முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மும்பையில் இன்று தொடங்கிய. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா மும்பையில் இன்று தொடங்கியது


உலக சினிமாவின் சிறந்த அனுபவங்களை பெறுவதற்கு திரைப்பட இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை திரைப்பட விழா வழங்குகிறது: தகவல் ஒலிபரப்பு அமைச்சர்


"எஸ்சிஓ பகுதியைச் சேர்ந்த திரைப்படங்களின் பன்முகத்தன்மை மற்றும் திரைப்படத் தயாரிப்பு பாணிகளை பறைசாற்றுவதே இந்தியா இந்த விழாவை ஏற்பாடு செய்வதன் இலக்காகும், திரைப்பட விழாவின் முக்கிய குறிக்கோளும் இதுவே”: தகவல் ஒலிபரப்பு அமைச்சர்


" எஸ்சிஓ நாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது, மக்களுடன் மக்கள் தொடர்புக்கு பெரும் பங்காற்றியுள்ளன": தகவல் ஒலிபரப்பு அமைச்சர்


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்பட விழா, கோலாகல கொண்டாட்டம், இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைச்சாற்றும் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகளுடன் மும்பை தேசிய கலைத்திறன் மையத்தில் இன்று தொடங்கியது. இந்திய சினிமா மற்றும் என்சிஓ நாடுகளின் புகழ்பெற்ற திரைப்பட ஆளுமைகள் பங்கேற்ற இந்த விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர், மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


விழாவில் வரவேற்புரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், “எஸ்சிஓ திரைப்பட விழா, உலக சினிமாவின் சிறந்தவற்றின் அனுபவத்தை பெறுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும், கட்டமைப்பதற்குமான தனித்துவமான வாய்ப்புகளையும், வியத்தகு சந்தர்ப்பங்களையும் திரைப்பட இயக்குநர்களுக்கு வழங்குகிறது” என்றார்.


எஸ்சிஓ திரைப்பட விழா, எஸ்சிஓ அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவத்தை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். எஸ்சிஓ பகுதியைச் சேர்ந்த திரைப்படங்களின் பன்முகத்தன்மை மற்றும் திரைப்படத் தயாரிப்பு பாணிகளைக் பறைசாற்றுவதே இந்தியா இந்த விழாவை ஏற்பாடு செய்வதன் இலக்காகும், திரைப்பட விழாவின் முக்கிய குறிக்கோளும் இதுவே என்றார் அவர். “திரைப்பட கூட்டாண்மைகளை ஏற்படுத்தி நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டு இளம் திரைப்பட இயக்குனர்களின் திறமையை வளர்த்து இந்த தனித்துவமான பிராந்தியத்தின் கலாச்சாரங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.

திரைப்படக் கலையை மேம்படுத்தி, ஒருமித்த உணர்வுகளை ஏற்படுத்தி திரைப்பட கூட்டாண்மைகளை கட்டமைப்பதுடன் எஸ்சிஓ திரைப்பட விழாவை இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட ஆளுமைகள், வளரும் திரைப்பட இயக்குநர்கள் சினிமா ரசிகர்களின் கலவையான அனுபவத்தை இந்த திரைப்பட விழாவின் மூலம் ஏற்படுத்துவதே எஸ்சிஓ மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர் கூறினார். இந்திய சினிமாவுக்கான வாய்ப்புகளையும், கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த திரைப்பட விழா அமையும் என்று அவர் கூறினார். “எஸ்சிஓ அமைப்பின் இந்திய தலைமைப் பொறுப்பின் கீழ்  இந்த திரைப்பட விழா எண்ணற்ற துடிப்பான கலாச்சாரங்கள், அழகியல் உணர்வுகள் மற்றும் திரைப்பட சிறப்பை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“எஸ்சிஓ பிராந்தியம், வேறுபட்ட நாகரீகங்களின் கலவையாகும். கலை மற்றும் கலாச்சாரத்தின் செழுமையான பாரம்பரிய தொட்டில் ஆகும். இவை, உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு விருதுகளைப் பெற்ற எஸ்சிஓ நாடுகளின் திரைப்படங்களில் பிரதிபலிக்கின்றன என்று அமைச்சர் கூறினார்.

