இராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காட்டில் அதிரடி சோதனை நடத்திய ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை வருவாய் வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அரசு ஊர்தி ஓட்டுநர் பார்த்திபன் ஆகிய இருவர் கைது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் செய்னத்தல் பகுதி சகாதேவனுக்குச் சொந்தமான பூர்வீக சொத்து ஆற்காடு அருகில் மாங்காட்டில் உள்ள சொத்தின் வரி விதிப்பு ஆவணம்
பட்டா 1982 ஆம் ஆண்டில் UDR-ல் பிழை ஏற்பட்டதாக சகாதேவன் 2015 ஆம் ஆண்டு
முதல் பட்டா திருத்தம் செய்வதற்காக முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில் பட்டா திருத்தம் செய்வதற்காக ஆற்காடு வருவாய் வட்டாட்சியரான சுரேஷ், சகாதேவனிடம் பட்டா பிழை திருத்த ரூபாய் 15,000 இலஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. மேலும் சுரேஷ் லஞ்சமாக கேட்ட பணத்தை அரசு அலுவலக வாகன ஓட்டுநர் பார்த்திபனிடம் கொடுக்கும் படி சகாதேவனிடம் கூறியுள்ளார்.
வருவாய் வட்டாட்சியர் லஞ்சமாகக் கேட்ட பணத்தை சகாதேவன் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையுடன் பிடித்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில்
வருவாய் வட்டாட்சியர் சுரேஷ் அவரது அலுவலக வாகன ஓட்டுநர் பார்த்திபன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள்