முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசி இந்துப் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்களுடன் ரயில்வே அமைச்சர் கலந்துரையாடல்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் திரு அஷ்வினி வைஷ்ணவ் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்

சென்னை, மதுரை உள்பட 50 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்- ரயில்வே அமைச்சர்

ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும்   தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் இன்று வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஐஐடி  மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பிரதமர் தலைமையில், முதலில் நாடு, எப்போதும் நாடே முதல் என்ற உணர்வுடன்  உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.  பல்வேறு நகரங்களின்  ரயில் நிலையங்களில் அந்த நகரத்தின் அடையாளம் தெளிவாகத் தெரிய வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.



பொதுவாக, நகரின் இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் ரயில் நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர்,  இதை நிறைவேற்றும் வகையில் ரயில் நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதனுடன், காத்திருப்பு பட்டியல்கள், இடையூறுகள் மற்றும் ரயில் இயக்கங்களில் ஏற்படும் தாமதங்களிலிருந்து மக்களை விடுவிக்கும் வகையில், திறன்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன, என்று அவர் கூறினார்.

 பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் ரயில் மற்றும் மின்னணு உள்ளிட்ட பிற துறைகளில் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருந்தது. இன்று, இந்திய பொறியாளர்களின் ஆதரவுடன்,இந்த துறைகளில் பெரிய அளவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என திரு வைஷ்ணவ் கூறினார்.

நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு  ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும் என்று திரு வைஷ்ணவ் தெரிவித்தார். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாரணாசி சந்திப்பு, காசி ரயில் நிலையம் ஆகியவை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அடுத்த 50 ஆண்டு கால தேவைகளை கருத்தில் கொண்டு இந்த நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அகமதாபாத், காந்திநகர், சார்பாக் லக்னோ, சென்னை, பெங்களூரு கண்டோன்மென்ட், மதுரை உள்ளிட்ட 50 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றில் 45 ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதையும்  இணைக்கும் வகையில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற  பிரதமரின் தொலைநோக்கு பார்வையை காசி தமிழ் சங்கமம் நிறைவேற்றுகிறது என்றார்.

முன்னதாக, பண்டிட் மதன் மோகன் மாளவியா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக தற்போது இந்தியா மாறியுள்ளது என்று திரு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். மொபைல் கோபுரங்கள் மற்றும் 5ஜி தொழில்நுட்ப  வசதிகள் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மாணவர்கள் முன்வரவேண்டும் என்று  அவர் கேட்டுக்கொண்டார்.

5ஜி துறையிலும் பணிகள் வேகமாக நடந்து வருவதாக கூறிய திரு வைஷ்ணவ்,  நாட்டில் உள்ள 100 பல்கலைக்கழகங்களில் 5ஜி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது ஒவ்வொரு வாரமும் 2500,  5ஜி கோபுரங்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்,   அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் வாரந்தோறும் 10,000 கோபுரங்களை அமைக்குமாறு   பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த தீபாவளிக்குள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 5ஜி கட்டமைப்பு  சென்றடையும் என்று அமைச்சர் உறுதியளித்தார்   

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி “காசி தமிழ்ச் சங்கமம் விரைவு ரயில்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

காசி தமிழ்ச் சங்கமம் பயணத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த குழுவினருக்கு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே ‘காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே, தொலைத் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். வாரணாசி சந்திப்பு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டும் மறுசீரமைப்புத் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

திரு அஸ்வினி வைஷ்ணவ் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற எட்டாவது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் அவர்களுக்கு கிடைத்த உபசரிப்புக் குறித்தும் அவர்கள் விளக்கி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக (ஐஆர்சிடிசி) குழுவினரின் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். இதுபோன்ற மக்களிடையேயான பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது மரபுகள், அறிவு மற்றும் கலாச்சாரத்தில் பிணைப்பை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இந்த இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வை நினைவு கூரும் விதமாக காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே ‘காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், விரைவில் இந்த ரயில் சேவை தொடங்கும் என்றும் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

வாரணாசி சந்திப்பு ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புத் திட்டங்களையும் மத்திய ரயில்வே அமைச்சர் ஆய்வு செய்தார். வருங்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பைத் திட்டமிடுமாறு அவர்  அறிவுறுத்தினார்.

வாரணாசி ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர், இந்த ரயில் நிலையத்தை விமான நிலைய முனையமாக மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். இந்த ரயில் நிலையத்தை உலகிலேயே சிறந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை அடுத்த 50 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டு முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார். வாரணாசி நகரப் பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதை எளிதாக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் 75-வது ஆண்டு விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சகத்தால் ஒரு மாத கால நிகழ்ச்சியான காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசியில் நடைபெறும் இந்தத் விழாவைக் காண பல்வேறு தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே அமைச்சகமும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமும் (ஐஆர்சிடிசி) நிகழ்ச்சிக்கு வருவோரை காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்தோம்பல் பணிகளை சிறப்பாகச் செய்து வருகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த