முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுவாமி விமர்சனம்

கொலிஜியம் அமைப்புக் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெளிப்படையா க பேசி வருவது அநாகரீகமானதென பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் தலையிடுவது சரியானதல்லவென கிரிண் ரிஜூஜூ பேசியுள்ளதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி,


பிரதமர் நரேந்திர மோடி அவரது அமைச்சரவையைத் தேர்ந்தெடுப்பது போல கொலிஜியம் செயல்பட வேண்டுமென்று விரும்புகிறாரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக அவரது  டிவிட்டரில், 'கொலிஜியம் நீதிபதிகளை தேர்வு செய்யும் விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் தலையிடக்கூடாது. நீதிபதிகளின் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது சில நேரங்களில் மறுக்கலாம். ஆனால் இது குறித்து அமைச்சர் கூறியிருக்கும் கருத்து அநாகரீகமானது. கொலிஜியத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள் அவர்களுக்கு தெரியாதவர்களைத் தேர்வு செய்வதில்லை என்று அமைச்சர் கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவரது அமைச்சரவையைச் தேர்ந்தெடுப்பது போல கொலிஜியம் செயல்பட வேண்டுமென்று அவர் விரும்புகிறாரா?' எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,


இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்தை கொலிஜியம் தான் மேற்கொள்கிறது. உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியத்திலுள்ள நீதிபதிகள் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த முறைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்  கொலிஜியம் பரிந்துரைத்த பட்டியலிலிருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைபஹ பெற்று புதிய நீதிபதிகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் இறுதி செய்தனுப்பும். ஆனால், மத்திய அரசு தன்னிச்சையாக நீதிபதிகளை தேர்வு செய்ய முடியாது. இது இந்த கொலிஜியம் அமைப்பை எதிர்ப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவதன் வெளிப்பாடாகதான் சில நாட்களாக சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூவின் பேச்சும் அமைந்திருக்கிறது. கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுபஹ பேசியவர், '1993 ஆம் ஆண்டு வரை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டத்துறை மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் படி நடைபெற்றது. அக்காலங்களில் நாடு சிறப்பான நீதிபதிகளைக் கொண்டிருந்தது. இதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. அதாவது குடியரசுத் தலைவர் தான் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பது தான் அது. கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனத்தை நாட்டு மக்கள் எதிர்க்கின்றனர். அதே போல தங்கள் சகோதரர்களையே சக நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவில் தான் நிகழ்கிறது. கொலிஜியம் அமைப்பால் அதில் இருக்கும் நீதிபதிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகளுக்கு நீதியை வழங்குவது தான் பிரதான பணி' என்று அவர் கூறியிருந்தார். 

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சில நாட்களுக்கு முன் 'நீதித்துறை சீர்திருத்தம்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், 'தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாகவும், நன்கு பரிட்சையமான நீதிபதிகளை பதவி உயர்வுக்காகவும் கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள் பரிந்துரைக்கின்றனர். இது மிகவும் தவறான விஷயமாகும். தங்களுக்கு தெரியாதவர்களை அவர்கள் பரிந்துரை செய்வதில்லை. என்னுடைய விமர்சனம் என்பது நீதித்துறை மீதோ அல்லது நீதிபதிகள் மீதோ கிடையாது, நான் தற்போது நடைமுறையில் இருக்கும் கொலிஜியம் அமைப்பைத் தான் விமர்சிக்கிறேன்' என்று அமைச்சர்  பேசியிருந்தார். இந்தப் பின்னணியில் தான் டாக்டர்  சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. கொலிஜியம் அமைப்பு முறை குறித்து 2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததற்கு மாற்றாக 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை' கொண்டு வந்தது. ஆனால் இந்த ஆணையத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்துவிட்டது என்பது இங்கு பார்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...