முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டில் 4332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்படுகின்றன -மத்திய இணையமைச்சர் தகவல்

நாட்டில் 4332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்படுகின்றன -மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தகவல்

கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.  2014ல் இருந்து இதுவரை மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கோவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும்கூட மீன் சார்ந்த ஏற்றுமதி 32 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.  மனிதர்களுக்கு இருப்பது போன்றே கால்நடைகளுக்கும் அவசர ஊர்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது.   அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. 



இதில் 5 அவரச ஊர்திகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு உள்ளன என்று தகவல் & ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் சார்பில் இன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மோடி@20 நனவாகும் கனவுகள் என்ற தமிழாக்கப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய போது டாக்டர் எல்.முருகன் இவ்வாறு தெரிவித்தார். 


சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு உள்ளன.  ஜன்தன் இயக்கத்தின் மூலம் பெரும்பான்மை மகளிர் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளினால் பெண்கள் இப்பொழுது சமூகப் பாதுகாப்போடும் கௌரவமாகவும் வாழ முடிகிறது.  2047ஆம் ஆண்டு இந்தியாவை முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே நமது இலக்கு என்று டாக்டர் எல்.முருகன் மேலும் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மோடி@20 கனவாகும் நனவுகள் என்ற நூலையும் அம்பேத்கர் & மோடி என்ற நூலையும் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி இரு நூல்களையும் பெற்றுக் கொண்டார்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்த்தாலேயே நம் நாட்டின் வளர்ச்சியை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  பிரதமர் திரு நரேந்திர மோடி செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களும் பாராட்டத்தக்கவை ஆகும்.  உள்கட்டமைப்பில் பிரமிப்பான வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது.  நம் நாட்டை உலக அளவில் சிறந்த நாடாக தலைமையேற்கும் நாடாக பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார்.  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று முதலமைச்சர் ரங்கசாமி தனது உரையில் தெரிவித்தார். 

துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், கோவிட் பெருந்தொற்றில் இருந்து 130 கோடி மக்களையும் காப்பாற்றிய பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கே சேரும்.  உள்நாட்டிலேயே கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, உற்பத்தி செய்து பெருந்தொற்றை நாம் வென்றுள்ளோம் என்று கூறினார். பிரதமர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்களுக்கான முடிவாகவே உள்ளது.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன்பூங்குன்றனாரின் கருத்து இப்பொழுது பிரதமரால் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம், பொதுப்பணி அமைச்சர் திரு க.லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் திரு.க.ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் திரு.ஏகே.சாய் ஜெ சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு பெ.இராஜவேலு, முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் திரு.ஏ.ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக கள அலுவலகத்தின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.  முன்னதாக கண்காட்சியை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு  மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் திரு. தி.சிவக்குமார் கண்காட்சி குறித்து விளக்கிக் கூறினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசு செயலர் திரு.இ.வல்லவன் வரவேற்புரை ஆற்றினார்.  நிறைவில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனர் திரு.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...