முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொல்கத்தாவில் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் திறப்பு

நீர்வளத் துறை அமைச்சகம் கொல்கத்தாவில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை பிரதமர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவின்  ஜோகாவில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் சுமார் ரூ.100 கோடி மதிப்பில்  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் சாலையில் ஜோகா என்ற இடத்தில் 8.72 ஏக்கர் நிலபரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமை நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் மூலம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலப் படிப்புகள் மூலம் பொது துப்புரவு பொறியியல் மற்றும் துப்புரவுத் துறையில் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டு இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன் மேலாண்மை, சுகாதாரம், கணக்கியல், சட்டம் மற்றும் பொதுக் கொள்கைகளின் அம்சங்களையும் உள்ளடக்கியது.

 டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு  நிறுவனத்தின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு, யுனிசெப், இன்ரம் அறக்கட்டளை, குடிநீர் ஆதாரம் ஆகிய அமைப்புகளின் உதவியுடன் ‘குடிநீரின் தரம்– பிரச்சனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய மாநாடு நடைபெற்றது.

மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்கினார்.


மத்திய அமைச்சர் ஷெகாவத்,  பிரதமரின் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதோடு, தூய்மை இந்தியா திட்டம், நமாமி கங்கா திட்டம், ஜல் ஜீவன் மிஷன் ஆகியவற்றின் கீழ், ஒருங்கிணைந்த முயற்சிகள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். “நாம் ஒன்றாகச் செயல்பட்டால், நீர் பாதுகாப்பையும், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகள் சிறப்பான வகையில் கிடைக்கும் என்றார். பொது சுகாதார பொறியியல் துறைகள் இல்லங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்த பிறகு, புதிய சவால் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.

அனைத்து குடிமக்களுக்கும் குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதிபடக் கூறினார்.

"இந்த முயற்சியில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அனைத்து மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இந்த நிறுவனத்தில் உள்ள வசதிகளை திறன் மேம்பாடு மற்றும் களபணியாளர்களுக்கு பயிற்சிக்காக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளர் திருமதி வினி மகாஜன் பேசுகையில், மாநிலங்கள் தண்ணீர் சேவை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தண்ணீர் சேவை வழங்குவதில் உள்ள சிக்கல்களைப் பட்டியலிடவும், விவாதிக்கவும், திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வெளியிடவும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

"தண்ணீரின் தரத்தை ஆய்வகங்களில் தவறாமல் பரிசோதிப்பதும், வெளிப்படைத்தன்மையுடன் சரியான நேரத்தில் அறிக்கை தயார் செய்வதும் முக்கியமான நடவடிக்கையாகும்" என்று அவர் கூறினார்.

குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட மேலாளருமான திரு விகாஸ் ஷீல், கடந்த 2 அக்டோபர் 2022 அன்று தொடங்கப்பட்ட ஸ்வச் ஜல் சே சுரக்ஷா பிரச்சாரத் திட்டத்தைப் பற்றி பேசினார். மேலும் அனைத்து மூலங்களிலிருந்தும் பெறப்படும் தண்ணீர் மாதிரிகள் ஆய்வகத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

களப்பரிசோதனை கருவிகள் மூலமாகவும், மாசுபாடுகள் பதிவாகும் இடங்களிலும் சீர்செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

'தண்ணீர் சேவையை உறுதி செய்வதே' இந்த பணியின் முக்கிய குறிக்கோள் ஆகும் என்றும் இதனால் குழாயில் இருந்து நேரடியாகக் குடிக்கலாம்" என்பது யதார்த்தமாகிறது என்றும் அவர் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மைக்கேல் க்ரீமர் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பேசும் பொது, 

உயிரியல் மாசு இல்லாத தண்ணீரை வழங்க முடிந்தால், ஆண்டுக்கு 1.4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறப்பதைத் தவிர்க்கலாம் என்றார்.

இந்த மாநாட்டில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் கிராமப்புற நீர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த பல்வேறு  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரதமரின் தாயாரின் மறைவுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பிறகு மாநாடு தொடங்கியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த