முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொழும்பு பாதுகாப்பு அமைப்பின் ஆதரவுடன் கடலோர பாதுகாப்பு மாநாடு

கொழும்பு பாதுகாப்பு அமைப்பின் ஆதரவுடன் கடலோர பாதுகாப்பு மாநாடு தொடங்கியது

கொழும்பு பாதுகாப்பு அமைப்பின் ஆதரவுடன் கடலோர பாதுகாப்பு மாநாடு சென்னையில் இன்று (01.12.2022) தொடங்கியது.  இந்தியா,  மாலத்தீவுகள், இலங்கை, மொரீஷியஸ் ஆகிய நான்கு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கடலோர காவல் படையினர் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.  கொழும்பு பாதுகாப்பு அமைப்பின் பார்வையாளரான பங்களாதேஷும் இந்த மாநாட்டில் பங்கேற்கிறது.


இந்திய அரசின் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே,  முதலாவது கடலோர பாதுகாப்பு மாநாடு 2022-ஐ தொடங்கிவைத்தார். அங்கு கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர்,   கடல்சார்  பாதுகாப்பு  பிரச்சனையை எதிர்கொள்ளும்போது கடைப்பிடிக்க மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கி உள்ள ஐந்து அடிப்படைக் கோட்பாடுகளை அவர் மேற்கோள் காட்டினார்.

சட்டப்படியான கடல் வழி வர்த்தகம்,  கடல் சார்ந்த  பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது, இயற்கைச்  சீற்றங்கள் மற்றும் கடல் சார் அச்சுறுத்தல்களைக் குறைப்பது,  கடல் சார்ந்த சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, கடல் சார் வணிகத்தை அதிகரிப்பதற்காக நீடிக்க வல்ல அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் பொறுப்பான கடல் வழி போக்குவரத்தை ஊக்கப்படுத்துவது, கடல் சார் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை அதிகரிப்பது, திட்டமிட்ட குற்ற செயல் மற்றும் பயங்கரவாதத்தை முறியடிப்பது, சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவது,  முக்கியமான கடலோர அடிப்படைக்  கட்டமைப்பை பாதுகாப்பது, பேரிடர் காலத்தில் நிவாரணம் அளிப்பது  ஆகியவற்றின் தேவையைப் பாதுகாப்பு துறை செயலாளர் எடுத்துரைத்தார்.

கடலோர காவல் படையினருக்கும் கடல் சார்ந்த சட்ட அமலாக்க முகமைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை,  பங்கேற்கும் நாடுகள் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தொடங்கப்பட்ட 40 ஆண்டுகளுக்குள் இந்திய கடலோர காவல் படை தன்னை வலுவான தொழில்முறை சார்ந்த சக்தியாக வளர்த்துக் கொண்டிருப்பதற்கு பாதுகாப்பு துறை செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.  மேலும் தூய்மையான கடல்கள்,  பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் பங்குதாரர் முகமைகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தியிருப்பதற்கும் அவர் பாராட்டினார்.

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் திரு விக்ரம் மிஸ்ரி உரையாற்றுகையில் கடலோர காவல் படையினரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்த மாநாட்டில் பேசிய இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குனர் வி. எஸ். பத்தானியா,  கடல் சார்ந்த பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தை உறுதி செய்வதற்கும்  கூட்டான பொதுக்கருத்தை எட்டுவதற்கும் இத்தகைய அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.  கடலோரப்  பாதுகாப்பு மாநாடு 2022-ன் மையப்பொருள், கடலோரப் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகள் என்பதாகும். ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் கடல் சார்ந்த காவல்துறை தலைவர்களும் தேசிய மற்றும் மாநில அளவிலான சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். கடலோரப் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் கூட்டான எதிர் நடவடிக்கை,  சர்வதேச கடல் சார்ந்த சட்டம் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட முகமைகளின் பங்கு,  கடலோர பாதுகாப்புக்கான தொழில்நுட்ப தீர்வுகள், நீல  கடலோரப் பாதுகாப்பின் மூலம் நீலப் பொருளாதரத்தை நனவாக்குதல்,  பிராந்திய  கடலோர பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண  ஒத்துழைப்புக்கான பகுதிகளை கண்டறிதல், சமகால பிரச்சனைகள் போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...