முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொருவருக்கும் அதிகாரமளிக்கும் திறவுகோல் கல்வி” - குடியரசுத் தலைவர்

“மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொருவருக்கும் அதிகாரமளிக்கும் திறவுகோல் கல்வி” - திரௌபதி முர்மு

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்த "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை" கொண்டாடும் விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள்,  மாநில/மாவட்ட நிர்வாகங்கள் போன்றவற்றின் சிறந்த சாதனைகள் ஆகியவற்றுக்கான  தேசிய விருதுகளை அவர் வழங்கினார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திருமதி பிரதிமா பௌமிக் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய விருதுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் , ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது உலகில் உள்ள ஒவ்வொரு 8வது நபரும் ஏதோ ஒரு வகையில் ஊனமுற்றவர்கள். இந்திய மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள். எனவே, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும். அவர்கள் நல்ல கல்வியைப் பெறுவதையும், அவர்களின் வீடுகளிலும் சமூகத்திலும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களின் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சமமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதி செய்வதும் நமது கடமையாகும் என்று கூறினார்.


இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில், அறிவைப் பெறுவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் உடல் குறைபாடு  ஒரு தடையாக ஒருபோதும் கருதப்படவில்லை என்று குடியரசுத் தலைவர்  கூறினார். பெரும்பாலும், மாற்றுத்திறனாளிகள் தெய்வீகக் குணங்களைக் கொண்டவராக இருப்பதைக் காணலாம். நமது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அசாத்திய துணிச்சல், திறமை மற்றும் உறுதியின் பலத்தால் பல துறைகளில் பிரமிக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தியதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. போதுமான வாய்ப்புகள் மற்றும் சரியான சூழலைக் கொடுத்தால், அவர்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கைக்கு  கல்வி முக்கியமானது என அவர் தெரிவித்தார். கல்வியில் மொழி தொடர்பான தடைகளை நீக்குவதற்கும், குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்விக்கான சம வாய்ப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தேசியக் கல்விக் கொள்கை 2020 அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை இந்திய சைகை மொழியாக மாற்றியதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களை பிரதான கல்விச் செயல்பாட்டில் சேர்ப்பது ஒரு முக்கியமான முயற்சி என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பேசுகையில், பிரதமர் தேசிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவரின் மேம்பாடு மற்றும் அனைவரின் நம்பிக்கை என்பதே அவரது குறிக்கோள். 19.04.2017 முதல் நடைமுறைக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம், 2016ஐ அரசு இயற்றியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் 4% இடஒதுக்கீடு வழங்க சட்டம் வழிவகை செய்கிறது என்று கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை  செயலர் திரு ராஜேஷ் அகர்வால் ,மூத்த அதிகாரிகள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சாதனங்களை இந்திய உருக்கு ஆணையம் விநியோகிக்கிறது

'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்' கொண்டாடப்படுவதையொட்டி,  மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணையம் (இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்),  அதன் ஆலைகள்/அலகுகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகம்  மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவும்  சாதனங்களை பெருவணிக சமூக பொறுப்பு நிதியிலிருந்து  விநியோகித்தது. இந்த முன்னுரிமைத் திட்டத்தை மேற்கொள்வதற்காக  ஆணையம்  இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகத்தை  ஈடுபடுத்தியுள்ளது. புதுதில்லியில் நடந்த நிகழ்வின் போது, ஆணையத்தின்  தலைவர் திருமதி சோமா மொண்டல் மற்றும் நிறுவனத்தின்  மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


விடுதலையின் அமுதப்பெருவிழாவின் ஒரு கட்டமாக ,இந்த முன்னுரிமை நிகழ்ச்சியானது, நாட்டின் பல இடங்களில் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள்,  பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் கேன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள்  செவித்திறன் கருவிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

தற்போது, இந்திய உருக்கு ஆணையம் தனது ஆலைகளுக்கு சொந்தமான இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள், இல்லங்களை நடத்தி வருகிறது. ரூர்கேலாவில், 'பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி' ,  பொகாரோவில்  'ஆஷாலதா கேந்திரா', 'ஊனமுற்றோர் சார்ந்த கல்வித் திட்டம்'  துர்காபூரில் ‘துர்காபூர் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி இல்லம்'  பர்ன்பூரில் 'செஷயர் ஹோம்' ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு வழங்கினார்

குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று (டிசம்பர் 3, 2022) நடைபெற்ற விழாவில், 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான சிறந்த மாற்றுத்திறனாளி தேசிய விருதுகளை வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய அவர், ஐ.நா வின் புள்ளிவிவரங்கள்படி, உலகில் 1 பில்லியன் (100 கோடி) பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என்றார். அதாவது, நம்மில் 8ல் ஒருவர் ஏதாவது ஒருவகையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார் என்று கூறினார். இந்தியாவின் மக்கள்தொகையில்,  மொத்தம் 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதால், அவர்கள் யாரையும் சார்ந்திராமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை என்றும் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது என குறிப்பிட்ட அவர்,   மாற்றுத்திறனாளிகள் தெய்வீகக் குணங்களை வரமாகப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். துணிவு, திறமை, திட்டமிடல் மூலம் தங்கள் இலக்கை எட்டி சாதனை படைத்த எண்ணிலா மாற்றுத்திறனாளி சகோதர-சகோதரிகளை உதாரணமாகக் கூற முடியும் என்ற திரௌபதி முர்மு, அவர்கள் ஒவ்வொரு துறையிலும், சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தனிநபர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த அவர், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டினார்.

தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே மாற்றுத்திறனாளிகளை அதிகாரமிக்கவர்களாக, தற்சார்பு பெற்றவர்களாக மாற்ற முடியும் என்றும், அவர்கள் மற்ற நபர்களைவிட, அசாத்தியத்  திறமை கொண்டவர்களாகத் திகழ்வதாகவும் திரௌபதி முர்மு கூறினார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும்,  மாற்றுத்திறனாளிகள் துறையும் இணைந்து,  மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு, ஆண்டுதோறும் மாற்றுதிறனாளி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவர்களுக்கும் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.மேலும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், நமது மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் தைரியத்தையும் சாதனைகளையும் பிரதமர் பாராட்டினார்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நமது மாற்றுத்திறனாளி  சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் தைரியத்தையும் சாதனைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

தொடர்ச்சியான  ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், நமது  மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் துணிச்சலையும் சாதனைகளையும் நான் பாராட்டுகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி அவர்கள் பிரகாசிக்க ஏதுவாக எங்கள் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது."

"எங்கள் அரசு அணுகல்தன்மையில் சமமாக கவனம் செலுத்துகிறது, இது முதன்மையான திட்டங்கள் மற்றும் அடுத்த ஜென் இன்ஃப்ரா உருவாக்கம் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக்  கொண்டு வர அடித்தளநிலையில் பணிபுரியும் அனைவரையும் நான் பாராட்ட  விரும்புகிறேன்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த