2019 ஆம் ஆண்டு மும்பையில் தேசிய இந்திய திரைப்பட அருங்காட்சியகத்தை தொடங்கி வைத்தபோது பிரதமர் திரு.நரேந்திர மோடி, திரைப்படங்களும், சமுதாயமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பவை என்று குறிப்பிட்டதை அமைச்சர் நினைவுகூர்ந்தார். திரைப்படங்களில் காணும் காட்சிகள் சமுதாயத்தில் நடக்கின்றன. சமுதாயத்தில் நடப்பவைதான் திரைப்படங்களில் காட்டப்படுகின்றன.

திரைப்படம் குறித்து உரையாற்றிய அமைச்சர், நாட்டின் செழுமையான கலாச்சாரம். பாரம்பரியம், மரபு, நம்பிக்கைகள், கனவுகள், அபிலாசைகள், லட்சியங்கள் ஆகியவற்றுடன், மாறி வரும் சூழலில் நாட்டின் காலத்தால் முற்பட்ட கதைகளின் சங்கமத்தை திரைப்படம் படம் பிடித்துக் காட்டுகிறது என்று கூறினார். “சமுதாயங்கள், கலாச்சாரங்கள், முரண்பாடுகளின் சாராத்தை திரைப்படம் உண்மையில் படம் பிடிப்பதுடன் நமது கூட்டு மனசாட்சியை பல்வேறு திரைப்பட வழிகளில் பிரதிபலிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.


இந்திய திரைப்படம்:

இந்திய இளைஞர்களின் தனித்திறமை மற்றும் அசாத்திய புத்தி கூர்மையைக் கொண்டு உலகின் திரைப்பட உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றி வருகிறோம் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். இதனை வெறும் கலையாக மட்டும் பார்க்காமல், உலகம் முழுவதும் உள்ள மக்களையும், அவர்களின் கலாச்சாரத்தையும் இணைக்கும் ஊடகமாக கருதுவதால்,  கடந்த நூற்றாண்டில் இந்திய சினிமா எல்லைகளைக் கடந்து சாதனைப் படைத்திருக்கிறது என்று கூறினார். இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய திரைப்பட உற்பத்தியாளராக இருப்பதுடன், திரைப்படம் சார்ந்த புத்தாக்க முயற்சிகளை அவ்வப்போது மேம்படுத்துவதுடன், உலக மக்களால் பெரிதும் கவரப்படும் சில திரைப்படங்களின் அனிமேஷன் உத்தியை வடிவமைத்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.  படைப்பாற்றல், தொழில்நுட்ப திறமை, திறன்வாய்ந்த பணியாளர்கள், ஆகியவற்றை கொண்ட மாபெரும் சமூகமாக இந்தியா திகழ்வதால், உலகளவிலான திரைத்துறையினருக்கு உலகத்தரம் வாய்ந்த படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ளும் வசதியை கொண்டிருப்பதாகவும் கூறினார். நம்முடைய படைப்பாற்றல் பொருளாதாரம் நம்மை ஓடிடி-ல் பீடுநடைப்போட உதவுவதாகவும், இந்த துறையின் தேவைக்கு ஏற்ப புதிய வேகத்துடன் செயல்பட மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள் பெரிதும் உதவுவதாகவும் குறிப்பிட்டார்.

உலகின் முக்கிய 12 சேவைத்துறைகளில் ஒன்றான ஆடியோ, வீடியோ சேவையை இந்தியா அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டு வருவதாகவும், ஏவிஜிசி பணிக்குழு இந்த துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க 2 திட்டங்களை இந்தியா அறிவித்ததுடன் படைப்பாளிகள் இந்தியாவிற்கு வரவேண்டும் என அறிவித்ததையும் நினைவுகூர்ந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்இஓ) இடம் பெற்றுள்ள உறுப்பு நாடுகள், இந்தியாவின் ஆடியோ- விஷவல் உபத் தயாரிப்பு ஊக்கத் தொகை திட்டம், இந்தியாவில் வெளிநாட்டு திரைப்படப் படப்பிடிப்புக்கான ஊக்கத் தொகை திட்டம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், இவை எஸ்இஓ-வின் திறன்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.

