முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன உச்சநீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகளின் சார்பில் சிறப்பாக வாதம்

ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன.


எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ள நிலையில் இவ் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகளின்  அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. நீதிபதிகள் கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு தினமும் வழக்கை விசாரிக்கிறது.  இன்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை முன்வைத்தார். அதில்  "தமிழகத்தின் கலாசார விவகாரத்தில் எப்படித் தலையிட முடியும்", என வினா எழுப்பிய நிலையில் ஜல்லிக்கட்டு  நடத்த  2014 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில்,

தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றி 2017 ஆம் ஆண்டு முதல் போட்டி நடத்தி வருகிறது. என்றார் மேலும் விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான ராகேஷ் திரிவேதி வாதாடும் போது, விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய நாடாளுமன்றம் , மற்றும் சட்டமன்றப் பேரவைக்கு அதிகாரமுண்டு. குறிப்பாக விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் இயற்ற சட்டசபைக்கு முழுமையான அதிகாரமுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் பிரத்யேகமான கலாசாரத்தைக் கொண்டுள்ளது.சிலர் , சைவ உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது சிலரின் கலாச்சாரமாக உள்ளது. இதனால், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இறைச்சி சாப்பிடும் அசைவப் பிரியர்களை தடுத்து நிறுத்த முடியுமா?விலங்குகள் பலியிடுவது என்பது மதத்தின் ஒரு அங்கமாகவே கூட இருக்கிறது. தற்போதைய சூழலில் விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஜல்லிக்கட்டு, என்பது ஜாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டது. இவ்வாறு அவர் வாதிட்டார்.தொடர்ந்து மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடும் போது, தமிழகத்தின் கலாசாரம் தொடர்பான விவகாரத்தில் எப்படித் தலையிட முடியும்? மாவட்ட ஆட்சித் தலைவர்  குழு ஆய்வுக்கு பிறகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்க முடியும். ஜல்லிக்கட்டுக்கு குடியரசுத் தலைவர்  அனுமதி வழங்கியது சட்டப்பூர்வமானது. மாநில அரசுகளின் முடிவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இவ்வாறு அவர் வாதிட்டார்.                     தமிழர்களின் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஓர் இயங்கியல் பண்பாடே.

"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."  தமிழ் நாட்டின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாட்டு அமைப்புக்கு என்ன தெரியும் என உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்ளிட்ட மிருக விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக அயல் நாட்டு அமைப்பால்  தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஆறாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,  ‘‘ஜல்லிக்கட்டு என்பது எங்களது அடிப்படை உரிமை, கலாச்சாரமாகும்.

இதுகுறித்து முடிவெடுக்க நீதிமன்றம் ஒன்றும் நடுவர் கிடையாது. இதில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உயிரிழப்பு ஏற்படுகிறதென மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. சாலையில் நாம் சென்று கொண்டிருக்கும் போது கூட தான் திடீரென மரணம் ஏற்படுகிறது. அதற்காக செல்லாமல் இருக்க முடியுமா. இருப்பினும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்பதற்காகத் தான் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன்பு காளைகளுக்கு பல்வேறு சோதனைகள் நடத்துகிறீர்கள்?. அப்படியெனில் விளையாட்டு முடிந்தும் பரிசோதனை செய்யப்படுமா என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி, கண்டிப்பாக நடத்துகிறோம். இதனை நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். அதையடுத்து ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஏதிர்மனுதாரர்  தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து,‘‘ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டல்ல அது திருவிழா. அது கோவிலோடு தொடர்புடையதாகும். காளை என்பது எங்களது குடும்ப உறுப்பினர். அவ்வாறிருக்க எப்படி ஒரு குடும்ப உறுப்பினரை நாங்கள் துன்புறுத்துவோம்?. ஜல்லிக்கட்டுக்கு இரு நாட்களுக்கு முன் ஊரே கோவிலில் கூடி  காளைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்வோம். மேலும் அந்தக் காளைகளை தெய்வமாக பாவித்து வணங்குகிறோம்.

எனவே, இது கலாச்சாரம், பண்பாடு, மதம் என அனைத்தையும் ஒன்றிணைந்த பொதுத்திருவிழா  தான் ஜல்லிக்கட்டாகும். இதில் ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டனில் இருந்து இயங்கம் வெளிநாட்டு அமைப்புக்கு என்ன தெரியும். மேலும் நமது உணர்வு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை அவர்களுக்கு எப்படிப் புரியும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக நமது கலாச்சார விளையாட்டை சட்டமாக்கிய பின்னர் அதை இந்த வெளிநாட்டு அமைப்பு எவ்வாறு ஆட்சேபிக்க முடியும் என காரசார வாதங்களை முன்வைத்தார். ஆனால் மேற்கண்ட வாதங்களுக்கு பீட்டா அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் எதிர்ப்புத் தெரிவித்தார். அதையடுத்து விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.  அது நமது ஜல்லிக்கட்டு விவகாரங்களில் மத்திய மாநில அரசுகள் வாதம் நல்ல தீர்ப்பை பெற்றுத்தரும் என்பதாகும் அயல் நாட்டு அமைப்புகள் நமது கலாச்சாரம் பண்பாடுகளில் தலையிட உரிமைகள் உண்டா என்பதே இப்போது உள்ள எழு வினா அதற்கு உச்சநீதிமன்றம் நலால தீர்வு வழங்கும் என ஏதிர்பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...