முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதானி குழுமத்தின் பங்குகள்.20 சதவீதம் வரை சரிவு காரணம் முதலாளித்துவ போக்கு தான்

அதானி குழுமத்தின் பங்குகள்.20 சதவீதம் வரை சரிவு.


மும்பை பங்குச்சந்தையிலிருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் 20 சதவீதம் வரையில் சரிந்து நீண்ட கால முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுது. இந்தச் சரிவுக்கு Hindenburg அறிக்கையும் காரணமாகும்.  இந்தியாவின் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி குழுமத்தின் கடந்த ஆண்டு ஒப்பந்தங்களை முழுமையாக ஆய்வு செய்யவும்,


கண்காணிப்பைஅதிகப்படுத்தவும் முடிவு செய்த  வேளையில் Short Seller நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆய்வு செய்ய செபி முடிவு அதானி குழுமத்தின் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீதான அதன் விசாரணையில் அதைச் சேர்க்க உள்ளதாகத் தகவல்.


அதானி குழுமம் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அளவிலான முதலீட்டில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருவது நாடறிந்த உண்மை . அதில் பல வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் தலையீடும் உள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனம் செயல்படுத்தி அனைத்து ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்யச் செபி முடிவு செய்துள்ளது. இது வரையில் அதானி குழுமம் சுமார் 17 offshore special purpose vehicle-ஐ (SPV) தனது கையகப்படுத்தல் திட்டத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது.



  அமெரிக்க முதலீட்டாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமத்தின் நிறுவனங்கள் "கேளிக்குறிய" வகையில் சந்தை கையாளுதல் மற்றும் கணக்குகளில் பல்வேறு மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. Hindenburg அறிக்கை அதானி குழும நிறுவனப் பங்குகளை மட்டுமல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பிலும் பெருத்த சரிவை ஏற்படுத்தியுள்ள

அதே வேளையில் பில்லியனர் முதலீட்டாளரான William Ackman தனது டிவிட்டரில் அதானி குழுமம் குறித்து அறிக்கை சிறப்பான ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படு உள்ளது அதைக் கண்டிப்பாக நம்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் Hindenburg அறிக்கையில் அதானி குழுமம் அதிகப்படியான வரிச் சலுகை கொண்ட வெளிநாட்டுகளில் பணத்தை முறையற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தியர் அல்லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷாட் பொசிஷன் வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.  இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்து வந்த அதானி குழுமம் புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் இரண்டு  லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.


அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் உள்ளது. அதானி டேட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன், அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி பவர், அதானி வில்மார், NDTV, அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ, ஏசிசி லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ். இன்றைய வர்த்தகத்தில் ஒட்டுமொத்த 10 நிறுவனங்களும் சரிவைச் சந்தித்துள்ளது


ஓரே நாளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலைக்கு முக்கியக் காரணம் Hindenburg என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தான் எனக் கூறப்பட்டு உள்ளது

அனைத்தும் பொய், அடிப்படை ஆதாரம் இல்லாமல் வெளியிட்ட அறிக்கை என இரண்டு நாட்களாகக் கூறி வரும் வேளையில், நேற்று Hindenburg நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட 89 கேள்விகளுக்கும் இன்று வரிக்கு வரி விளக்கம் கொடுத்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மிகப்பெரிய முயற்சியாக விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.



Hindenburg Research, எங்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது உண்மை சரிபார்க்கவோ எந்த முயற்சியும் செய்யாமல், ஜனவரி மாதம் 24 ஆம் தேதி  2023 ஆம் ஆண்டு அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் புதன்கிழமை தெரிவித்தார். 


தற்போது எழுப்பப்பட்டுள்ள 89 கேள்விகளில் 21 கேள்விகளுக்குப் பொது வெளியீடாக வந்துள்ள 2015 அதானி போர்ட்ஃபோலியோ பிரசன்டேஷன் அறிகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


ஹிண்டன்பேர்க் செய்த கணக்கியல் அல்லது மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றது எனத் தெரிவித்துள்ளார்.மேலும் அமெரிக்கச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பேர்க் அறிக்கை அதானி குழுமத்திற்குத் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும், தனது அறிக்கையில் ஒன்றை விட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டதென்றும் அதானி குழுமம் கூறியுள்ளது. 


