முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வடசேரி அரசு இரப்பர் தோட்டக் கழகத்தில் நிர்வாக இயக்குனர், இரப்பர்பால் ஏலம் எடுக்க இரண்டரைக் கோடொ லஞ்சம் கேட்ட வழக்கு அடுத்த வாரம் தள்ளிவைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டம் வடசேரியில் உள்ள  அரசு இரப்பர் தோட்டக் கழகத்தில் நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் வனத்துறையின் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். 



இரப்பர் தோட்ட தொழிலாளர்களால் தான் ரப்பர் கழகம் முழுமையாகச் செயல்படுகிறது.

ஆனால் இக் கழகம், தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. அதிகாரிகள் இரப்பர் மரங்களை வெட்டி காண்டிராக்டர்களுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது . சில ஆண்டுகளுக்கு முன் வந்த  ஒஃகி புயலில் சேதமடைந்த இரப்பர் மரங்களை காண்டிராக்டர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் முறைகேடாக வெட்டியதைப்

போல் சமீபத்தில் இரப்பர் மரங்களில் பால் எடுக்கும் ஏலம் விடுவது சம்பந்தமாக அறிவிப்பு வெளியானதில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் சின்டிகேட் முறையில் பேரம் பேசுவது காணொளிக் காட்சி  பதிவாகியது. இது சட்டவிரோதம். இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இரப்பர் மரங்களில் பால் எடுக்கும் ஏல அறிவிப்பை இரத்து செய்ய வேண்டும். உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக மறு ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.

என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.



இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞர் சி.டி.பெருமாள் ஆஜராகி, ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை கமிஷனாகத் தர வேண்டுமென ஏல ஒப்பந்த தாரர்களிடம், மாவட்ட வனத்துறை சார்ந்த ஐ.எப்.எஸ். அதிகாரிகள் கேட்பது, போன்ற  காணொளிக் காட்சி  வெளியாகியுள்ளதில் ரூ.5 கோடி ஏல தொகையில் பாதித் தொகையான (ரூபாய்.2½ கோடியை) இலஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். உயர்ந்த பதவிகளில் உள்ள  அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார்.


அதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுத் தெரிவிக்கும் படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30- ஆம் தேதிக்கு மாற்றி வைத்தனர்.    இந்தியாவில் இரப்பர் தோட்ட வாரியம் 1947-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. இரப்பர் தொழிலை மேம்படுத்த இரப்பர் பற்றிய ஆராய்ச்சி, மற்றும்  பயிற்சி, பயிரிடுவோர்க்கு ஆலோசனைகளை வழங்கிட, வியாபபாரம் செய்ய உத்திகள் வகுக்க, தொழிலாளர்களுக்கு உதவிட இது தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் இரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டு வருடத்திற்கு 24,020 டன் இரப்பர் பால் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.  கேரளாவில் இந்திய உற்பத்தியில் 92 ,சதவீதம் கிடைக்கிறது. எனவே தமிழ்நாட்டு இரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கேரளாவிலிருந்து இரப்பரை வாங்குகின்றனர். 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 7.20 லட்சம் டன் இரப்பர் பால் உற்பத்தியாகிறது. இப்பொழுது தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மரங்கள் நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இரப்பர் தோட்ட வாரியம் இரப்பர் மரம் நடுவதில் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் பல உதவிகள் செய்கிறது. இரப்பர் அறுவடை செய்ய நவீன பயிற்சி, ஷீட் இரப்பராக மாற்ற பயிற்சி, தரம் பிரிக்க பயிற்சி இன்ஸ்டிடியூட் எனும் பயிற்சி நிறுவனத்தையும்துவங்கியுள்ளது. தேசிய இரப்பர் மாநாடு நடத்துதல், தர மேம்பாட்டுக்குறிய நடவடிக்கை, தொழில்நுட்பம் சார்ந்த  உதவி, ஊழியர்களுக்கு உதவும் திட்டம், ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள், விற்பனை  மற்றும் ஏற்றுமதி செய்ய உதவிகள், விலை நிர்ணயம் என பல்வேறு உதவிகளையும்  செய்கிறது. : இரப்பர் மரம் என்பதன் 

 தாவரவியல் பெயர் : ஹீவியா பிரேசிலியன்சிஸ்

இதுவே ஆங்கிலத்தில் : Rubber Tree

:கரிசல்  மண்ணில் வளரும் மரத்தின்

தாவரக் குடும்பம் : இயுஃபோர்பியேசியே எனவாகும்.

 தாவரங்கள் தங்களிடமிருந்து வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று தான் இரப்பர் பால்.

 என்பது கோந்து, எண்ணெய், புரோட்டீன், அமிலங்கள், உப்புகள், சர்க்கரை, ஹைட்ரோ கார்பன் முதலியவை கலந்தது தான்.  இரப்பர் பாலுக்கு லாடெக்ஸ் எனப் பெயர். இரப்பர் பாலின் நிறம் வெள்ளை தான் என்றாலும், பருவ காலத்துக்குத் தகுந்தாற் போல் அது மஞ்சளாகவும் வெளிர் ஆரஞ்சாகவும், சாம்பல் நிறத்திலுமிருக்கும்.

இரப்பர் மரம் 18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளரும். 2 முதல் 3 மீட்டர்கள் கொண்டசுற்றளவிருக்கும்.

வளர்ந்து ஏழாவது வருடத்திலிருந்து பலன் தரும், சுமார் 50 வருடங்களுக்கு இரப்பர் பால் சேகரிக்கலாம். ஒரு ஆண்டில் ஒரு மரத்தில் 150 வெட்டு வாய்களை உண்டாக்கலாம்.அடி மரத்தின் மேலும் கீழும் சுமார் 35 செ.மீ. விட்டு விட்டு மற்றப் பகுதிகளில் இந்தக் கீறல்களை உண்டாக்கலாம்.

10 வருடங்களில் அதன் பட்டை மறுபடியும் வளர்ந்துவிடும். ஒரு கூரிய கத்தியால், சுமார் 1.25 செ.மீ. கனத்துக்கு இரப்பர் மரத்தின் பட்டை அகற்றப்பட்டு அதில் ஓர் உலோகக் கிண்ணம் பொருத்தப்படுகிறது. அதில் பால் வடிகிறது.

சேகரிக்கப்பட்ட பால், நீர் நீக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுகிறது.பென்சில் கோடுகளை அழிக்கும் இரப்பர் .

உள்ளிட்ட மழைக்கோட்டுகள் கூடத் தயாரிக்கலாம்.

 இரப்பர் மரப் பட்டையில் இருந்து எடுக்கப்படும் பால் இரப்பர் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

 காலனிகள், விளையாட்டு பொருட்கள், பந்துகள் மற்றும் பொம்மைகள் மற்றும் 

டயர் தயாரிக்க இரப்பர் பால் பயன்படுகிறது. துவக்க காலத்தில் தென் அமெரிக்காவின் பகுதியில், இரப்பர் உருண்டைகளைக்க் கண்டனர். அங்கு, ஒரு வகை மரத்தில் வழிந்த பாலைச் சேகரித்தனர்

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், 1490 ஆம் ஆண்டில், இந்த உருண்டைகளைக் கண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...