முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய அரசிடமே அதிகாரமுள்ளபோது டெல்லி யூனியன் பிரதேச அரசு எதற்கென உச்ச நீதிமன்றம் வினா.

மத்திய அரசிடமே அதிகாரமுள்ளபோது டெல்லி யூனியன் பிரதேச அரசு எதற்கென உச்ச நீதிமன்றம் வினா.


அனைத்து விவகாரத்திலும் மத்திய அரசு தலையிட்டால் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கென உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு வினா.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையில் ஆட்சி நடக்கிறது. பொறுப்பு துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்‌ஷேனா உள்ளார். இதனிடையே டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் நீடிக்கிறது.



250 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்  ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற இருந்ததில் மேயர் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ரேகா குப்தாவும் முன்மொழியப்பட்டுள்ளனர். அதேபோல துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜலஜ் குமாரும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கமல் பக்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

லெப்டினண்ட் கவர்னர் வினய் குமார் சக்‌ஷேனாவால் நியமிக்கப்பட்ட சபாநாயகர் சத்யா சர்மா முன்மொழியப்பட்ட உறுப்பினர்களைப் பதவியேற்க அழைக்காமல் நியமன உறுப்பினர்களை ஆல்டெர்மென்களாக பதவியேற்க அழைத்தார். இதன் காரணமாக  கோபமடைந்த ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இருதரப்பிற்குமிடையே மேயர் அலுவலகத்திலேயே அடிதடி நடைபேற்று தேதி குறிப்பிடாமல் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்குமிடையே டெல்லி மாநிலத் துறைகளில் மத்திய அரசின் தலையீடு மற்றும் வரம்புகள் தொடர்பான மனு மீதான விசாரணை தொடர்ந்து மூன்று நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரிக்கிறது.





மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி என்பது தேசிய தலைநகராக இருப்பதால் அது ஒரு 'தனித்துவ அந்தஸ்து' பெறுகிறது. மேலும் இங்கு அனைத்து மாநிலங்களின் குடிமக்களும் வாழ்கிறார்கள். டெல்லியில் அனைவருக்குமான உரிமையுள்ளது எனும் உணர்வெழ வேண்டும். டெல்லி என்பது இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு காஸ்மோபாலிட்டன் நகர். இது இந்தியாவுக்கு சொந்தமானதென்றார்.

விசாரணையின் போது, ​​நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி அரசு சட்டங்களை இயற்ற முடியாத விஷயங்களைக் குறிப்பிட்டு, தலைநகர் டெல்லியில் சேவைகளை நிர்வகிப்பது தொடர்பான சட்ட மற்றும் அரசியலமைப்பு நிலை குறித்து கருத்துகளைக் கேட்டது.




மாநிலத்தின் அதிகாரம் செலுத்தும் வகையில் மற்றும் ஒரே நேரத்தில் (7வது அட்டவணையின் படி) சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்குள்ளது. ஆனால் மாநிலப் பட்டியலிலுள்ள பிரிவு 1,2,18,64, 65 (பொது ஒழுங்கு, காவல் மற்றும் நிலம் போன்றவை) பட்டியல்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டமன்றத்திற்கு இல்லை' என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்குப் பொருந்தக்கூடிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டமன்றத்திற்கு நிச்சயமாக உள்ளதென்று கூறியது.


அதற்கு பதிலளித்த சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா யூனியன் பிரதேசங்கள் என்பது மத்திய அரசின் விரிவாக்கம் தான். புவியியல் தன்மையில் யூனியன் பிரதேசங்களை பிரித்ததே மத்திய அரசு நிர்வகிப்பதற்காகத்தான் என வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள் 

"அப்படியெனில் பிறகு எதற்கு டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு? மத்திய அரசு மட்டுமே அதிகாரம் செலுத்தினால் பிறகு எதற்கு அங்கு அரசாங்கம் என  வினா  எழுப்பினர். விரைவில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...