முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் 2022 ஆம் ஆண்டு பார்வை

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் ஆண்டு கண்ணோட்டம்-2022


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை 6 கோடிக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கிய துறையாக விளங்குகிறது.  வேளாண் துறைக்கு அடுத்தபடியாக குறைந்த முதலீட்டு செலவுடன் தொழில்துறையினரை உருவாக்கி சுய வேலைவாயப்புகளை இது ஏற்படுத்துகிறது.  கடன் உதவி, தொழில்நுட்ப உதவி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி காதி, கிராம மற்றும் கயிறு தொழில் நிறுவனங்கள் உட்பட இத்துறையின் வளர்ச்சியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் ஊக்குவிக்கிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்காக புதுதில்லியில் 30.6.2022-ல் உத்யாமி பாரத்  திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், முன்னோடி மாவட்டங்கள் மற்றம் வங்கிகள் ஆகியவற்றிற்கு தேசிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விருதை பிரதமர் வழங்கினார்.

முதல் முறையாக ஏற்றுமதியில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் திறன் மேம்பாட்டு திட்டம் பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டத்தின் புதிய நெறிமுறைகள் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்.  

2022-23-ம் ஆண்டுக்கான  பிரதமரின் வேலை உருவாக்கத் திட்ட பயனாளிகள் டிஜிட்டல் முறையில் நிதியுதவி பரிமாற்றம் செய்தார்.  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் நடத்தப்பட்ட ஹேக்கத்தான் போட்டி வெற்றியாளர்களை அவர் அறிவித்தார். தற்சார்பு இந்தியா நிதியத்தின் 75 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை பயனாளிகளுக்கு டிஜிட்டல் பங்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.

உற்பத்தி ஆலை மற்றும் இயந்திரம் அல்லது உபகரணம் ஆகியவற்றின் முதலீடு மற்றும் மொத்த விற்பனை அளவை அடிப்படையாக கொண்டு உத்யம் பதிவு இணையதளம் 1-7-2020 அன்று தொடங்கப்பட்டது.  சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் எளிதில் வர்த்தகம் புரியும் வகையில் முழுவதும் இணையதளம் வாயிலாக கட்டணமின்றி எந்த ஆவணமும் இல்லாமல் பதிவு செய்து விடலாம். 2-8-2022 அன்று நிலவரப்படி சாதனை அளவாக 1 கோடிக்கும் மேற்பட்ட பதிவுகள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றன. 22-12-2022 அன்றைய நிலவரப்படி இந்த இணையதளத்தில் 1.28 கோடிக்கும் மேற்பட்ட பதிவுகள் இடம் பெற்றன. 

14-9-2022 அன்று நடைபெற்ற தேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை வாரியக் கூட்டத்தின் போது 2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல் உத்யம் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டுச் சேவை இணையதளங்களில் ஒருங்கிணைப்பை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 

14-9-2022 முதல் உத்யம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள  4.06 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டிச் சேவை இணையதளத்தை பயன்படுத்தி உள்ளனர். 

கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற இந்திய வர்த்த்க மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 41-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அரங்கை அத்துறைக்கான அமைச்சர் தொடங்கி வைத்தார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்காக 204 அரங்குகள் ஒதுக்கப்பட்டன.  இதில் 7 சதவீதம் மாற்றுத்திறனாளிகளின் நிறுவனங்களுக்கும் 12 சதவீதம் ஷெட்யூல்டு  வகுப்பை சேர்ந்த ஆண்களுக்கும் 6 சதவீதம் முன்னோடி மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டன. அதிகளவில் மகளிரை உரிமையாளராகக் கொண்ட நிறுவனங்கள் (73%) பங்கேற்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த