ஹிண்டன்பேர்க் நிறுவனம் என்பது குறுகிய காலப் பங்கு விற்பனையில் தனித் திறன் பெற்றது. அதாவது ஒரு  நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று எதிர்பார்த்து அதற்காகப் பிட்டிங் செய்யு பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்கார நிறுவனம். அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பில் பாதிப்பு மூலம் ஹிண்டன்பர்க் நிறுவனம் பலன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஹிண்டன்பர்க் நிதியியல் சந்தையில் மனிதர்களால் செய்யப்படும் மோசடிகளைக் கண்டுபிடித்து, அதை அடிப்படையாக வைத்து அறிக்கை வெளியிட்டு ஷாட் செல்லிங் செய்து பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவை இதுவரை 16 நிறுவனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு பெரும் தொகையைச் சம்பாதித்துள்ளது.

அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க். அதானி குழுமத்தின் பங்குகளை FPO கீழ் விற்பனை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தது பெரும் பின்னடைவாக உள்ளது. குறிப்பிடத்தக்கது

இதில் தற்போது நம்மிடையே அம்பானியின் ஜியோ  மூணுமாதமா 'அன்லிமிட் டாக் டைம்' ரீசார்ஜ் பண்றதுக்கு ஜியோவுல 555 ரூபாய் வாங்கிய நிலையில்  ஏர்டெல் போன்ற கம்பேனிகளின் கட்டணம் கொஞ்சம் முன்பின் இருக்க  இப்போது 666 ரூபாய்னு உயர்த்தியாச்சு. தினமும் ஒன்றரை ஜிபி நெட் அவுட்கோயிங் அன்லிமிட்ன்னு இதை பயன்படுத்தி ஆண்டுக்கணக்கா பயன் படுத்திய நிலை . வீட்டில உபயோகித்த சிம் கார்டுக்கு இன்கமிங் ஃப்ரீ, தேவைப்பட்டா எப்போதாவது  ஒன்னு ரெண்டு போனு பேசிக்கலாம்னு நெட் இல்லாத கனெக்சனா ஒரு தொலைபேசி  இருக்கும்.

மாசாமாசம் 100 ரூபாய்  அதுக்கு ரீ சார்ஜ் பண்ணி வைப்போம். இப்போது அதை 155 ரூபாய்னு ஏத்தி விட்டுட்டாங்க. புறா விடும் தூது இல்லன்னா நேர்ல போயே பேசிட்டு வருவது நல்லது என்ற நிலை வரும் போலிருக்கு. 

இதுமாதிரி அடித்தட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பேச ஜியோ முதலாளியோ அல்லது ஒரு தொலைக்காட்சி  நிறுவனத்தைக் காணோம். அதானி லாஸ் ஆன பின்னணி, அம்பானிய அவுட் ஆக்குன கண்மணினு கவர் ஸ்டோரியும் டிபேட் பானிபூரியும் இறிலிருந்து தொடங்கிவிடும். 





 முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் வைர வியாபாரியின் மகள் ராதிகாவுக்கும் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது அந்த விழாவில் அம்பானி குடும்பத்தினர் நடனம் ஆடி மணமக்களை வாழ்த்தினர்.மக்கள் பணத்தில் வாரிக்கொழுத்தவர்கள்  இதில் பொது நீதி யாதெனில்


முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக் கொள்ளும் " என்ற உண்மை கார்ல் மார்க்சின் வாசகத்தை நானும் பல வருடங்கள் நம்பிக் கொண்டிருந்தவன் அதன் உண்மை இப்போது புரிகிறது அதை கவியரசர் கண்ணதாசன் வரிகளில் கூற வேண்டுமானால்                     "வாழ்வின் பொருள் என்ன ?                  நீ வந்த கதையென்ன ? ' என்கிற வரிகள் பல்லாண்டுகளில் எனைத் தொடர்ந்த படியே இருக்கிறது. வாழ்க முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நிலை நேக்கி மக்கள் பயணப்படும் நிலை 2000 ஆண்டு வரை வரவில்லை அதன் பின் நாட்டில் நல்ல தலைமைப் பஞ்சம் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த