இந்திய திரைப்படங்கள் எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் அதிகளவில் திரையிடப்படுவதாகவும், அந்த நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.  குறிப்பாக இந்த நாடுகளில் இந்தியத் திரைப்படங்களை அதிகளவில் வெளியிடும் எஸ்சிஓ பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அமைச்சர், மத்திய ஆசிய பிராந்திய மக்களின் உள்ளம் கவர்ந்த திரைப்படங்களாக  இந்தியத் திரைப்படங்கள் புகழ் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டினர்.

1957-ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராஜ்கபூரின் மதர் இன்டியா திரைப்படத்தைக் காண ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியதை நினைவுகூர்ந்தார். அதே போல் ராஜ்கபூரின் அவாரா திரைப்படம் சோவியத் யூனியனில் முதல் முதலாக திரையிடப்பட்ட பாலிவுட் திரைப்படம் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தி கதாநாயகர்களான திலீப்குமார், தேவ் ஆனந்த், கதாநாயகி நர்கீஸ் ஆகியோருக்கு எஸ்இஓ உறுப்பு நாடுகளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதையும், 1970-கள் மற்றும் 80-களில் பாலிவுட் ஜாம்பவான் எல்லைகளை கடந்து அதிரடி ஹிட்களை  கொடுத்ததுடன், நினைவில் நின்ற வசனங்களையும், ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்தியதையும் குறிப்பிட்டார். அதே போல் மிதுன் சக்ரவர்த்தியின் நடன அசைவுகள் எஸ்சிஓ நாடுகளின் ரசிகர்கள் மத்தியில் என்றும் நினைவுகூரப்பட்டு வருவதாகவும் அவர்  கூறினார்.

பாகுபலி திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் இந்த நாடுகளில் மாபெரும் ரசிகர்களை தன்வசம் ஈர்த்திருப்பதுடன், அஜய் தேவ்கனின் த்ரிஷ்யம் திரைப்படம் அதன் திரைக்கதை மற்றும் வசனத்திற்காக எஸ்இஓ நாடுகளின் ரசிகர்களை மகிழ்வித்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற எஸ்சிஓ இளைஞர் பிரதிநிதிகள் கூட்டத்தில், அவர்கள் இந்திய பாடல்களை பாடியதுடன், புகழ் பெற்ற திரைப்பட நடனங்களை அரங்கேற்றியதையும் கூறினார்.

மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி வாழ்த்துரை வழங்கினார்.

 நடிகை ஹேமாமாலினி,

இயக்குனர்கள் ப்ரிதுல் குமார், ராகுல்  ரவேல், சீனத் திரைப்பட இயக்குனர் நிங் இங், கஜகஸ்தான் இசையமைப்பாளர் திமேஷ்குடேபர்கன், இயக்குனர்  குல்பராடோலோ  முசோவா, ரஷ்ய திரைப்படத் தயாரிப்பாளர்  இவான்  குட்ரிஅவுட்சேவ், தஜிகிஸ்தான் திரைப்படத் தயாரிப்பாளர் மெஹ்செட்ஷோஹியான், உஸ்பெகிஸ்தான்  நடிகர் மட்யகுப்சதுல்லாயவிச் மச்சனோவேர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னணி திரைப்படக் கலைஞர்களான ப்ரியதர்ஷன், ஊர்வசி, அக்ஷய்குமார், டைகர் ஷ்ரோஃப், , சஜித்நடியட்வாலா. ஈஷாகுப்தா, பூணம் திலியன், எலி ஆவ்ரம், ஹிரிஷிதா பட், ஜாக்கி பக்னானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பாரத் ஹை ஹூம் என்ற அனிமேஷன் சீரியலின் டிரைலரை அமைச்சர்  வெளியிட்டார்.

இந்தியாவில் நடைபெறும் முதல் எஸ்சிஓ திரைப்பட விழாவில் போட்டி மற்றும் போட்டி அல்லாத பிரிவுகளில் மொத்தம் 57 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.  இந்த திருவிழாவின் துவக்கமாக, இயக்குனர் பிரியதர்ஷனின் ஊர்வசி நடித்த  ஹிட் திரைப்படமான அப்பத்தாவின் பிரிமியர் காட்சிகள் வெளியிடப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த