முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலாவது ஜி 20 வேலை வாய்ப்புப் பணிக்குழு கூட்டம் ஜோத்பூரில் நிறைவடைந்தது

இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள 3 முன்னுரிமை பகுதிகளில் ஆக்கப்பூர்வமாக செயலாற்றும்


ஆர்வத்தை அனைத்து ஜி 20 நாடுகளும் காட்டிய நேர்மறையான அணுகுமுறையுடன், முதலாவது ஜி 20 வேலை வாய்ப்புப் பணிக்குழு கூட்டம் ஜோத்பூரில் நிறைவடைந்தது


முதலாவது ஜி 20 வேலை வாய்ப்புப் பணிக்குழுக் கூட்டம் ஜோத்பூரில் இன்று நிறைவடைந்தது. உலகளாவிய திறன் இடைவெளிகளை நிவர்த்தி செய்தல், தற்காலிக மற்றும் சாலையோர தொழிலாளர் பொருளாதார தளத்துக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான நிலையான நிதியுதவி ஆகிய இந்தியாவின் மூன்று முன்னுரிமைப் பகுதிகளின் இலக்குகளை நோக்கி ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டும் விதமாக அனைத்து ஜி 20 நாடுகளும் நேர்மறையான செயல்பாடுகளைக் கொண்டிருந்தன.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தலைமையில் இந்தியவின் தலைமைத்துவத்தின் கீழ் வேலைவாய்ப்பு பணிக்குழுவின் மூன்று நாள் கூட்டம் பிப்ரவரி 2 முதல் 4 ஆம் தேதி வரை ஜோத்பூரில் நடைபெற்றது. தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள், வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக் கொண்டு இக்கூட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் வலுவான, நிலையான வேலை வாய்ப்புடன் வளம் நிறைந்த வளர்ச்சி குறித்து விவாதங்கள் நடைபெற்றன.


'உலகளாவிய திறன்கள் மற்றும் தகுதிகள் தொடர்பான உத்திகளை ஆராய்தல் மற்றும் பொதுவான திறன் கட்டமைப்பை உருவாக்குதல்' என்ற தலைப்பில் ஒரு குழு விவாதத்தை உள்ளடக்கிய ஒரு சிறப்பு நிகழ்வுடன் வேலைவாய்ப்பு பணிக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

அனைத்து பிரதிநிதிகளையும் அன்புடன் வரவேற்ற மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இரண்டாம் நாள் தொடக்க அமர்வில், கண்ணியமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அர்த்தமுள்ள முன்னேற்றம் மற்றும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்துப் பேசினார்.


ஜி20 வேலை வாய்ப்புப் பணிக்குழுத் தலைவரும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளரின் தொடக்க உரையுடன் மூன்றாம் நாள் கூட்டம் தொடங்கியது. மூன்றாம் நாள் அமர்வுகளின் போது ‘சமூகப் பாதுகாப்பிற்கான நிலையான நிதியுதவி’ என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட சில சர்வதேச அமைப்புகள் சமூகப் பாதுகாப்பில் தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் சவால்களை எடுத்துரைத்தன. உலக வங்கியின் விளக்கத்தில், உலகளாவிய சமூகப் பாதுகாப்பின் அவசியம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. இந்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஒரு குழு, இந்தியாவில் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் விளக்கத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து நாடுகள் வாரியான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாடுகள் அந்தந்த நாடுகளில் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பாக விவரித்தன.


இந்த அமர்வுகளில் குறுகிய யோகாப் பயிற்சி இடைவேளைகளும் இருந்தன. வேலைவாய்ப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களான இந்தோனேஷியா மற்றும் பிரேசிலின் ஊக்கமளிக்கும் கருத்துகளுடன் அமர்வுகள் நிறைவடைந்தன. வேலைவாய்ப்பு பணிக் குழுவின் தலைவரும், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளருமான திருமதி ஆர்த்தி அஹுஜா, தமது நிறைவுரையில், அனைத்து ஜி20 பிரதிநிதிகள், பங்கேற்பாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் கலந்துரையாடல்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்