முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும் நாளையும் குடியரசுத்தலைவர் சுற்றுப்பயணம்

 குடியரசுத் தலைவர் இன்றும் நாளையும் ஆந்திராவிற்கு சுற்றுப்பயணம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆந்திரப் பிரதேசத்திற்கு, 2022 டிசம்பர் 4ம் தேதி  முதல் 5ம் தேதி வரை சுற்றுப்பயணம். மேற்கொள்கிறார். 2022 டிசம்பர் 4ம் தேதி விஜயவாடாவில் ஆந்திரப்பிரதேச அரசால் வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.



அன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் திருமதி. திரௌபதி முர்மு, காணொலிக் காட்சி மூலம், பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, பழங்குடியின விவகாரங்கள் துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 




2022 டிசம்பர் 5ம் தேதி, திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயத்திற்குச் செல்கிறார். அங்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், குடியரசுத் தலைவர்  திருமதி. திரௌபதி முர்மு கலந்துரையாட உள்ளார்.ஆந்திராவில், அம்மாநில அரசு சார்பில் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

விஜயவாடாவில் இன்று (2022 டிசம்பர் 4) ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமக்கு அளித்த  சிறப்பான வரவேற்புக்காக, ஆந்திர அரசுக்கும், அம்மாநில மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, வம்சத்ரா, நாகவல்லி போன்ற நதிகளை ஆந்திர மாநிலம் வரமாகப் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர்,தாயாகக் கருதும் நதிகளைப் பாதுகாப்பதுடன், அதன் தூய்மையை உறுதிசெய்ய வேண்டியது, அவற்றின் பிள்ளைகளாகிய நம் அனைவரின் கடமை என்றார்.

தலைசிறந்த புத்தமத தத்துவஞானியான நாகார்ஜூனா பெயரில், நாகார்ஜூனா சாகர் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுவது, வளர்ச்சிக்கும், பாரம்பரியத்திற்கும் தொன்றுதொட்டு உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

 பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம்  அளிப்பதில், முன்உதாரணமாகத் திகழும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல பெண்கள், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதையும் நினைவுகூர்ந்தார்.

மக்களுக்கு சேவை செய்வதன் மூலமே, நாட்டிற்கு சேவையாற்ற முடியும் என்ற அவர், ஆந்திர மாநில மருமகளும், சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான சரோஜி நாயுடுவின் கோட்பாட்டை, ஜார்க்கண்ட் ஆளுநராக  தாம் இருந்த காலங்களில் எப்போதும் நினைவில் கொண்டிருந்ததாக திருமதி. திரௌபதி முர்மு குறிப்பிட்டார்.

ஆந்திராவைச் சேர்ந்த,  சுதந்திரப் போராட்ட தியாகியான அல்லூரி சீதாராம ராஜூவின் 125 பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், அல்லூரி சீதாராம ராஜூ, பகவான் பிர்ஷா முண்டா ஆகியோர், தங்கள் இளமைக் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தாய்நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். எனவே   இத்தகைய தியாகிகள் பற்றி, நமது இளையத்தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

நவீன அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத்தின் மூலம்,  இந்தியாவின் வளர்ச்சியில் ஆந்திரா முக்கியப் பங்காற்றுவதாக திருமதி. திரௌபதி முர்மு கூறினார். உயிரி -வேதியியல் மற்றும் மருந்தகத்துறையில் டாக்டர் . எல்லபரகடா சுப்பாராவ்வின் அளப்பரியப் பங்களிப்பு, பல மருந்துகள் உற்பத்திக்கு வித்திட்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் இஸ்ரோ, விண்வெளி அறிவியலில் புதிய முன்னுதாரணங்களைப் படைத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்த அவர், ஆந்திரப் பிரதேச மக்கள் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப்பிடிப்பதாகவும் கூறினார்.

எனவே நாட்டின் வளர்ச்சியில், ஆந்திர மக்கள், தங்கள் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று தாம் நம்புவதாகவும்,  திருமதி. திரொளபதி முர்மு தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...