முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கை 2022-23:சிறப்பு அம்சங்களும் மாற்றும் மாநில பாதிப்புகளும்

பொருளாதார ஆய்வறிக்கை 2022-23: சிறப்பு அம்சங்கள்


துறைகள் தோறும் விரிந்த தளத்தில் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து இருப்பதால், நிதியாண்டு 23 –ன் வளர்ச்சி பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு முன்னேறி வருகிறது

2022 நவம்பரில் சில்லறை வர்த்தக பணவீக்க விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் வந்துள்ளது

2022 ஏப்ரல் – நவம்பர் காலத்தில் நேரடி வரி வருவாய் தொடர்ந்து மேம்பட்டுள்ளது

விரிவடைந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காரணமாக நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைந்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பதிவு வேகமடைந்துள்ளது


வாய்ப்புகள், திறன்களை விரிவாக்குவதற்கு பொது சேவைகளை உருவாக்குதல், வாழ்க்கையை எளிதாக்குதல், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வளர்ச்சியில் துணை பங்குதாரராக தனியார் துறையை ஊக்குவித்தல் ஆகியவை அரசு சீர்திருத்தங்களின் மையப் பொருள்கள்

தெளிவான வரவு-செலவு அறிக்கைகள் நிதிநிறுவனங்களின் கடன் விரிவாக்கத்திற்கு வழி வகுத்துள்ளன


கடன் பெறுவதில் வளர்ச்சி, தனியார் மூலதன செலவு அதிகரிப்பு ஆகியவை நியாயமான மூலதன சுழற்சிக்கு வழிவகுத்துள்ளது

2022 ஏப்ரலுக்குப் பின், உணவுப் பொருள் அல்லாதவற்றுககு

2022-23 ஆம் ஆண்டுக்கான  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்தார்.   இந்த ஆய்வறிக்கையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

பொருளாதாரம் 2022-23-ன் நிலை: முழுமையான மீட்சி

பெருந்தொற்றால் ஏற்பட்ட தொய்வு, ரஷ்யா-உக்ரைன் மோதல், பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து  மீட்சிப் பெற்று   துறைகள் தோறும் விரிந்த தளத்தில் இந்திய பொருளாதாரம் நிதியாண்டு 23–ன் வளர்ச்சி பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு முன்னேறி வருகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, நிதியாண்டு 24-ல் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நிதியாண்டு 24-க்கான ஜிடிபி மதிப்பீடு 6-6.8 சதவீதம்.

நிதியாண்டு 15-க்குப் பின் முதலாவது அரையாண்டில் தனியார் நுகர்வு அதிகபட்சமாக உள்ளது.   இது உற்பத்தி செயல்பாட்டை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.  இதன் காரணமாக, துறைகள் தோறும் திறன் பயன்பாடு விரிவடைந்துள்ளது. 


மத்திய அரசின் மூலதனச் செலவும் தனியார் மூலதன செலவின்  அதிகரிப்பும், பெருநிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு அறிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.  இது நடப்பாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.

2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் எம்எஸ்எம்இ துறையின் கடன் வளர்ச்சி சராசரியாக 30.6 சதவீதமாக இருந்தது. 

2022 நவம்பரில் சில்லறை பணவீக்க விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கு எல்லைக்குள் இருந்தது. 

2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் வளர்ந்து வரும் இதர சந்தைப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில் இருந்தது. 

2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் நேரடி வரிவருவாய் தொடர்ந்து மேம்பட்ட நிலையில் இருந்தது. 


விரிவடைந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காரணமாக நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைந்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பதிவு வேகமடைந்துள்ளது.

பொது டிஜிட்டல் தளங்கள் விரிவாக்கம் மற்றும் பொருள் உற்பத்திக்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கம்  ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது.


இந்தியாவின் நடுத்தர வளர்ச்சிக் கண்ணோட்டம்: நிச்சயத்தன்மையும் நம்பிக்கையும்

இந்திய பொருளாதாரம் விரிவான அடிப்படை கட்டமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுள்ளது.  இது பொருளாதாரத்தின் அடிப்படைகளை வலுப்படுத்தியுள்ளது.  இதன்மூலம் 2014-2022 காலத்தில் ஒட்டுமொத்த திறன்  விரிவாக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையையும், வணிகம் செய்வதையும் எளிதாக்கி மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாய்ப்புகள், திறன்களை விரிவாக்குவதற்கு பொது சேவைகளை உருவாக்குதல், வாழ்க்கையை எளிதாக்குதல், நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வளர்ச்சியில் துணை பங்குதாரராக தனியார் துறையை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் 2014-க்கு பிந்தைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


2014-2022 காலத்திற்கு முந்தைய ஆண்டுகளில் கடன் அதிகரிப்பாலும், உலகளாவிய அதிர்வுகளாலும்  வரவு – செலவு அறிக்கைகளில் அழுத்தம் ஏற்பட்டது.  இது கடன் வளர்ச்சி, மூலதன உருவாக்கம், இதே காலத்தில்  பொருளாதார வளர்ச்சி போன்ற பருப்பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. 

அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் 1998-2002 காலத்திற்கு ஒத்த நிலையில் இருந்ததால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தற்காலிக அதிர்வுகள் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.  இந்த அதிர்வுகள்  மறைந்த பின்  மேற்கொள்ளப்பட்ட  கட்டமைப்பு சீர்திருத்தங்கள் 2003-லிருந்து வளர்ச்சியில்  பலன்களை தந்தன. 

அதேபோல், பெருந்தொற்றின் உலகளாவிய அதிர்வுகளும் 2022-ல்  அதிகரித்த சரக்குகளின் விலையும் குறையும் போது,  வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் நல்ல நிலையில் இருக்கும். 


வங்கித் துறை, வங்கி அல்லாத துறை, கார்ப்பரேட் துறைகளின்  வரவு – செலவு அறிக்கைகள் வலுவானதாகவும், மேம்பட்டும் இருப்பதால், புதிய கடன் சுழற்சி ஏற்கனவே தொடங்கியுள்ளது.  இதனால், கடந்த சில மாதங்களில் வங்கிக் கடன் வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது. 

பொருளாதார சீர்திருத்தங்கள் அடிப்படையிலான டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மகத்தான முறைப்படுத்துதல், அதிக அளவிலான நிதி உள்ளடக்கம், பொருளாதார வாய்ப்புகள் காரணமாக இந்திய பொருளாதாரம்  பயனடைய தொடங்கியுள்ளது. 

இந்தியாவின் வளர்ச்சி பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை விட, சிறப்பானதாக இருப்பதையும், நடுத்தர நிலையில் தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள இந்திய பொருளாதாரம் தயாராகி வருவதையும் ஆய்வறிக்கையின் அத்தியாயம்-2 காட்டுகிறது.

நிதி மேம்பாடு: வருவாய் அதிகரிப்பு

2023 நிதியாண்டில் மத்திய அரசின் பொருளாதார திட்டங்களின் வெற்றிக்கு பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் நேரடி வரிவிதிப்பிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவை முக்கியப் பங்காற்றின.


2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த வருவாய் முன்பதிவு 15.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களுக்கான நேரடி வரி வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது சராசரியாக அதிகரித்திருக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் வளங்கள் ஜிஎஸ்டி மூலம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி  வரிவசூல் 24.8 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இந்த ஆண்டின் உயர் வருவாய் செலவு தேவைக்கு ஏற்ப மத்திய அரசு மூலதன செலவை (சிஏபிஇஎக்ஸ்) நிர்ணயித்திருக்கிறது. மத்திய அரசின் சிஏபிஇஎக்ஸ் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2009 ஆம் நிதியாண்டு முதல் 2020 ஆம் நிதியாண்டு வரையிலான கடந்த கால ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த சதவீதம் 2022 ஆம் நிதியாண்டில் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு வட்டியில்லா இலவசக் கடன்கள் மூலம் ஊக்கத் தொகையை மத்திய அரசு அளித்து வருகிறது. அதே போல் வசூலிப்பு இலக்கை நிர்ணயிக்கும் மூலதன செலவீட்டுக்கு முக்கியத்துவம் அளித்தும் வருகிறது.


சாலை, நெடுஞ்சாலை, ரயில்வே, வீட்டுவசதி. நகர்ப்புற மேம்பாடு போன்றவற்றில் மூலதன செலவீட்டை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை மேம்படுத்த முன்வந்துள்ளது.

மத்திய அரசின் மூலதன செலவீட்டை அதிகரிக்கும் செயல் திட்டம். இந்தியாவின் வளர்ச்சியை அதிகரித்திருப்பதுடன், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நிலைத்தன்மையை உருவாக்கியிருக்கிறது.

நிதி மேலாண்மை மற்றும் நிதிபகிர்வு: சிறந்த வருடம்

2022 ஏப்ரல் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதி கடுமைப்படுத்துதல் சுற்றை முன்னெடுத்தது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதத்தை 225 புள்ளிகள் அதிகரித்ததன் மூலம் நிதி கையிருப்பில் நவீனத்துவத்திற்கு வழிகோலியது.

