முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் 2023 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம்  ஒன்பதாம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குமென சபாநாயகர் அறிவித்துள்ளார்.




2023 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்குகிறதென சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டபேரவை கூடும் நாட்களை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றுவார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து காலை 10 மணிக்கு மாண்புமிகு ஆளுநர்  உரையை நிகழ்த்த வருகை தர இசைவு தெரிவித்துள்ளார் என சபாநாயகர் தெரிவித்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் குறிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இருதரப்பிலிருந்தும் எந்தவித தகவலும் வரவில்லை.

ஒரு கட்சிக்கு அக்கட்சி சார்ந்த கொள்கைகளில் பிரச்சினை இருந்தால் அவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு எதிராக அரசோ, சட்டமன்றமோ இல்லை.


கொரோனா தொற்று பரவல்  தமிழகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது. அனைவரும் முககவசம் அணிய வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் சட்டமன்ற கூட்டத்தின் போதும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றப்படும்.


அரசு தரப்பில் விசாரணை ஆணைய அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அறிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோரினால் அந்த அறிக்கைகளை சட்டமன்றத்தில் வைத்து நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும். ஆளுநர்  உரை முழுமையாக நேரலையாக ஒளிபரப்பப்படும். சட்டமன்ற நிகழ்வுகளை பொறுத்தமட்டில் கேள்வி-நேரம் வரை நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை நேரலையாக ஒளிபரப்பு செய்வது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனக் கூறினார்.


சட்டசபையில் ஆளுநர்  ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அவரது உரை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக இருக்கும். அதன்பின்னர், அந்த உரையை தமிழில் சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் முடியும்.


தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக, அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில், சட்டமன்ற அனைத்துக் கட்சி சார்பில் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.

மூன்று அல்லது நான்கு நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறுமென்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தொடரில், ஆளுநர்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். நிறைவு நாளில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் பேசுவார்கள். சட்டசபையின் இந்த கூட்டத்தொடர் நிறைவடையும். அடுத்து பிப்ரவரி மாதம் 2023-2024-ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையும் வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கையும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறும்.

அதன்பிறகு, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும். இந்த கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த