முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதானி குழுமத்தின் பங்குகள்.20 சதவீதம் வரை சரிவு காரணம் முதலாளித்துவ போக்கு தான்

அதானி குழுமத்தின் பங்குகள்.20 சதவீதம் வரை சரிவு.


மும்பை பங்குச்சந்தையிலிருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் 20 சதவீதம் வரையில் சரிந்து நீண்ட கால முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுது. இந்தச் சரிவுக்கு Hindenburg அறிக்கையும் காரணமாகும்.  இந்தியாவின் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி குழுமத்தின் கடந்த ஆண்டு ஒப்பந்தங்களை முழுமையாக ஆய்வு செய்யவும்,


கண்காணிப்பைஅதிகப்படுத்தவும் முடிவு செய்த  வேளையில் Short Seller நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆய்வு செய்ய செபி முடிவு அதானி குழுமத்தின் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மீதான அதன் விசாரணையில் அதைச் சேர்க்க உள்ளதாகத் தகவல்.


அதானி குழுமம் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய அளவிலான முதலீட்டில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருவது நாடறிந்த உண்மை . அதில் பல வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் தலையீடும் உள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனம் செயல்படுத்தி அனைத்து ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்யச் செபி முடிவு செய்துள்ளது. இது வரையில் அதானி குழுமம் சுமார் 17 offshore special purpose vehicle-ஐ (SPV) தனது கையகப்படுத்தல் திட்டத்திற்காகப் பயன்படுத்தியுள்ளது.



  அமெரிக்க முதலீட்டாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமத்தின் நிறுவனங்கள் "கேளிக்குறிய" வகையில் சந்தை கையாளுதல் மற்றும் கணக்குகளில் பல்வேறு மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. Hindenburg அறிக்கை அதானி குழும நிறுவனப் பங்குகளை மட்டுமல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பிலும் பெருத்த சரிவை ஏற்படுத்தியுள்ள

அதே வேளையில் பில்லியனர் முதலீட்டாளரான William Ackman தனது டிவிட்டரில் அதானி குழுமம் குறித்து அறிக்கை சிறப்பான ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படு உள்ளது அதைக் கண்டிப்பாக நம்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் Hindenburg அறிக்கையில் அதானி குழுமம் அதிகப்படியான வரிச் சலுகை கொண்ட வெளிநாட்டுகளில் பணத்தை முறையற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தியர் அல்லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷாட் பொசிஷன் வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.  இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்து வந்த அதானி குழுமம் புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் இரண்டு  லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.


அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் உள்ளது. அதானி டேட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன், அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி பவர், அதானி வில்மார், NDTV, அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ, ஏசிசி லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ். இன்றைய வர்த்தகத்தில் ஒட்டுமொத்த 10 நிறுவனங்களும் சரிவைச் சந்தித்துள்ளது


ஓரே நாளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலைக்கு முக்கியக் காரணம் Hindenburg என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தான் எனக் கூறப்பட்டு உள்ளது

அனைத்தும் பொய், அடிப்படை ஆதாரம் இல்லாமல் வெளியிட்ட அறிக்கை என இரண்டு நாட்களாகக் கூறி வரும் வேளையில், நேற்று Hindenburg நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட 89 கேள்விகளுக்கும் இன்று வரிக்கு வரி விளக்கம் கொடுத்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மிகப்பெரிய முயற்சியாக விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.



Hindenburg Research, எங்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது உண்மை சரிபார்க்கவோ எந்த முயற்சியும் செய்யாமல், ஜனவரி மாதம் 24 ஆம் தேதி  2023 ஆம் ஆண்டு அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் புதன்கிழமை தெரிவித்தார். 


தற்போது எழுப்பப்பட்டுள்ள 89 கேள்விகளில் 21 கேள்விகளுக்குப் பொது வெளியீடாக வந்துள்ள 2015 அதானி போர்ட்ஃபோலியோ பிரசன்டேஷன் அறிகையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


ஹிண்டன்பேர்க் செய்த கணக்கியல் அல்லது மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றது எனத் தெரிவித்துள்ளார்.மேலும் அமெரிக்கச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பேர்க் அறிக்கை அதானி குழுமத்திற்குத் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும், தனது அறிக்கையில் ஒன்றை விட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டதென்றும் அதானி குழுமம் கூறியுள்ளது. 


