முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய அரசிடமே அதிகாரமுள்ளபோது டெல்லி யூனியன் பிரதேச அரசு எதற்கென உச்ச நீதிமன்றம் வினா.

மத்திய அரசிடமே அதிகாரமுள்ளபோது டெல்லி யூனியன் பிரதேச அரசு எதற்கென உச்ச நீதிமன்றம் வினா.


அனைத்து விவகாரத்திலும் மத்திய அரசு தலையிட்டால் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கென உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு வினா.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையில் ஆட்சி நடக்கிறது. பொறுப்பு துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்‌ஷேனா உள்ளார். இதனிடையே டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் நீடிக்கிறது.



250 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்  ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற இருந்ததில் மேயர் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ரேகா குப்தாவும் முன்மொழியப்பட்டுள்ளனர். அதேபோல துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜலஜ் குமாரும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கமல் பக்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

லெப்டினண்ட் கவர்னர் வினய் குமார் சக்‌ஷேனாவால் நியமிக்கப்பட்ட சபாநாயகர் சத்யா சர்மா முன்மொழியப்பட்ட உறுப்பினர்களைப் பதவியேற்க அழைக்காமல் நியமன உறுப்பினர்களை ஆல்டெர்மென்களாக பதவியேற்க அழைத்தார். இதன் காரணமாக  கோபமடைந்த ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இருதரப்பிற்குமிடையே மேயர் அலுவலகத்திலேயே அடிதடி நடைபேற்று தேதி குறிப்பிடாமல் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்குமிடையே டெல்லி மாநிலத் துறைகளில் மத்திய அரசின் தலையீடு மற்றும் வரம்புகள் தொடர்பான மனு மீதான விசாரணை தொடர்ந்து மூன்று நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரிக்கிறது.





மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி என்பது தேசிய தலைநகராக இருப்பதால் அது ஒரு 'தனித்துவ அந்தஸ்து' பெறுகிறது. மேலும் இங்கு அனைத்து மாநிலங்களின் குடிமக்களும் வாழ்கிறார்கள். டெல்லியில் அனைவருக்குமான உரிமையுள்ளது எனும் உணர்வெழ வேண்டும். டெல்லி என்பது இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு காஸ்மோபாலிட்டன் நகர். இது இந்தியாவுக்கு சொந்தமானதென்றார்.

விசாரணையின் போது, ​​நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி அரசு சட்டங்களை இயற்ற முடியாத விஷயங்களைக் குறிப்பிட்டு, தலைநகர் டெல்லியில் சேவைகளை நிர்வகிப்பது தொடர்பான சட்ட மற்றும் அரசியலமைப்பு நிலை குறித்து கருத்துகளைக் கேட்டது.




மாநிலத்தின் அதிகாரம் செலுத்தும் வகையில் மற்றும் ஒரே நேரத்தில் (7வது அட்டவணையின் படி) சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்குள்ளது. ஆனால் மாநிலப் பட்டியலிலுள்ள பிரிவு 1,2,18,64, 65 (பொது ஒழுங்கு, காவல் மற்றும் நிலம் போன்றவை) பட்டியல்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டமன்றத்திற்கு இல்லை' என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்குப் பொருந்தக்கூடிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டமன்றத்திற்கு நிச்சயமாக உள்ளதென்று கூறியது.


அதற்கு பதிலளித்த சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா யூனியன் பிரதேசங்கள் என்பது மத்திய அரசின் விரிவாக்கம் தான். புவியியல் தன்மையில் யூனியன் பிரதேசங்களை பிரித்ததே மத்திய அரசு நிர்வகிப்பதற்காகத்தான் என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள் 

"அப்படியெனில் பிறகு எதற்கு டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு? மத்திய அரசு மட்டுமே அதிகாரம் செலுத்தினால் பிறகு எதற்கு அங்கு அரசாங்கம் என  வினா  எழுப்பினர். விரைவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த