தெளிவான வரவு-செலவு கணக்கு பொருளாதார நிறுவனங்களின் வளர்ச்சிக்கு திட்டமிட்டது.

கடன் தள்ளுபடி வளர்ச்சி நீடித்த மற்றும் நிலையான பொது மூலதன செலவீடுகளுக்கு பயன்பட்டது.

உணவு அல்லாத துறைகளுக்கான கடன் தள்ளுபடி மூலம், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளில் வளர்ச்சி விகிதம் 2 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

வங்கியில் அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் விடுவிப்பு அதிகரித்துள்ளது.


ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளின் ஒட்டு மொத்த வாராக்கடன் விகிதாச்சாரம் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்துள்ளது.

முதலீட்டு இடர்பாடுகளுக்கான விகிதாச்சாரம் 16 சதவீதமாகவே நீடிக்கிறது.

திவால் நிலையில் உள்ள ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளின் வரிவசூல் கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2022 நிதியாண்டில் அதிகமாக இருந்தது.

விலை நிர்ணயம் மற்றும் பணவீக்கம்: வெற்றிகரமாக பீடுநடை

3 முதல் 4 தசாப்தங்களுக்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு உலக நாடுகளே அதிக பணவீக்கத்தை எதிர்கொண்டன. இந்தியாவில் விலைவாசி அதிகரித்தது.

இந்தியாவின் கொள்முதல் பணவீக்க விகிதம் 2022 ஏப்ரல் மாதம் 7.8 சதவீதமாக அதிகரித்தது.

விலையை அதிகரிக்க ஏதுவாக மத்திய அரசு பன்நோக்கு அணுகுமுறையை கையாண்டது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான இறக்குமதி வரி பல்வேறு கட்டங்களாக குறைக்கப்பட்டது.

முக்கியப் பொருட்களான இறக்குமதி வரி 0 சதவீதத்திற்கு கொண்டு வரப்பட்டதன் பலனாக இரும்பு மற்றும் அதன் தாதுக்களின் ஏற்றுமதி 30 முதல் 50 சதவீதம் அதிகரித்தது.

பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரி தள்ளுபடி 2022 ஏப்ரல் 14-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.

கோதுமை பொருட்களை ஏற்றுமதி செய்ய எச்.எஸ்.கோடு


1101-ன் படி தடை விதிக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பனை எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான அடிப்படை வரி குறைக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி பணவீக்க எதிர்பார்ப்புகளை சிறந்த வழிகாட்டுதல்கள் மூலமாகவும், சிறப்பான பணக் கொள்கைகள் மூலமாகவும் கையாள்வதன் காரணமாக நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாடான நிலையில் உள்ளது.

வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகங்கள் தொடர்பான ஒன்றரை  ஆண்டு கால பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் சராசரி நிலைக்கு வந்துள்ளது.

வீட்டுவசதித் துறையில் அரசின் சரியான தலையீடுகள் காரணமாக கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைந்து வீடு வாங்குவோர் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இதன் காரணமாக 2023 ஆம் நிதியாண்டில் குறைந்த விலை வீடுகள் அதிகம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த வீடுகள் விலைக் குறியீட்டு மதிப்பீட்டில் உயர்வு மற்றும் வீட்டு விலைக் குறியீட்டு சந்தை விலைகள் வீட்டுவசதித் துறை மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதை உணர்த்துகிறது. வீடுகள் விலைக் குறியீட்டில் நிலையானது முதல் மிதமானது வரையிலான உயர்வு வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பணவீக்க மேலாண்மை குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. முன்னேறிய பொருளாதார நாடுகள் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவதில் போராடும் நிலையில் இந்தியா சிறப்பான மேலாண்மையை கொண்டுள்ளது.


சமூக உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு: பெரிய அளவில்

சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்திருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதார துறைக்கான பட்ஜெட் செலவீனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 2023 ஆம் நிதியாண்டில் 2.1 சதவீதத்தை எட்டியுள்ளது. 2021 நிதியாண்டில் 1.6 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டு 2.2 சதவீதமாகவும் இருந்தது.

