அட்டவணைப் பட்டியலினம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான இலவச பயிற்சித் திட்டம்
நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் ஷெட்யூல்டு மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 3,500 பேருக்கு இலவச பயிற்சியை அளிப்பதற்காக மே 2022 அன்று இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஷெட்யூல்டு மற்றம் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கான இந்த இலவசப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சேருவதற்கு மொத்தம் 50,177 பேர் விண்ணப்பங்களை அளித்தனர்.
இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களில் 2,100 மாணவர்களுக்கும் 12-ம் வகுப்பு படித்தவர்களில் 1,400 மாணவர்களுக்கும் இலவசப் பயிற்சி அளிக்கப்படும்.
மொத்தம் பெறப்பட்ட 50,177 விண்ணப்பங்களில் பட்டப்படிப்பு படித்த 44,934 மாணவர்களும் 12-ம் வகுப்பு படித்த 5,243 மாணவர்களும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து 1,551 மாணவர்கள் இலவச பயிற்சிக்காக விண்ணப்பங்களை அளித்துள்ளனர். குடிமைப் பணித் தேர்வு, மத்தியப் பணியாளர் தேர்வு, ரயில்வே தேர்வு, வங்கித் தேர்வு, ஜெ.இ.இ. / நீட் தேர்வு, ஐஇஎஸ், சிஏடி / சிஎம்ஏடி, ஜிஆர்இ / ஜிஎம்ஏடி / எஸ்ஏடி / டோஃபல், சிஏ-சிபிடி / கேட், சிபிஎல், என்டிஏ / சிடிஎஸ் ஆகிய தேர்வுகளில் பங்கேற்பதற்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்தகவலை மாநிலங்களவையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு நாராயணசாமி எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.
கருத்துகள்