முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5-ஜி தொலைத் தொடர்பு சேவை

5-ஜி தொலைத் தொடர்பு சேவை

நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இதுவரை 5-ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022, அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ஜி  தொலைத்தொடர்பு சேவையை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கடந்த 2022 நவம்பர் 26-ம் தேதி வரை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 50 நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டிருக்கிறது. அதிவேக தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஏதுவாக மத்திய அரசு பின்வரும் கொள்கை நடவடிக்கைகளை முன்னிறுத்தி வருகிறது.


செல்ஃபோன் தொலைத்தொடர்பு சேவையை தங்கு தடையின்றி வழங்க  ஏலம் மூலம் அலைவரிசை  ஒதுக்கீடு

அலைவரிசை பங்கீடு மற்றும் வணிகத்திற்கு அனுமதி

அலைவரிசை பங்கீட்டிற்கான கூடுதல் அலைவரிசை பயன்பாடு கட்டணம் 0.5 சதவீதம் நீக்கம்

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அனுமதி

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.குறைமின்கடத்தி சிப்-கள் தயாரிப்பு

உலகளாவிய செமிகண்டக்டர்  வினியோகச் சங்கிலியில் இந்தியாவை முக்கியப் பங்குதாரர் நாடாக மாற்ற வேண்டும் என்றும் உயர்- தொழில்நுட்ப, உயர்தர மற்றும் மிகுந்த நம்பகத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. செமிகான் இந்தியா மாநாடு திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.  குறைமின்கடத்திகளை அதிகமாக பயன்படுத்தும் நாடுகள் வழங்கும் ஊக்கத்தொகைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் சில மாறுதல்கள் கொண்டுவரப்படவுள்ளது. இதன் அடிப்படையில் குறைமின்கடத்திகளை அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வது, உற்பத்தி மற்றும் வடிவமைப்பு செயல்பாடுகளில் உதவி செய்வது போன்றவைகள் செய்துத்தரப்படும்.



குறைமின்கடத்தி துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலை விளக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வர்த்தகத்திற்கு உகந்த சூழலை வழங்குவதற்காக சிறந்த முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

இதுசம்பந்தமாக புதிதாக உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கி பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.

செமிகான் இந்தியா மாநாடு திட்டத்தின் எதிர்கால வடிவமைப்பின் கீழ் குறைமின்கடத்தி மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும்  ஊக்கத்தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும்.  மேலும் 5 வருட காலங்களில் மொத்த விற்பனை 6 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு ரூ.30 கோடி வழங்கப்படும். மொஹாலியில் குறைமின்கடத்திக் கூடத்தை நவீனமயமாக்குதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில்  தெரிவித்துள்ளார்.பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் இழப்புகள்

தொலைத்தொடர்பு சேவையை விரிவாக்கம் செய்வதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவை புரிவதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள், மத்திய அரசின் குடிமக்களை மையப்படுத்திய திட்டங்களை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பதில், முக்கியமானதாகத் திகழ்கின்றன.

கடந்த 2022, செப்டம்பர் 9-ம் தேதி வரையிலான கணக்குகளின்படி, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  நிறுவனம் 24,58,827 தொலைத்தொடர்பு இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் தற்சார்புக்கான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 4-ஜி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்காக ஒரு லட்சம் இடங்களுக்கு 2022 அக்டோபர் மாதம் டெண்டர் விடப்பட்டது.

குறிப்பிட்ட இடங்களில் 4-ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்க இயலாமல் போனது, தனியார் நிறுவனங்களின் கடும்போட்டி, கடன் நிதிச்சுமை கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு கடுமையாக அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.57,671 கோடிகளையும், எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.14,989 கோடிகளும் இழப்பாக சந்தித்துள்ளன. கடந்த 2022 மார்ச் 31ம் தேதி வரை அவ்விருநிறுவனங்களும் இத்தகைய இழப்பை சந்தித்துள்ளன.  இதைத் தொடர்ந்து மத்திய அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த