முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான தேசியத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான தேசியத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

நாக்பூர் மற்றும் ஷிரடியை இணைக்கும் சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கிறார்

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்- இந்தத் திட்டத்திற்கு 2017ம்ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

நாக்பூர் மற்றும் பிலாஸ்பூரை இணைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்


சந்திராபூரில் மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தையும், ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த மத்திய ஆராய்ச்சி மையத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.

கேவாவில் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மோபா சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

9வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் உரையாற்றும் பிரதமர், 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் தொடங்கிவைக்கிறார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2022 டிசம்பர் 11ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காலை 9.30 மணிக்கு நாக்பூர் ரயில் நிலையம்  சென்றடையும் பிரதமர், அங்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். 

10 மணிக்கு சுதந்திர பூங்கா மெட்ரோ நிலையத்தில் இருந்து கப்ரி மெட்ரோ நிலையத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அங்கு,  நாக்பூர் மெட்ரோ ரயில் பேஸ் 1-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நாக்பூர் மெட்ரோ ரயிலின் 2ம் கட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.  10.45 மணிக்கு நாக்பூர் மற்றும் ஷிரடியை இணைக்கும்  சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுங்சாலையைத் திறந்து வைக்கிறார். 11.45 மணிக்கு நாக்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர், நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

11.30 மணிக்கு நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் ரூ.1500 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வேத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். நாக்பூரில் தேசிய ஒருங்கிணைந்த சுகாதார  நிறுவனத்திற்கு (என்ஐஓ) அடிக்கல் நாட்டுகிறார். இதேபோல் நாக்பூர் நதி மாசுக்குறைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், சந்திராபூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பெட்ரோ-ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதுடன், ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது குறித்த மத்திய ஆராய்ச்சி மையத்தையும் திறந்துவைக்கிறார் பிரதமர்.

3.15 மணிக்கு கோவா செல்லும் பிரதமர், அங்கு 9-வது உலக ஆயுர்வேத மாநாட்டின் நிறைவுவிழாவில் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் 3 தேசிய ஆயுர்வேத நிறுவனங்களையும் அவர் திறந்துவைக்கிறார்.

பின்னர் 5.15 மணிக்கு கோவாவில்  மோபா சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் திறந்துவைக்கிறார்.

பின்னணி:

சம்ருதி மகாமார்க் :

நாக்பூர் மற்றும் ஷிரடி இடையேயான 520 கிலோ மீட்டர் தொலைவை இணைக்கும்  சம்ருதி மகாமார்க் முதற்கட்ட நெடுங்சாலையைத் திறந்து வைக்கிறார்.

இது நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு மற்றும உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பிரதமரின் கண்ணோட்டத்தின்படியே  சம்ருதி மகாமார்க்  அல்லது நாக்பூர்-மும்பை சூப்பர் தொடர்பு விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் மெட்ரோ

பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நாக்பூர் மெட்ரோ பேஸ்-I, நகர்புறப் போக்குவரத்தில் புரட்சி படைக்கும் மற்றொரு திட்டமாகும். 

நாக்பூர் எய்ம்ஸ்: நாடு முழுவதும் சுகாதார வசதிகளை பலப்படுத்தும் பிரதமரின் நிலைப்பாட்டிற்கு  உதாரணமாக அமைக்கப்பட்டுள்ளது நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு பிரதமர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார். இது மத்திய அரசின் பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கிழ் கட்டப்பட்டது.

ரயில் திட்டங்கள் : நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நாக்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கிவைக்கிறார். 

நாக்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர், நாக்பூர் ரயில் நிலையம் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்கள் முறையோ, ரூ.590 கோடி, ரூ. 360 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படுகிறது.

ஒற்றை  சுகாதார அணுகுமுறை

பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ள தேசிய ஒற்றை  சுகாதார நிறுவனம்,  ஒற்றை  சுகாதார அணுகுமுறையின் கீழ் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் இலக்கின் படி உருவாக்கப்படுகிறது.

ஒற்றை சுகாதார அணுகுமுறை என்பது விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலலின் சுகாதாரத்துடன் மனிதனை இணைப்பது.  அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்களை, ஒற்றை சுகாதார அணுகுமுறையில் கையாளப்படும்.

இந்த நிறுவனம் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.

மோபா சர்வதேச விமானநிலையம், கோவா:

நாடுமுழுவதும் உலகத்தரம் வாய்ப்பு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் கண்ணோட்டத்தின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  பிரதமர் திறந்துவைக்க உள்ள மொபா சர்வதேச விமானநிலையத்திற்கு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...