முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூய்மைப் பணியாளர்கள் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு- உச்சநீதிமன்றம்

தூய்மைப் பணியாளர்கள் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு- உச்சநீதிமன்றம் தீர்ப்பு, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில்  விரிகோடை லட்சுமணன்.  அரசு பள்ளியில் தூய்மைப் பணியாளராக 1992 ஆம் ஆண்டு சேர்ந்தவருக்கு ஆரம்ப கால தொகுப்பு ஊதியமாக மாதம் ரூபாய் 150. மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் 2002 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டதையடுத்து 2012. ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பணி நிரந்தரப்படுத்துவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு தனக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென  விண்ணப்பித்தவருக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க முடியாதென மறுத்ததையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தனி நீதிபதி, லட்சுமணனுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்குமாறு 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசின்  பள்ளிக் கல்வித் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் 


வழக்கை 2020 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின்  இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் லட்சுமணனுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதியப் பலன்களைக் கணக்கிட்டு 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி தள்ளுபடி செய்ததனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 

 உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது  நீதிபதி வழங்கிய தீர்ப்பில், லட்சுமணனுக்கு அவருடைய ஓய்வூதிய பலன்களை பெற உரிமை உள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும் தூய்மை பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இத்தனை ஆண்டு காலமாக இந்த வழக்கை தேவையில்லாமல் தமிழ்நாடு அரசின்  பள்ளிக் கல்வித் துறை இழுத்தடித்துள்ளது.எனவே ரூபாய் 1 லட்சம் அபராதத்தை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை செலுத்துமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு செலுத்தும் ரூபாய் 1 லட்சம் அபராததை உச்சநீதிமன்ற ஊழியர்கள் நலச் சங்கத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை இழுத்தடித்ததற்கான செலவை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க லட்சுமணனுக்கு உரிமை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.பொதுவாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஆனால் லட்சுமணன் வழக்கு விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் கொரோனா பரவல் காலகட்டத்தை சேர்க்காமல் 156 நாட்கள் தாமதமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்தக் காலதாமதமாக மேல்முறையீடு செய்ததற்கு தமிழ்நாட அரசு எந்தஒரு உறுதியான காரணத்தையும் கூறவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால்  தமிழ் நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தாமதத்தை இந்த நீதிமன்றம்  ஏற்கவில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்திருந்தார். தூய்மை பணியாளரின் ஓய்வூதிய உரிமைகளை காத்து அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் சமீபத்திய கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. சாமானிய மனிதர்களின் கஷ்டங்களையும் போராட்டங்களையும் கேட்பதற்காக உச்சநீதிமன்றம் உள்ளது. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே நீதிமன்றங்களின் முக்கிய பங்கு என தலைமை நீதிபதி சந்திரசூட்  குறிப்பிடுவார் என்பது இங்கு நினைவு  கூறத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த