முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொல்கத்தாவில் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் திறப்பு

நீர்வளத் துறை அமைச்சகம் கொல்கத்தாவில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை பிரதமர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவின்  ஜோகாவில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் சுமார் ரூ.100 கோடி மதிப்பில்  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் சாலையில் ஜோகா என்ற இடத்தில் 8.72 ஏக்கர் நிலபரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமை நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் மூலம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலப் படிப்புகள் மூலம் பொது துப்புரவு பொறியியல் மற்றும் துப்புரவுத் துறையில் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டு இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன் மேலாண்மை, சுகாதாரம், கணக்கியல், சட்டம் மற்றும் பொதுக் கொள்கைகளின் அம்சங்களையும் உள்ளடக்கியது.

 டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு  நிறுவனத்தின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு, யுனிசெப், இன்ரம் அறக்கட்டளை, குடிநீர் ஆதாரம் ஆகிய அமைப்புகளின் உதவியுடன் ‘குடிநீரின் தரம்– பிரச்சனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய மாநாடு நடைபெற்றது.

மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்கினார்.


மத்திய அமைச்சர் ஷெகாவத்,  பிரதமரின் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதோடு, தூய்மை இந்தியா திட்டம், நமாமி கங்கா திட்டம், ஜல் ஜீவன் மிஷன் ஆகியவற்றின் கீழ், ஒருங்கிணைந்த முயற்சிகள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். “நாம் ஒன்றாகச் செயல்பட்டால், நீர் பாதுகாப்பையும், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகள் சிறப்பான வகையில் கிடைக்கும் என்றார். பொது சுகாதார பொறியியல் துறைகள் இல்லங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்த பிறகு, புதிய சவால் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றார்.

அனைத்து குடிமக்களுக்கும் குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதிபடக் கூறினார்.

"இந்த முயற்சியில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அனைத்து மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இந்த நிறுவனத்தில் உள்ள வசதிகளை திறன் மேம்பாடு மற்றும் களபணியாளர்களுக்கு பயிற்சிக்காக பயன்படுத்த வேண்டும்" என்றார்.

குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளர் திருமதி வினி மகாஜன் பேசுகையில், மாநிலங்கள் தண்ணீர் சேவை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தண்ணீர் சேவை வழங்குவதில் உள்ள சிக்கல்களைப் பட்டியலிடவும், விவாதிக்கவும், திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வெளியிடவும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

"தண்ணீரின் தரத்தை ஆய்வகங்களில் தவறாமல் பரிசோதிப்பதும், வெளிப்படைத்தன்மையுடன் சரியான நேரத்தில் அறிக்கை தயார் செய்வதும் முக்கியமான நடவடிக்கையாகும்" என்று அவர் கூறினார்.

குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் திட்ட மேலாளருமான திரு விகாஸ் ஷீல், கடந்த 2 அக்டோபர் 2022 அன்று தொடங்கப்பட்ட ஸ்வச் ஜல் சே சுரக்ஷா பிரச்சாரத் திட்டத்தைப் பற்றி பேசினார். மேலும் அனைத்து மூலங்களிலிருந்தும் பெறப்படும் தண்ணீர் மாதிரிகள் ஆய்வகத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

களப்பரிசோதனை கருவிகள் மூலமாகவும், மாசுபாடுகள் பதிவாகும் இடங்களிலும் சீர்செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

'தண்ணீர் சேவையை உறுதி செய்வதே' இந்த பணியின் முக்கிய குறிக்கோள் ஆகும் என்றும் இதனால் குழாயில் இருந்து நேரடியாகக் குடிக்கலாம்" என்பது யதார்த்தமாகிறது என்றும் அவர் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மைக்கேல் க்ரீமர் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பேசும் பொது, 

உயிரியல் மாசு இல்லாத தண்ணீரை வழங்க முடிந்தால், ஆண்டுக்கு 1.4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறப்பதைத் தவிர்க்கலாம் என்றார்.

இந்த மாநாட்டில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் கிராமப்புற நீர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த பல்வேறு  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரதமரின் தாயாரின் மறைவுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்திய பிறகு மாநாடு தொடங்கியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...