ஹிண்டன்பேர்க் நிறுவனம் என்பது குறுகிய காலப் பங்கு விற்பனையில் தனித் திறன் பெற்றது. அதாவது ஒரு  நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று எதிர்பார்த்து அதற்காகப் பிட்டிங் செய்யு பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்கார நிறுவனம். அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பில் பாதிப்பு மூலம் ஹிண்டன்பர்க் நிறுவனம் பலன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஹிண்டன்பர்க் நிதியியல் சந்தையில் மனிதர்களால் செய்யப்படும் மோசடிகளைக் கண்டுபிடித்து, அதை அடிப்படையாக வைத்து அறிக்கை வெளியிட்டு ஷாட் செல்லிங் செய்து பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவை இதுவரை 16 நிறுவனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு பெரும் தொகையைச் சம்பாதித்துள்ளது.

அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க். அதானி குழுமத்தின் பங்குகளை FPO கீழ் விற்பனை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தது பெரும் பின்னடைவாக உள்ளது. குறிப்பிடத்தக்கது

இதில் தற்போது நம்மிடையே அம்பானியின் ஜியோ  மூணுமாதமா 'அன்லிமிட் டாக் டைம்' ரீசார்ஜ் பண்றதுக்கு ஜியோவுல 555 ரூபாய் வாங்கிய நிலையில்  ஏர்டெல் போன்ற கம்பேனிகளின் கட்டணம் கொஞ்சம் முன்பின் இருக்க  இப்போது 666 ரூபாய்னு உயர்த்தியாச்சு. தினமும் ஒன்றரை ஜிபி நெட் அவுட்கோயிங் அன்லிமிட்ன்னு இதை பயன்படுத்தி ஆண்டுக்கணக்கா பயன் படுத்திய நிலை . வீட்டில உபயோகித்த சிம் கார்டுக்கு இன்கமிங் ஃப்ரீ, தேவைப்பட்டா எப்போதாவது  ஒன்னு ரெண்டு போனு பேசிக்கலாம்னு நெட் இல்லாத கனெக்சனா ஒரு தொலைபேசி  இருக்கும்.

மாசாமாசம் 100 ரூபாய்  அதுக்கு ரீ சார்ஜ் பண்ணி வைப்போம். இப்போது அதை 155 ரூபாய்னு ஏத்தி விட்டுட்டாங்க. புறா விடும் தூது இல்லன்னா நேர்ல போயே பேசிட்டு வருவது நல்லது என்ற நிலை வரும் போலிருக்கு. 

இதுமாதிரி அடித்தட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை பேச ஜியோ முதலாளியோ அல்லது ஒரு தொலைக்காட்சி  நிறுவனத்தைக் காணோம். அதானி லாஸ் ஆன பின்னணி, அம்பானிய அவுட் ஆக்குன கண்மணினு கவர் ஸ்டோரியும் டிபேட் பானிபூரியும் இறிலிருந்து தொடங்கிவிடும். 





 முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் வைர வியாபாரியின் மகள் ராதிகாவுக்கும் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது அந்த விழாவில் அம்பானி குடும்பத்தினர் நடனம் ஆடி மணமக்களை வாழ்த்தினர்.மக்கள் பணத்தில் வாரிக்கொழுத்தவர்கள்  இதில் பொது நீதி யாதெனில்


முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக் கொள்ளும் " என்ற உண்மை கார்ல் மார்க்சின் வாசகத்தை நானும் பல வருடங்கள் நம்பிக் கொண்டிருந்தவன் அதன் உண்மை இப்போது புரிகிறது அதை கவியரசர் கண்ணதாசன் வரிகளில் கூற வேண்டுமானால்                     "வாழ்வின் பொருள் என்ன ?                  நீ வந்த கதையென்ன ? ' என்கிற வரிகள் பல்லாண்டுகளில் எனைத் தொடர்ந்த படியே இருக்கிறது. வாழ்க முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நிலை நேக்கி மக்கள் பயணப்படும் நிலை 2000 ஆண்டு வரை வரவில்லை அதன் பின் நாட்டில் நல்ல தலைமைப் பஞ்சம் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...