முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5-ஜி தொலைத் தொடர்பு சேவை

5-ஜி தொலைத் தொடர்பு சேவை

நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இதுவரை 5-ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022, அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ஜி  தொலைத்தொடர்பு சேவையை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கடந்த 2022 நவம்பர் 26-ம் தேதி வரை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 50 நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டிருக்கிறது. அதிவேக தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஏதுவாக மத்திய அரசு பின்வரும் கொள்கை நடவடிக்கைகளை முன்னிறுத்தி வருகிறது.


செல்ஃபோன் தொலைத்தொடர்பு சேவையை தங்கு தடையின்றி வழங்க  ஏலம் மூலம் அலைவரிசை  ஒதுக்கீடு

அலைவரிசை பங்கீடு மற்றும் வணிகத்திற்கு அனுமதி

அலைவரிசை பங்கீட்டிற்கான கூடுதல் அலைவரிசை பயன்பாடு கட்டணம் 0.5 சதவீதம் நீக்கம்

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அனுமதி

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.குறைமின்கடத்தி சிப்-கள் தயாரிப்பு

உலகளாவிய செமிகண்டக்டர்  வினியோகச் சங்கிலியில் இந்தியாவை முக்கியப் பங்குதாரர் நாடாக மாற்ற வேண்டும் என்றும் உயர்- தொழில்நுட்ப, உயர்தர மற்றும் மிகுந்த நம்பகத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. செமிகான் இந்தியா மாநாடு திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.  குறைமின்கடத்திகளை அதிகமாக பயன்படுத்தும் நாடுகள் வழங்கும் ஊக்கத்தொகைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தில் சில மாறுதல்கள் கொண்டுவரப்படவுள்ளது. இதன் அடிப்படையில் குறைமின்கடத்திகளை அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்வது, உற்பத்தி மற்றும் வடிவமைப்பு செயல்பாடுகளில் உதவி செய்வது போன்றவைகள் செய்துத்தரப்படும்.



குறைமின்கடத்தி துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலை விளக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வர்த்தகத்திற்கு உகந்த சூழலை வழங்குவதற்காக சிறந்த முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

இதுசம்பந்தமாக புதிதாக உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கி பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.

செமிகான் இந்தியா மாநாடு திட்டத்தின் எதிர்கால வடிவமைப்பின் கீழ் குறைமின்கடத்தி மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும்  ஊக்கத்தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும்.  மேலும் 5 வருட காலங்களில் மொத்த விற்பனை 6 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உள்ள விண்ணப்பங்களுக்கு ரூ.30 கோடி வழங்கப்படும். மொஹாலியில் குறைமின்கடத்திக் கூடத்தை நவீனமயமாக்குதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில்  தெரிவித்துள்ளார்.பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் இழப்புகள்

தொலைத்தொடர்பு சேவையை விரிவாக்கம் செய்வதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவை புரிவதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள், மத்திய அரசின் குடிமக்களை மையப்படுத்திய திட்டங்களை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பதில், முக்கியமானதாகத் திகழ்கின்றன.

கடந்த 2022, செப்டம்பர் 9-ம் தேதி வரையிலான கணக்குகளின்படி, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  நிறுவனம் 24,58,827 தொலைத்தொடர்பு இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் தற்சார்புக்கான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 4-ஜி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பதற்காக ஒரு லட்சம் இடங்களுக்கு 2022 அக்டோபர் மாதம் டெண்டர் விடப்பட்டது.

குறிப்பிட்ட இடங்களில் 4-ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்க இயலாமல் போனது, தனியார் நிறுவனங்களின் கடும்போட்டி, கடன் நிதிச்சுமை கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு கடுமையாக அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.57,671 கோடிகளையும், எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.14,989 கோடிகளும் இழப்பாக சந்தித்துள்ளன. கடந்த 2022 மார்ச் 31ம் தேதி வரை அவ்விருநிறுவனங்களும் இத்தகைய இழப்பை சந்தித்துள்ளன.  இதைத் தொடர்ந்து மத்திய அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...