முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூய்மைப் பணியாளர்கள் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு- உச்சநீதிமன்றம்

தூய்மைப் பணியாளர்கள் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு- உச்சநீதிமன்றம் தீர்ப்பு, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில்  விரிகோடை லட்சுமணன்.  அரசு பள்ளியில் தூய்மைப் பணியாளராக 1992 ஆம் ஆண்டு சேர்ந்தவருக்கு ஆரம்ப கால தொகுப்பு ஊதியமாக மாதம் ரூபாய் 150. மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் 2002 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டதையடுத்து 2012. ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பணி நிரந்தரப்படுத்துவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு தனக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென  விண்ணப்பித்தவருக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க முடியாதென மறுத்ததையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தனி நீதிபதி, லட்சுமணனுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்குமாறு 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசின்  பள்ளிக் கல்வித் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் 


வழக்கை 2020 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின்  இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் லட்சுமணனுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதியப் பலன்களைக் கணக்கிட்டு 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி தள்ளுபடி செய்ததனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 

 உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது  நீதிபதி வழங்கிய தீர்ப்பில், லட்சுமணனுக்கு அவருடைய ஓய்வூதிய பலன்களை பெற உரிமை உள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும் தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இத்தனை ஆண்டு காலமாக இந்த வழக்கை தேவையில்லாமல் தமிழ்நாடு அரசின்  பள்ளிக் கல்வித் துறை இழுத்தடித்துள்ளது.எனவே ரூபாய் 1 லட்சம் அபராதத்தை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை செலுத்துமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு செலுத்தும் ரூபாய் 1 லட்சம் அபராததை உச்சநீதிமன்ற ஊழியர்கள் நலச் சங்கத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை இழுத்தடித்ததற்கான செலவை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க லட்சுமணனுக்கு உரிமை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.பொதுவாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஆனால் லட்சுமணன் வழக்கு விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் கொரோனா பரவல் காலகட்டத்தை சேர்க்காமல் 156 நாட்கள் தாமதமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்தக் காலதாமதமாக மேல்முறையீடு செய்ததற்கு தமிழ்நாட அரசு எந்தஒரு உறுதியான காரணத்தையும் கூறவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால்  தமிழ் நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தாமதத்தை இந்த நீதிமன்றம்  ஏற்கவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருந்தார். தூய்மை பணியாளரின் ஓய்வூதிய உரிமைகளை காத்து அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் சமீபத்திய கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. சாமானிய மனிதர்களின் கஷ்டங்களையும் போராட்டங்களையும் கேட்பதற்காக உச்சநீதிமன்றம் உள்ளது. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே நீதிமன்றங்களின் முக்கிய பங்கு என தலைமை நீதிபதி சந்திரசூட்  குறிப்பிடுவார் என்பது இங்கு நினைவு  கூறத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...