முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈ்ரோடு தொகுதி இடைக்காலத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியான  6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது


இடைத்தேர்தலுக்கான அறிவிக்கையை  தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளதன் படி, தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, அருணாச்சல பிரதேசத்தில் லும்லா, ஜார்க்கண்டில் ராம்கர், மேற்கு வங்கத்தில் சாகர்திகி, மகாராஷ்டிராவில் கஸ்பா பேத், சின்ச்வாட் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி (செவ்வாய்) 2023 ல் தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 7 (செவ்வாய்) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும்.


வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 8 (புதன்) பிப்ரவரி 2023 ல் நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற 10 (வெள்ளி) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு 27 (திங்கள்) பிப்ரவரி 2023 ல்  மேற்கொள்ளப்படும்.  வாக்கு எண்ணிக்கை 2 (வியாழன்) மார்ச் 2023 அன்று நடைபெறும்.  திருமகன் ஈவெரா காலமானதால்   காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம்.27ஆம் தேதியில் தேர்தல் மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு காங்கிரஸ் சட்டமன்றப் பேரவை உறுபு திருமகன் ஈவெரா காலமானதை யடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில்  பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.


தமிழ்நாட்டில், ஈரோடு கிழக்கு தொகுதி  2008 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறையின் போது உருவாக்கப்பட்டதன்பின்னர் 2011, 2016, 2021 ஆகிய ஆண்டு நடைபெற்ற மூன்று சட்டமன்ற தேர்தல்களில்  2021 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பளார் திருமகன் ஈவெரா (வயது 46), திமுக கூட்டணியில் வெற்றி பெற்றார். இவர் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் கொள்ளு பேரனும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஒன்றிய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன்.


இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். அதனால் ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அந்த தேர்தல் விதிமுறைப் படி, தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டபேரவை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்  டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தேர்தலோடு இணைத்து தமிழ் நாட்டின், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதன்படி, ‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 31ஆம் தேதி முதல் தொடங்கும். மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கு பதிவு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள்  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் புதிய திட்டங்களை செயல்படுத்த கூடாது. இது தொடர்பான தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளரை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்காக பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்கு சாவடிகள் உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,26,876 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் - 1,10,713, பெண்கள் - 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் 23 பேர். இடைத்தேர்தலின்போது அங்கு 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு இருக்கும் தொகுதியாக இருந்தால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகள் கடைபிடிக்கப்படும்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கினைக்க மாநில அளவிலான குழு அமைக்கப் பட்டுள்ளது.


அவர்களுடைய பணிகள் சிறக்க பாஜக மாநில தலைவர் கே.. அண்ணாமலை.வாழ்த்தியதும் மற்றும் திமுக சார்பில் அதன் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கடைசியில் கட்சிக்கு தொகுதி  ஒதுக்கி திமுக அறிவித்துள்ளது.முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாகாலமாகிய பின் அதிமுக ஐந்து பிரிவாக உடைந்த நிலை  எதிர்க்கட்சியில் கடும் குழப்பம் . எடப்பாடி கே பழனிசாமி அணி ஓ.பன்னீர்செல்வம் ஆணி மட்டுமே  பனிப்போர்  நீடிக்கிறது. மற்ற அணிகள் இணைந்து செயல்படும் நிலை இல்லை  கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு  தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தமாகா என்ற வாசன் அணி போட்டியிட்டு தோல்வியைச்  சந்திதத நிலையில், அதிமுக இடைக்காலப்  பொதுச்செயலாளர் எடப்பாடி கே  பழனிசாமி தரப்பும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்  தரப்பும் வேட்பாளர்களை முடிவு செய்வது தொடர்பாக  இரண்டு நாட்களாக  ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி தர்மத்தை மதித்து  தமாகா போட்டியிட அதிமுக உதவ வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தினர் அதன் பின்னர் விலகினார்.
 தேர்தலில் போட்டியிட்டால்  தமாகா படுதோல்வியை சந்தித்தால் எதிர்க்கட்சிகளுக்கு  அவமானமாகும் என்பதால் அதிமுகவே தேர்தலில் போட்டியிட விரும்புவதாக  எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம் . அந்தவகையில்,  பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருப்பினும், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள்  அமைச்சருமான கே.வி.ராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்த கே.பழனிச்சாமி அதிமுக முடிவு செய்து  தேர்தல் பணிகளை  தொடங்கிவிட்டதாக தகவல்கள் வருததையடுத்து  கூட்டணி தர்மத்தை அதிமுக மீறியதாக தொண்டர்களே இல்லாத தமாகாவின் மூத்த நிர்வாகிகள் இடையே  பேசும் நிலை 

