முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன உச்சநீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகளின் சார்பில் சிறப்பாக வாதம்

ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சட்ட அங்கீகாரங்களும் உள்ளன.


எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ள நிலையில் இவ் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகளின்  அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. நீதிபதிகள் கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு தினமும் வழக்கை விசாரிக்கிறது.  இன்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை முன்வைத்தார். அதில்  "தமிழகத்தின் கலாசார விவகாரத்தில் எப்படித் தலையிட முடியும்", என வினா எழுப்பிய நிலையில் ஜல்லிக்கட்டு  நடத்த  2014 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில்,

தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றி 2017 ஆம் ஆண்டு முதல் போட்டி நடத்தி வருகிறது. என்றார் மேலும் விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான ராகேஷ் திரிவேதி வாதாடும் போது, விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய நாடாளுமன்றம் , மற்றும் சட்டமன்றப் பேரவைக்கு அதிகாரமுண்டு. குறிப்பாக விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் இயற்ற சட்டசபைக்கு முழுமையான அதிகாரமுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் பிரத்யேகமான கலாசாரத்தைக் கொண்டுள்ளது.சிலர் , சைவ உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது சிலரின் கலாச்சாரமாக உள்ளது. இதனால், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இறைச்சி சாப்பிடும் அசைவப் பிரியர்களை தடுத்து நிறுத்த முடியுமா?விலங்குகள் பலியிடுவது என்பது மதத்தின் ஒரு அங்கமாகவே கூட இருக்கிறது. தற்போதைய சூழலில் விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஜல்லிக்கட்டு, என்பது ஜாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டது. இவ்வாறு அவர் வாதிட்டார்.தொடர்ந்து மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடும் போது, தமிழகத்தின் கலாசாரம் தொடர்பான விவகாரத்தில் எப்படித் தலையிட முடியும்? மாவட்ட ஆட்சித் தலைவர்  குழு ஆய்வுக்கு பிறகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்க முடியும். ஜல்லிக்கட்டுக்கு குடியரசுத் தலைவர்  அனுமதி வழங்கியது சட்டப்பூர்வமானது. மாநில அரசுகளின் முடிவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இவ்வாறு அவர் வாதிட்டார்.                     தமிழர்களின் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஓர் இயங்கியல் பண்பாடே.

"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."  தமிழ் நாட்டின் கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாட்டு அமைப்புக்கு என்ன தெரியும் என உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகத்தில் கம்பாலா உள்ளிட்ட மிருக விளையாட்டுகளை அனுமதிக்கும் வகையில் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய விதிமுறைகளுக்கு எதிராக அயல் நாட்டு அமைப்பால்  தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் ஆறாவது நாளாக நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,  ‘‘ஜல்லிக்கட்டு என்பது எங்களது அடிப்படை உரிமை, கலாச்சாரமாகும்.

இதுகுறித்து முடிவெடுக்க நீதிமன்றம் ஒன்றும் நடுவர் கிடையாது. இதில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உயிரிழப்பு ஏற்படுகிறதென மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. சாலையில் நாம் சென்று கொண்டிருக்கும் போது கூட தான் திடீரென மரணம் ஏற்படுகிறது. அதற்காக செல்லாமல் இருக்க முடியுமா. இருப்பினும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்பதற்காகத் தான் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முன்பு காளைகளுக்கு பல்வேறு சோதனைகள் நடத்துகிறீர்கள்?. அப்படியெனில் விளையாட்டு முடிந்தும் பரிசோதனை செய்யப்படுமா என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முகுல் ரோத்தகி, கண்டிப்பாக நடத்துகிறோம். இதனை நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். அதையடுத்து ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஏதிர்மனுதாரர்  தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து,‘‘ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டல்ல அது திருவிழா. அது கோவிலோடு தொடர்புடையதாகும். காளை என்பது எங்களது குடும்ப உறுப்பினர். அவ்வாறிருக்க எப்படி ஒரு குடும்ப உறுப்பினரை நாங்கள் துன்புறுத்துவோம்?. ஜல்லிக்கட்டுக்கு இரு நாட்களுக்கு முன் ஊரே கோவிலில் கூடி  காளைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்வோம். மேலும் அந்தக் காளைகளை தெய்வமாக பாவித்து வணங்குகிறோம்.

எனவே, இது கலாச்சாரம், பண்பாடு, மதம் என அனைத்தையும் ஒன்றிணைந்த பொதுத்திருவிழா  தான் ஜல்லிக்கட்டாகும். இதில் ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்கா, லண்டனில் இருந்து இயங்கம் வெளிநாட்டு அமைப்புக்கு என்ன தெரியும். மேலும் நமது உணர்வு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை அவர்களுக்கு எப்படிப் புரியும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக நமது கலாச்சார விளையாட்டை சட்டமாக்கிய பின்னர் அதை இந்த வெளிநாட்டு அமைப்பு எவ்வாறு ஆட்சேபிக்க முடியும் என காரசார வாதங்களை முன்வைத்தார். ஆனால் மேற்கண்ட வாதங்களுக்கு பீட்டா அமைப்பு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் எதிர்ப்புத் தெரிவித்தார். அதையடுத்து விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.  அது நமது ஜல்லிக்கட்டு விவகாரங்களில் மத்திய மாநில அரசுகள் வாதம் நல்ல தீர்ப்பை பெற்றுத்தரும் என்பதாகும் அயல் நாட்டு அமைப்புகள் நமது கலாச்சாரம் பண்பாடுகளில் தலையிட உரிமைகள் உண்டா என்பதே இப்போது உள்ள எழு வினா அதற்கு உச்சநீதிமன்றம் நலால தீர்வு வழங்கும் என ஏதிர்பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த