முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர்ஜாதி ஏழைகளுக்கு பத்து சதவீதம் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல்

உயர்ஜாதியினர் உட்பட பொருளாதார ரீதியான ஏழைகளுக்கு கல்வி உள்ளிட்ட அரசு வேலைகள் மற்றும் நிறுவனங்களில் 10 சதவீதம்  தாக்கல் செய்துள்ளது.

அதே போல் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுமென்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இந்த சட்டத்த் திருத்தத்தைக் கொண்டு வந்ததை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


அந்த வழக்கில் தான் இந்தத் தீர்ப்பு அப்போது  வெளியானது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனவும் நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாதென்றும் தீர்ப்பளித்ததன் மூலம், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103 ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 10% இட ஒதுக்கீடு என்பது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிரானதென்ற கடுமையான வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்த வேண்டும் எனவும்  பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதியின் அறையில் வைத்து நடைபெறும். ஆனால் அப்படி நடக்கக்கூடாதென்ற முக்கியமான கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளது தனது மனுவில்  இந்த சட்டத்தினால் 133 கோடி இந்திய குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்கும் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறதென்றும்.  முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்பது, சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறதென திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது.

சமூகத்தில் முன்னேறிய ஜாதியினர் உட்பட பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS) என்பது 133 கோடி இந்தியர்களைப் பாதிக்கிறதென்பதால் அந்த அடிப்படையில் மறுஆய்வு மனு மீதான விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்துமாறும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்ததில்

இந்தியாவின் மக்கள்தொகையை இடஒதுக்கீடு நோக்கங்களுக்காக பரஸ்பர பிரத்தியேகப் பிரிவுகளாகப் பிரிப்பதைத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது, இது சகோதரத்துவத்தின் அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கையை அடிப்படையில் சிதைக்கிறதென்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால் பணி செய்யும் ஊழியர்கள் குறித்த தகவலில்மத்திய அரசுப் பணியில் 27 சதவீதம்  இடஒதுக்கீடு இருந்தும் ஓபிசி-யில் 20 சதவீதம்  ஏன்?..என்ற வினா வருகிறது  பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆண்டறிக்கையில் உள்ள தகவல் படி 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடிருந்தும் அவர்கள் மத்திய  அரசுப் பணியில் 20 சதவீதம் என்ற அளவிற்கே பணியிலுள்ளதாக மத்திய அரசின் பணியாளர்கள் துறை அமைச்சக ஆய்வறிக்கையின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, மத்தியரசின் 55 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 20.43 சதவீதம் மட்டுமே.

ஆனால் அவர்களுக்கு அரசியலமைப்பின் இடஒதுக்கீட்டின் படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை விடக் குறைவேயாகும், எஸ்சி - எஸ்டி வகுப்பினரை பொறுத்தவரை, மத்தியரசுப் பணியில் 15 சதவீத இடஒதுக்கீடு பெறுகின்றனர். தற்போது 17.39 சதவீத பணியாளர்கள் பணியிலுள்ளனர். அதேபோல் 7.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பழங்குடியினர் 7.64 சதவீதம் பேர் பணியிலுள்ளனர். இந்தப் புள்ளி விபரங்களில் ஓபிசி பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் காட்டிலும் அவர்களின் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமலும், காலியாகவும் உள்ளன.

ஓபிசி பிரிவினர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒன்றிய அரசு அவ்வப்போது அறிவிப்பாணைகளை வெளியிட்டாலும் கூட, அரசுப் பணியில் சேருவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அவர்கள் இடஒதுக்கீட்டின் முழு பலனையும் பெறவில்லையென்றும் கூறப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் இதற்கு காரணமாக இருக்கலாமென்றும், அதனால் முப்பதாண்டுகளாக ஓபிசி பிரிவில் பணியாளர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்தியரசின் பணியாளர்கள் விபரத்தில், பழங்குடியின வகுப்பினர் - 3,95,712 பேர், ஓபிசி வகுப்பினர் - 1,47,953 பேர், அட்டவணைப்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3,36,927 பேர், பொது மற்றும் இதர பிரிவினர் - 10,56,504 பேர் என, மொத்தம் 19,37,096 பேர் மத்தியரசுப் பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த