உள்நாட்டு அதிவேக ரயில்- வந்தே பாரத் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்தியது, இது  கான்பூர்- அலகாபாத்-வாரணாசி வழித்தடத்தில் பிரதமரால் பிப்ரவரி 15, 2019 அன்று புது தில்லியில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புது தில்லி- மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் - அகமதாபாத் - மும்பை சென்ட்ரல், மற்றும் ஆம்ப் ஆண்டௌரா - புது தில்லி வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.



இந்த புதிய ரயில், தொழில்துறை மையமான சென்னைக்கும், தொழில்நுட்ப-மென்பொருள்-தொடக்க மையமான பெங்களூரு மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மைசூருவுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். மைசூரு - பெங்களூரு - சென்னையில் பயணம் செய்யும் வழக்கமான பயணிகள் தவிர, மென்பொருள் மற்றும் வணிக வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் இதனால் பயனடைவார்கள். இது விமான சேவை போன்ற வசதியை வழங்குவதுடன் ரயிலில் புதுமையான பயண அனுபவத்தை வழங்கும்.




மைசூரு- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேரம்

சென்னையிலிருந்து காலை 5.50-க்கு புறப்படும் ரயில், காட்பாடி ரயில் நிலையத்தை காலை 7.21-க்கு சென்றடையும். அங்கிருந்து 7.25-க்கு புறப்பட்டு, பெங்களூரு நகரத்தை காலை 10.20 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 10.25க்கு புறப்பட்டு, மைசூருவை மதியம் 12.20 மணிக்கு அடையும்.

மறுமார்க்கத்தில், மைசூருவிலிருந்து பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, சென்னையை இரவு 7.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் பெங்களூருவை 2.55 க்கும், காட்பாடியை மாலை 5.36க்கும் வந்தடையும். இந்த ரயில் பெங்களூரு ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களும், காட்பாடி நிலையத்தில் 4 நிமிடங்களும் நிற்கும்.




 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து மைசூருக்கான இருக்கை ரூ.1200. உயர்வகுப்பு கட்டணம் ரூ.2295. மைசூருவில் இருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு சாதாரண கட்டணம் ரூ. 1365 .உயர் வகுப்பு கட்டணம் ரூ. 2485.

 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சலுகை கட்டணங்களோ, குழந்தை கட்டணமோ  அனுமதிக்கப்படாது. வயது வந்தோருக்கான முழு கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். முன்பதிவு செய்தல், ரத்து செய்தல், பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சதாப்தி ரயில்களின்படி இருக்கும்.

பெங்களூருவில் 108 மீட்டர் உயரம் கொண்ட திரு நடபிரபு கெம்பேகவுடாவின் வெண்கலச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்

பெங்களூருவில் திரு  நடபிரபு கெம்பேகவுடாவின் 108 மீட்டர் உயரமுள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் அருகில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

பெங்களூரு நகரத்தை உருவாக்கிய நடபிரபு கெம்பேகவுடாவின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை சிலை புகழ் ராம் வி சுதார் இதனை வடிவமைத்து,  98 டன் வெண்கலம் மற்றும் 120 டன் எஃகு மூலம் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“பெங்களூருவை உருவாக்குவதில் திரு நடபிரபு கெம்பேகவுடாவின் பங்கு ஈடு இணையற்றது. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நலனை எப்போதும் முன்னிறுத்திய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். பெங்களூரில் ‘செழிப்பின் சிலை’யை திறத்து வைத்ததில் பெருமை அடைகிறேன்’’.

இந்த நிகழ்ச்சியில், பிரதமருடன் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த