முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான தேசியத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான தேசியத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

நாக்பூர் மற்றும் ஷிரடியை இணைக்கும் சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கிறார்

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்- இந்தத் திட்டத்திற்கு 2017ம்ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

நாக்பூர் மற்றும் பிலாஸ்பூரை இணைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்


சந்திராபூரில் மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தையும், ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த மத்திய ஆராய்ச்சி மையத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.

கேவாவில் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மோபா சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

9வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் உரையாற்றும் பிரதமர், 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் தொடங்கிவைக்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2022 டிசம்பர் 11ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காலை 9.30 மணிக்கு நாக்பூர் ரயில் நிலையம்  சென்றடையும் பிரதமர், அங்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். 

10 மணிக்கு சுதந்திர பூங்கா மெட்ரோ நிலையத்தில் இருந்து கப்ரி மெட்ரோ நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அங்கு,  நாக்பூர் மெட்ரோ ரயில் பேஸ் 1-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நாக்பூர் மெட்ரோ ரயிலின் 2ம் கட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.  10.45 மணிக்கு நாக்பூர் மற்றும் ஷிரடியை இணைக்கும்  சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுங்சாலையைத் திறந்து வைக்கிறார். 11.45 மணிக்கு நாக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர், நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

11.30 மணிக்கு நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் ரூ.1500 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வேத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். நாக்பூரில் தேசிய ஒருங்கிணைந்த சுகாதார  நிறுவனத்திற்கு (என்ஐஓ) அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல் நாக்பூர் நதி மாசுக்குறைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், சந்திராபூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதுடன், ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது குறித்த மத்திய ஆராய்ச்சி மையத்தையும் திறந்துவைக்கிறார் பிரதமர்.

3.15 மணிக்கு கோவா செல்லும் பிரதமர், அங்கு 9-வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் அவர் திறந்துவைக்கிறார்.

பின்னர் 5.15 மணிக்கு கோவாவில்  மோபா சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் திறந்துவைக்கிறார்.

பின்னணி:

சம்ருதி மகாமார்க் :

நாக்பூர் மற்றும் ஷிரடி இடையேயான 520 கிலோ மீட்டர் தொலைவை இணைக்கும்  சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுங்சாலையைத் திறந்து வைக்கிறார்.

இது நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு மற்றும உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பிரதமரின் கண்ணோட்டத்தின்படியே  சம்ருதி மகாமார்க்  அல்லது நாக்பூர்-மும்பை சூப்பர் தொடர்பு விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் மெட்ரோ

பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நாக்பூர் மெட்ரோ பேஸ்-I, நகர்புறப் போக்குவரத்தில் புரட்சி படைக்கும் மற்றொரு திட்டமாகும். 

நாக்பூர் எய்ம்ஸ்: நாடு முழுவதும் சுகாதார வசதிகளை பலப்படுத்தும் பிரதமரின் நிலைப்பாட்டிற்கு  உதாரணமாக அமைக்கப்பட்டுள்ளது நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு பிரதமர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார். இது மத்திய அரசின் பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கிழ் கட்டப்பட்டது.

ரயில் திட்டங்கள் : நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நாக்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கிவைக்கிறார். 

நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர், நாக்பூர் ரயில் நிலையம் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்கள் முறையோ, ரூ.590 கோடி, ரூ. 360 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படுகிறது.

ஒற்றை  சுகாதார அணுகுமுறை

பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ள தேசிய ஒற்றை  சுகாதார நிறுவனம்,  ஒற்றை  சுகாதார அணுகுமுறையின் கீழ் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் இலக்கின் படி உருவாக்கப்படுகிறது.

ஒற்றை சுகாதார அணுகுமுறை என்பது விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலலின் சுகாதாரத்துடன் மனிதனை இணைப்பது.  அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்களை, ஒற்றை சுகாதார அணுகுமுறையில் கையாளப்படும்.

இந்த நிறுவனம் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.

மோபா சர்வதேச விமானநிலையம், கோவா:

நாடுமுழுவதும் உலகத்தரம் வாய்ப்பு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் கண்ணோட்டத்தின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  பிரதமர் திறந்துவைக்க உள்ள மொபா சர்வதேச விமானநிலையத்திற்கு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த