முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குமுளியில் சபரிமலை சென்றவர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்தில் எட்டு நபர்கள் உயிரிழப்பு

குமுளியில் சபரிமலை சென்றவர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்தில் எட்டு நபர்கள் உயிரிழப்பு


குமுளியில் ஐயப்ப வழிபாட்டுக்கு சென்று திருப்பி வந்த  வாகனம் கவிழ்ந்தது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா   சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த எட்டு பேர் கார் விபத்தில் பலியாகினர்.

குமுளியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம் குறித்த தகவல் வருமாறு :

டிசம்பர் மாதம்  22 ஆம் தேதி வியாழக்கிழமை காலை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா  சண்முக சுந்தரபுரம் கோவிலிலிருந்து பத்து பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் சென்றனர். 23 ஆம் தேதி காலை சாமி தரிசனம் முடித்து விட்டு மாலை குமுளி வழியாக  ஆண்டிபட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் குமுளி மலைப் பாதையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து  விபத்தேற்பட்டது. விபத்தை அறிந்த கேரள மாநிலம் குமுளி காவல் நிலைத்தினரும் , தமிழ்நாடு  லோயர்கேம்ப் காவல் நிலையத்தினரும் சம்பவம் நிகழ்ந்த  இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய நபர்களை தீயணைப்புத் துறையினருடன் மீட்க வந்த நிலையில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரிந்தது. உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்தில் 7 வயதுச் சிறுவன் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர். மருத்துவமனையில் வைத்திருந்த உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் நேரில்  அடையாளம் காட்டியதன்படி உயிரிழந்தவர்கள்   காவல்துறையினர்  உறுதி செய்தனர். இதற்கிடையில் உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

குமுளி மலைப்பாதையில் நடந்த விபத்துக் குறித்து தகவலறிந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சிகிச்சை பெற்று வருவர்களுக்கு ஆறுதலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலும் தெரிவித்தார். சம்பவம் குறித்து   வழக்குப்பதிவு செய்து காவல்துறை  விசாரித்து வருகின்றனர்


விபத்தில் இறந்த எட்டு நபர்கள்  விபரம்:-

1.முனியாண்டி(வயது 55)

S/o. பொன்னையா

BSNL ஆபிஸ் எதிர்புறம்

சக்கம்பட்டி, ஆண்டிபட்டி.

2. தேவதாஸ் (வயது 55)

S/o. பரமசிவம்

பத்திர ஆபிஸ் ரோடு

ஆண்டிபட்டி,

3.கன்னுச்சாமி (வயது55)

S/o. நாகப்பன் சேர்வை

சாவடித் தெரு

மறவபட்டி, ஆண்டிபட்டி,

4.நாகராஜ் (வயது  46)

S/o.ராமசாமி

சுடுகாட்டுத் தெரு

ஆண்டிபட்டி.

5.வினோத் (வயது 47)

S/o. சுந்தரம்

S.S.புரம்

ஆண்டிப்பட்டி

6.சிவக்குமார் (வயது 45(

S/o. சுப்பையா

பத்திர ஆபீஸ் ரோடு

ஆண்டிபட்டி,

7. கலைச்செல்வன் (வயது 45)

S/o. மாரிமுத்து

பொம்மிநாயக்கன்பட்டி

ஆண்டிபட்டி,

 வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் 

 8. கோபாலகிருஷ்ணன் (வயது42)

S/o. ஆண்டிச்சாமி

பிச்சம்பட்டி ஆண்டிபட்டி 


வியத்தில் காயம்பட்டவர்கள் : இருவர்.

1 ஹரிஹன் (வயது 7)

S/o.ராஜா

கோழிப்பண்ணை தெரு

சந்தைப்பேட்டை

ஆண்டிபட்டி,

2.ராஜா (வயது40)

S/o.நடராஜ்

கோழிப்பண்ணை தெரு

சந்தைப்பேட்டை

ஆண்டிபட்டி, யாகும். இச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த