முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாட்டில் 4332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்படுகின்றன -மத்திய இணையமைச்சர் தகவல்

நாட்டில் 4332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்படுகின்றன -மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தகவல்

கடந்த 8 ஆண்டுகளில் நாடு மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.  2014ல் இருந்து இதுவரை மீன்வளத்துறைக்காக ரூ.32,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கோவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும்கூட மீன் சார்ந்த ஏற்றுமதி 32 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.  மனிதர்களுக்கு இருப்பது போன்றே கால்நடைகளுக்கும் அவசர ஊர்திகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது.   அதன் பயனாக தற்போது நாட்டில் 4,332 நடமாடும் கால்நடை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. 



இதில் 5 அவரச ஊர்திகள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டு உள்ளன என்று தகவல் & ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் சார்பில் இன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மோடி@20 நனவாகும் கனவுகள் என்ற தமிழாக்கப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய போது டாக்டர் எல்.முருகன் இவ்வாறு தெரிவித்தார். 


சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டு உள்ளன.  ஜன்தன் இயக்கத்தின் மூலம் பெரும்பான்மை மகளிர் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளினால் பெண்கள் இப்பொழுது சமூகப் பாதுகாப்போடும் கௌரவமாகவும் வாழ முடிகிறது.  2047ஆம் ஆண்டு இந்தியாவை முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே நமது இலக்கு என்று டாக்டர் எல்.முருகன் மேலும் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மோடி@20 கனவாகும் நனவுகள் என்ற நூலையும் அம்பேத்கர் & மோடி என்ற நூலையும் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி இரு நூல்களையும் பெற்றுக் கொண்டார்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்த்தாலேயே நம் நாட்டின் வளர்ச்சியை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  பிரதமர் திரு நரேந்திர மோடி செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களும் பாராட்டத்தக்கவை ஆகும்.  உள்கட்டமைப்பில் பிரமிப்பான வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது.  நம் நாட்டை உலக அளவில் சிறந்த நாடாக தலைமையேற்கும் நாடாக பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார்.  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று முதலமைச்சர் ரங்கசாமி தனது உரையில் தெரிவித்தார். 

துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், கோவிட் பெருந்தொற்றில் இருந்து 130 கோடி மக்களையும் காப்பாற்றிய பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கே சேரும்.  உள்நாட்டிலேயே கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, உற்பத்தி செய்து பெருந்தொற்றை நாம் வென்றுள்ளோம் என்று கூறினார். பிரதமர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்களுக்கான முடிவாகவே உள்ளது.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன்பூங்குன்றனாரின் கருத்து இப்பொழுது பிரதமரால் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர்.செல்வம், உள்துறை அமைச்சர் திரு. ஆ.நமச்சிவாயம், பொதுப்பணி அமைச்சர் திரு க.லட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் திரு.க.ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் திரு.ஏகே.சாய் ஜெ சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு பெ.இராஜவேலு, முதலமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் திரு.ஏ.ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக கள அலுவலகத்தின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.  முன்னதாக கண்காட்சியை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு  மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் திரு. தி.சிவக்குமார் கண்காட்சி குறித்து விளக்கிக் கூறினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசு செயலர் திரு.இ.வல்லவன் வரவேற்புரை ஆற்றினார்.  நிறைவில் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனர் திரு.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த