முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வடசேரி அரசு இரப்பர் தோட்டக் கழகத்தில் நிர்வாக இயக்குனர், இரப்பர்பால் ஏலம் எடுக்க இரண்டரைக் கோடொ லஞ்சம் கேட்ட வழக்கு அடுத்த வாரம் தள்ளிவைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டம் வடசேரியில் உள்ள  அரசு இரப்பர் தோட்டக் கழகத்தில் நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் வனத்துறையின் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். 



இரப்பர் தோட்ட தொழிலாளர்களால் தான் ரப்பர் கழகம் முழுமையாகச் செயல்படுகிறது.

ஆனால் இக் கழகம், தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. அதிகாரிகள் இரப்பர் மரங்களை வெட்டி காண்டிராக்டர்களுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது . சில ஆண்டுகளுக்கு முன் வந்த  ஒஃகி புயலில் சேதமடைந்த இரப்பர் மரங்களை காண்டிராக்டர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் முறைகேடாக வெட்டியதைப்

போல் சமீபத்தில் இரப்பர் மரங்களில் பால் எடுக்கும் ஏலம் விடுவது சம்பந்தமாக அறிவிப்பு வெளியானதில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் சின்டிகேட் முறையில் பேரம் பேசுவது காணொளிக் காட்சி  பதிவாகியது. இது சட்டவிரோதம். இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இரப்பர் மரங்களில் பால் எடுக்கும் ஏல அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக மறு ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.

என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.



இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞர் சி.டி.பெருமாள் ஆஜராகி, ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை கமிஷனாகத் தர வேண்டுமென ஏல ஒப்பந்த தாரர்களிடம், மாவட்ட வனத்துறை சார்ந்த ஐ.எப்.எஸ். அதிகாரிகள் கேட்பது, போன்ற  காணொளிக் காட்சி  வெளியாகியுள்ளதில் ரூ.5 கோடி ஏல தொகையில் பாதித் தொகையான (ரூபாய்.2½ கோடியை) இலஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். உயர்ந்த பதவிகளில் உள்ள  அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார்.


அதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுத் தெரிவிக்கும் படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30- ஆம் தேதிக்கு மாற்றி வைத்தனர்.    இந்தியாவில் இரப்பர் தோட்ட வாரியம் 1947-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. இரப்பர் தொழிலை மேம்படுத்த இரப்பர் பற்றிய ஆராய்ச்சி, மற்றும்  பயிற்சி, பயிரிடுவோர்க்கு ஆலோசனைகளை வழங்கிட, வியாபபாரம் செய்ய உத்திகள் வகுக்க, தொழிலாளர்களுக்கு உதவிட இது தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் இரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருடத்திற்கு 24,020 டன் இரப்பர் பால் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.  கேரளாவில் இந்திய உற்பத்தியில் 92 ,சதவீதம் கிடைக்கிறது. எனவே தமிழ்நாட்டு இரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கேரளாவிலிருந்து இரப்பரை வாங்குகின்றனர். 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 7.20 லட்சம் டன் இரப்பர் பால் உற்பத்தியாகிறது. இப்பொழுது தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மரங்கள் நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இரப்பர் தோட்ட வாரியம் இரப்பர் மரம் நடுவதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல உதவிகள் செய்கிறது. இரப்பர் அறுவடை செய்ய நவீன பயிற்சி, ஷீட் இரப்பராக மாற்ற பயிற்சி, தரம் பிரிக்க பயிற்சி இன்ஸ்டிடியூட் எனும் பயிற்சி நிறுவனத்தையும்துவங்கியுள்ளது. தேசிய இரப்பர் மாநாடு நடத்துதல், தர மேம்பாட்டுக்குறிய நடவடிக்கை, தொழில்நுட்பம் சார்ந்த  உதவி, ஊழியர்களுக்கு உதவும் திட்டம், ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள், விற்பனை  மற்றும் ஏற்றுமதி செய்ய உதவிகள், விலை நிர்ணயம் என பல்வேறு உதவிகளையும்  செய்கிறது. : இரப்பர் மரம் என்பதன் 

 தாவரவியல் பெயர் : ஹீவியா பிரேசிலியன்சிஸ்

இதுவே ஆங்கிலத்தில் : Rubber Tree

:கரிசல்  மண்ணில் வளரும் மரத்தின்

தாவரக் குடும்பம் : இயுஃபோர்பியேசியே எனவாகும்.

 தாவரங்கள் தங்களிடமிருந்து வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று தான் இரப்பர் பால்.

 என்பது கோந்து, எண்ணெய், புரோட்டீன், அமிலங்கள், உப்புகள், சர்க்கரை, ஹைட்ரோ கார்பன் முதலியவை கலந்தது தான்.  இரப்பர் பாலுக்கு லாடெக்ஸ் எனப் பெயர். இரப்பர் பாலின் நிறம் வெள்ளை தான் என்றாலும், பருவ காலத்துக்குத் தகுந்தாற் போல் அது மஞ்சளாகவும் வெளிர் ஆரஞ்சாகவும், சாம்பல் நிறத்திலுமிருக்கும்.

இரப்பர் மரம் 18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளரும். 2 முதல் 3 மீட்டர்கள் கொண்டசுற்றளவிருக்கும்.

வளர்ந்து ஏழாவது வருடத்திலிருந்து பலன் தரும், சுமார் 50 வருடங்களுக்கு இரப்பர் பால் சேகரிக்கலாம். ஒரு ஆண்டில் ஒரு மரத்தில் 150 வெட்டு வாய்களை உண்டாக்கலாம்.அடி மரத்தின் மேலும் கீழும் சுமார் 35 செ.மீ. விட்டு விட்டு மற்றப் பகுதிகளில் இந்தக் கீறல்களை உண்டாக்கலாம்.

10 வருடங்களில் அதன் பட்டை மறுபடியும் வளர்ந்துவிடும். ஒரு கூரிய கத்தியால், சுமார் 1.25 செ.மீ. கனத்துக்கு இரப்பர் மரத்தின் பட்டை அகற்றப்பட்டு அதில் ஓர் உலோகக் கிண்ணம் பொருத்தப்படுகிறது. அதில் பால் வடிகிறது.

சேகரிக்கப்பட்ட பால், நீர் நீக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுகிறது.பென்சில் கோடுகளை அழிக்கும் இரப்பர் .

உள்ளிட்ட மழைக்கோட்டுகள் கூடத் தயாரிக்கலாம்.

 இரப்பர் மரப் பட்டையில் இருந்து எடுக்கப்படும் பால் இரப்பர் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

 காலனிகள், விளையாட்டு பொருட்கள், பந்துகள் மற்றும் பொம்மைகள் மற்றும் 

டயர் தயாரிக்க இரப்பர் பால் பயன்படுகிறது. துவக்க காலத்தில் தென் அமெரிக்காவின் பகுதியில், இரப்பர் உருண்டைகளைக்க் கண்டனர். அங்கு, ஒரு வகை மரத்தில் வழிந்த பாலைச் சேகரித்தனர்

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், 1490 ஆம் ஆண்டில், இந்த உருண்டைகளைக் கண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,