அதேநேரத்தில் பாஜ சார்பில் தமாகா போட்டியிட்டால் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என மாநில தலைமை  அண்ணாமலை வாசனிடம் தெரிவித்ததனால்தான் வாசன் இரு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டார். அண்ணாமலை ஆதரவு தருவதாக கூறியது பற்றியும் தெரிவித்துள்ளார்.. பாஜகதனித்து இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டால் படு தோல்வி அடையும் என்பதால், மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து சரியாகப் பேச முடியாதென்பது ஒருபக்ககம் பா ஜ க வை நம்பி வந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் கைவிட்ட நிலையாகிவிடும் எனக் கருதும் நிலையில்  தமாகா போட்டியிட்டால் எடப்பாடி கே.பழனிச்சாமி வேட்பாளரை ஆதரிக்காத நிலை உருவாகும். மக்களவைத் தேர்தலிலுக்கு பலப்பரிச்சை என்பதால் கூடுதல் இடங்களைக் கேட்கலாம் என்று பா ஜ க நினைத்ததனால்தான் வாசனை தொடர்பு கொண்டு பேசிய அண்ணாமலை, தமாகா இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் எனகஹ கேட்டுக் கொண்டார்.

ஆனால் அதிமுக, பாஜக இடையேயான பணிப்போரில் நாம் சிக்கிவிடக் கூடாது என நினைத்து  வாசன், சீட் கேட்டு எடப்பாடியை நெருக்கி வந்ததை கைவிட்டு விட்டு, தேர்தலில் போட்டியில்லை என்று முன் கூட்டியே அறிவித்தும் விட்டார். அதேநேரத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைமையை அகில இந்திய தலைமை கேட்டுக் கொண்டதால்  இன்று மாலை 4 மணிக்கு சென்னை  தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலையை எடப்பாடி கே பழனிச்சாமி அணியினர் சந்தித்து ஆதரவு கேட்கின்றனர். அப்போது அவர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தற்போது  ஓ.பன்னீர்செல்வம்தான். அவர் ஏ,பி பாரம்  கொடுத்தால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் அவரிடம் பாஜக தலைவர்கள் மூலம் பேசி, தேர்தல் ஆணையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தான் என்பதற்கான உத்தரவை வாங்கித் தரும்படி எடப்பாடி கே.பழனிச்சாமி  கூறி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, என்னை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொண்டு அறிவிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நான் கடிதம் கொடுக்கிறேன் என்கிறார். ஆனால் இதற்கு எடப்பாடி கே. பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. அதனால், அண்ணாமலை ஒதுங்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு.

அதனால் அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசசாமி ஆதரவு அணி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர் ஒருவரை நிறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடிதம் கொடுத்து அவரது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை கேட்கவும்  முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று காலையில் அவர் அறிவிப்பார்  அப்போது ஒ.பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னம் எடப்பாடி கே. பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டு தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும். அல்லது அவருக்கு கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட வேண்டும்.

அப்படிச் செய்தால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கும். இதனால் சின்னத்தை முடக்கியதற்கான பழி எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு வரும் . இதனால் இடியாப்ப சிக்கலில் எடப்பாடி கே.பழனிச்சாமி  உள்ளார். ஆனாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவு அணி உறுதியாக உள்ளார்கள். சின்னத்திற்கு பாஜக உதவ வேண்டும் என்றும்  கேட்்கிறார். ஆனால் பாஜக கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி அணி முடிவு செய்துள்ளது.
அதிமுகவில் எடப்பாடி அணி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில்,  ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர் ஒருவரை நிறுத்தி  இரட்டை இலை சின்னத்தை கேட்க முடிவு  செய்துள்ளார். இச் சூழலில் அமமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் நிலை கட்டாயம் உண்டு ஆகவே அதிமுக ஐந்து பிரிவில் மூன்று பிரிவு இந்த தேர்தலில் மோதும் நிலை வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த