திரைப்பட நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா
இணைந்து நந்தா, பிதாமகன், படம் வந்து வெர்றி பெற்றது அடுத்து ”வணங்கான்” எனும் திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றும் நிலையில் தற்போது இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள செய்தித் தகவல் கடிதத்தில்
கூறியுள்ளதாவது, "என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா ? என்கின்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்ம சங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது தான் என் கடமையாக இருக்கிறது.
எனவே ”வணங்கான்” திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவெடுத்து இருக்கின்றோம்.
அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்னில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ”வணங்கான்” படம் பணிகள் தொடரும் நன்றி" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






கருத்துகள்