முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூபா வழக்கு

உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு


போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. 

தமிழ்நாடு அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூபா (Compassion Unlimited Plus Action - CUPA) உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருக்கின்றன.




ஜல்லிகட்டு விவகாரத்தில் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலாச்சார உரிமையை நிலைநாட்டும் நோக்கில் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இவ்வழக்கில் இடையீட்டு  மனு ஒன்றைத் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர், சு.வெங்கடேசன் தன் மனுவில்   " தமிழர்களின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ஜல்லிகட்டு உள்ளது.  



காதலையும் வீரத்தையும் போற்றிப்பாடிய தொன்மையான தமிழ் இலக்கியங்களில் ஜல்லிகட்டு 'ஏறுதழுவுதல்' எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது.  பன்னெடுங்காலமாக தமிழர்களுக்கு ஏறுதழுவுதல் மீதான  பிணைப்பு இந்நாள் வரைக்கும் தொடர்வதை இது காட்டுகிறது.



ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வரும் Bull fighting எனும் மாட்டுச் சண்டை விளையாட்டுகள் பெரும்பாலும் வணிக நோக்கில் விளையாடப்படுகின்றன. ஆனால், ஜல்லிகட்டு அப்படியில்லாமல் கலாச்சார நிகழ்வாக கடைபிடிக்கப்படுகிறது.

இது உள்ளூர் கிராம நிர்வாகத்தால் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், கால்நடைத்துறை, மருத்துவர்கள் ஆகியோரின் மேற்பார்வையிலேயே நடத்தப்படுகிறது.

வெளிநாடுகளில் மாடுபிடிச் சண்டையில் மாடோ அல்லது மனிதரோ உயிரிழப்பது பொதுவானதாகவும் அந்த விளையாட்டின் ஓர் அங்கமாகவும் உள்ளது. ஆனால், ஜல்லிகட்டு கால்நடைகளின் வளத்தை உயர்த்தவும் ஜல்லிகட்டு நடத்தப்படும் கிராமங்கள், அதற்காக மாடுகளை வளர்க்கும் கிராமங்களின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்குமான ஆதாரமாக உள்ளது.

ஜல்லிகட்டுக்கு அனுமதி அளித்த அரசாணையால் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் Convention of Protection of Cultural and Societal Rights, 1948 ன் படி ஜல்லிகட்டை அனுமதிப்பது அவசியம். 


போலோ போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு ஊக்கமருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், ஜல்லிகட்டில் காளைகளுக்கு எந்த ஊக்க மருந்தும் கொடுக்கப்படுவதில்லை.

மேலும் ஜல்லிகட்டானது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பங்குபெறும் நிகழ்வாக இல்லாமல் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் கலாச்சார நிகழ்வாக உள்ளது. 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய மொழி, அறிவு, வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அடுத்த தலைமுறைக்கு அது கொண்டு செல்லப்பட வேண்டும் 



 என்பதையும் UNESCO வலியுறுத்துகிறது" என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய இக்காரணங்களைக் குறிப்பிட்டு ஜல்லிகட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட Writ Petition (C) No 24 of 2016 எனும் வழக்கில் விசாரணை நடத்த உள்ள நிலையில். தன்னையும் இணைந்துக்கொண்டார் நாடாளுமன்ற மதுரை உறுப்பினர்.    கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒரு பார்வை.ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து 2017 ஆம் ஆண்டு போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அப்போதிருந்த முதல்வரால்  சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில் அதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டது.


வழக்கின் உண்மைத் தன்மை என்னவென்றால், விலங்குகள் நல ஆர்வலர் ஸ்ரீ ஹரிஷ் கே.பி., 19.09.2020 அன்று கர்நாடகா மாநிலத்தில்  புட்டனஹள்ளி காவல் நிலைய ஆய்வாளரிடம், விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் தொடர்பான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக புகார் மனு அளித்தார். விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 ( 'பிசிஏ') பிரிவு 11-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக குற்ற எண்.181/2020 ன் படி  முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது, மேலும் ஐபிசியின் 428 வது பிரிவின் படி கரநாடகாவில் உத்தரவு  பெற்றது, மேலும் இந்த வழக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளது.
மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கியக் காரணம் என்னவென்றால், கொடுமைக்கு ஆளாகும் வளர்ப்பு விலங்குகள், அத்தகைய விலங்கின் உரிமையாளரின் கட்டுப்பாட்டில் விசாரணை  நிலுவையில் இருக்கும் போது வைத்துக்கொள்ள முடியாது என்ற குற்றச்சாட்டின் பேரில் பிசிஏ சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிசிஏ விதிகள், 2017 ன் விதிகள் 3 மற்றும் 4-ன் படி, குற்றம் சாட்டப்பட்டவர்களால் கொடுமைக்கு ஆளாகும் வளர்ப்பு விலங்குகள் , வழக்கு நிலுவையில் உள்ள போது விலங்குகளை சொந்தக் காவலில் வைத்திருக்க முடியாது என்பது அவர்கள்  வாதமாகும். 22.பிப்ரவரி.2002 தேதியிட்ட Crl.A.Nos.283- 87/2002 ன் படி  ஸ்டேட் ஆஃப் உத்தரப் பிரதேசம்  எதிர் முஶதாஹிம் வழக்கின் அறிக்கையிடப்படாத தீர்ப்பில், 22.பிப்ரவரி.2002 அன்று பதிவான FIR ல் விலங்குகள் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

படுகொலை செய்யப்பட்டு ஒருவருக்கொருவர் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டது. கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றவியல் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றத்தின்  நீதிபதியால் எப்படி இப்படியொரு உத்தரவை பிறப்பிக்க முடிந்தது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலங்குகளை கோசாலையில் வைக்க உத்தரவிடப்பட்டது.எஸ்.எல்.பி., எண் கொண்ட இந்திய விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவில், உச்சநீதிமன்றம்  தடை உத்தரவு போடப்பட்டது. (சி) 2013 இன் எண். 4453, மற்றும் 'இந்திய விலங்குகள் நல வாரியம் வெர்சஸ் பி. கிருஷ்ணா பட் & அதர்ஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே காம்பாஷன் யுனைடெட் ப்ளஸ் ஆக்ஷன் (CUPA) ன் மனு மீது உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. புதிய சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டுமென குறிப்பிட்டு. ஆனால் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இது:- 

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை நீதிமன்றம் விசாரித்தது. 2016 அறிவிப்பின் சட்டபூர்வமான தன்மை குறித்த தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது மற்றும் மத்திய அரசின் கோரிக்கையின் பேரில் தீர்ப்பை தாமதப்படுத்தியது.
மத்திய அரசின் அறிவிப்பு மற்றும் மாநிலத்தின் திருத்தத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், PETA, CUPA மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் மனுக்கள் இதில் அடங்கியுள்ளன.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் ஜனவரி மாதம் .23 ஆம் தேதி வரை நீடித்தது. ஆரம்பத்தில் 50 பேர் திரண்ட நிலையில் பின்னர் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். பிறகு இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.

பின்னர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழ்நாடு  முழுவதும் பரவியது. மக்கள் போராட்டத்தின் வீச்சைக் கண்ட தமிழ்நாடு அரசு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் இயற்றி உடனடியாக அதற்கு ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்துச் சென்றனர். ஆனால் ஒருசாரர் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். பின்  போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், எழும்பூர் எனப் பரவியது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீயிடப்பட்டது. அப்போது  தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஆங்காங்கே மோதல், வன்முறைகள் ஏற்பட்டதால் பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 26460 பேர்கள் மீது 308 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அணைத்தும் வாபஸ் பெறப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த