முந்தைய 2016 ஆம் நிதியாண்டில் ரூ.9.1 லட்சம் கோடியாக இருந்தது சமூகத் துறைகளுக்கான செலவீனம், 2023 ஆம் நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

யுஎன்டிபி-ன் 2022 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் 2005 – 06 முதல் 2019 – 20 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் மற்றும் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் நல்லாட்சியை ஏற்படுத்த மாவட்ட அளவிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய அளவிலான ஆவணங்களை உருவாக்குவதற்காக இ-ஷ்ரம் போர்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணின் அடிப்படையில் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன்படி 2022 டிசம்பர் 31-ந் தேதி வரை இ-ஷ்ரம் போர்டல் மொத்தம் 28.5 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் எண்களை உள்ளடக்கிய ஜேஏஎம் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியில் நலிவடைந்த மக்களுக்கு உதவும் வகையில் நேரடியாக வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்கு எளிமையான நிதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.


கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கோ-வின் இணையதள வசதி மூலம் ஆதார் உதவியுடன் 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த வெற்றிக்கு ஆதார் எண்ணின் பங்கு இன்றியமையாதது.

கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் கிராமம் மற்றும் நகரங்களில் தொழிலாளர் சந்தைகள் மீட்கப்பட்டன. 2018-19 ஆம் ஆண்டு 5.8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மையின் விகிதம் 2020 ஆம் ஆண்டு 4.2 சதவீதமாக குறைந்தது.


2022 நிதியாண்டில் பள்ளியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் 6 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களின் மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்களின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட சுகாதாரத்துறை சார்ந்த நடவடிக்கைகளால் 2014 ஆம் நிதியாண்டில் 64.2 சதவீதமாக இருந்த சுகாதார செலவீனங்கள் 2019 ஆம் ஆண்டு 48.2 சதவீதமாக குறைந்திருக்கிறது.

மகப்பேறு இறப்பு விகிதாச்சாரம், 5 வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் மற்றும் என்எம்ஆர் இறப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைந்துள்ளது.

2023 ஜனவரி 6-ந் தேதி வரை 220 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


2023 ஜனவரி 4-ந் தேதி வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 22 கோடி பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1.54 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன.

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்: எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்

2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான உறுதி மொழியை இந்தியா பிரகடனப்படுத்தியுள்ளது.

2030-ம் ஆண்டுக்கு முன்பாக புதைப்படிம மற்ற  எரிப்பொருளிலிருந்து 40 சதவீத மின்திறனை அடையவேண்டும் என்ற இலக்கை இந்தியா முன்கூட்டியே எட்டியுள்ளது.

2030-ம் ஆண்டு புதைப்படிம மற்ற மின்சார நிறுவு திறன் 500 ஜிகாவாட்டை எட்டும். இதன் விளைவாக, 2014-15ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2029-30ம் ஆண்டில் சராசரி கார்பன் வெளியேற்றம் 29 சதவீத அளவுக்கு குறையும்.


இந்தியா தமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கார்பன் வெளியேற்ற விகிதத்தை 2005 முதல் 2030ம் ஆண்டுக்குள் 45 சதவீதம் குறைக்கும் தீவிரத்துடன் செயல்படுகிறது.

2030ம் ஆண்டுக்குள்  50 சதவீத மின்சக்தியின் நிறுவு திறன் புதைப்படிமமற்ற வளங்களிலிருந்து பெறப்படும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பாக லைஃப் என்ற மிகப்பெரிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இறையாண்மை பசுமைப் பத்திர செயல்திட்டம் 2022 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரிசர்வ் வங்கி இரண்டு தவணைகளாக 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கான இறையாண்மை பசுமைப் பத்திரங்களை ஏலம் விடுகிறது.

 தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்,  இந்தியாவை 2047ம் ஆண்டுக்குள் எரிச்சக்தி தற்சார்பு நாடாக மாற்ற வகை செய்யும்.


 2030ம் ஆண்டுக்குள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறன் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும். ஒட்டுமொத்தமாக புதைப்படிம இறக்குமதி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைக்கப்படுவதுடன், 2030ம் ஆண்டுக்குள் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 125 ஜிகாவாட் அளவுக்கு அதிகரிக்கப்படுவதுடன், 2030-க்குள், ஆண்டுக்கு  50 மில்லியன் மெட்ரிக் டன் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் தவிர்க்கப்படும்.

இந்த ஆய்வு, பருவநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் கீழ் பருவ நிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளவும், நீடித்த வளர்ச்சிக்காகவும் செயல்படுத்தப்படும் 8 இயக்கங்களின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கிறது. 


தேசிய சூரியசக்தி இயக்கத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறன் அக்டோபர் 2022-ல் 61.6 ஜிகாவாட்டாக உள்ளது.

இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மிகவும் விரும்பப்படும் மையமாக மாறியுள்ளது.  கடந்த 7 ஆண்டுகளில் இதில் 78.1 பில்லியன்  அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்துள்ளது.

நீடித்த வளர்ச்சிக்கான தேசிய வாழ்விட இயக்கத்தின் கீழ் (ஆகஸ்ட் 2022) 62.8 லட்சம் தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளும், 6.2 லட்சம் சமுதாயம் மற்றும் பொது கழிப்பிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

வேளாண் மற்றும் உணவு மேலாண்மை

வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளில் மிகச்சிறப்பாக உள்ளது. பயிர் மற்றும் கால்நடை வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அரசு எடுத்து நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை மேம்படுத்த உத்வேகம் அளிக்கப்படுகிறது. விவசாய உள்கட்டமைப்பு நிதியத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது.


2021ம் நிதியாண்டில் வேளாண்மையில் தனியார் முதலீடு 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

2010ம் ஆண்டு முதல் பயிர்களுக்கு அதன் சராசரி உற்பத்திசெலவில் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

2021-22ம் ஆண்டில் வேளாண் துறைக்கான நிறுவனக் கடன்கள் தொடர்ந்து உயர்ந்து 18.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

2021-22ம் ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி  நிலையான வளர்ச்சியை பெற்று 315.7 மில்லியன் டன்னாக இருந்தது.

ஜனவரி-1, 2023ல் இருந்து ஓராண்டுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 81.4 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவு வழங்கும் திட்டத்தின் கீழ், ஏப்ரல் – ஜூலை  2022-23 காலகட்டத்தில் 11.3 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் அறுவடைக்குப் பிந்தைய ஆதரவு மற்றும் சமூகப் பண்ணைகளுக்காக  13 ஆயிரத்து 681 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


போட்டித்தன்மையுடன் கூடிய, வெளிப்படைத் தன்மையுடைய, இணையதள ஏல நடைமுறையில் இ-நாம் திட்டத்தில் ஒருகோடியே 74 லட்சம் விவசாயிகளும் 2 லட்சத்து 30 ஆயிரம் வியபாரிகளும், இணைந்துள்ளனர். 

பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம், இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.

சர்வதேச சிறுதானிய ஆண்டு முன்முயற்சியின் கீழ் சிறுதானியங்களை ஊக்குவிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

தொழில் துறை:  நிலையான மீண்டெழும் தன்மை

தொழில் துறையின் மூலம் 2022 -23ம் நிதியாண்டின் முதல் பாதியில் ஒட்டு மொத்த மதிப்பு கூட்டுதல் விகிதம் 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சியான 2.8 சதவீதத்தை விட, இது அதிகமாகும்.

தனியார் இறுதி நுகர்வு செலவில் மிகப்பெரிய வளர்ச்சி, நிதியாண்டின் முதல் பாதியில் வலுவான ஏற்றுமதி, பொது மூலதனச் செலவால் முதலீட்டு தேவை அதிகரிப்பு, வலுவான வங்கி கட்டமைப்பு மற்றும்  பெரு நிறுவனங்களில் மேம்பட்ட வரவு - செலவு இருப்பு நிலைகள், தொழில் துறை வளர்ச்சிக்கான ஊக்கத்தை வழங்கியுள்ளன.


தொழில் துறைக்குத் தேவையான விநியோகங்களும் வலுவான நிலையில் உள்ளன.

கொள்முதல் மேலாண்மை குறியீடு கடந்த 18 மாதங்களில் அதாவது ஜூலை 2021 முதல் விரிவடைந்த நிலையிலேயே உள்ளது.  மேலும் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்கள்  ஜனவரி 2022 முதல் சராசரியாக 30 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன. அக்டோபர் 2022 முதல் பெரு நிறுவனங்களுக்கான கடன்கள் இரட்டை  இலக்க சதவீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.


மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 2019ம் நிதியாண்டில் 4.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்தது, 2022ம் நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்து 11.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

உலக அளவில் மொபைல் ஃபோன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. 2015ம் நிதியாண்டில், 6 கோடியாக இருந்த மொபைல் ஃபோன் உற்பத்தி 2021-ம் நிதியாண்டில் 29 கோடியாக அதிகரித்துள்ளது.

மருந்து உற்பத்தித் துறையில்  2019ம் நிதியாண்டில் 180 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு 2022ம் நிதியாண்டில் 4 மடங்கு அதிகரித்து, 699 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் 14 பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவின் அளவுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-ம் நிதியாண்டில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டத்தில் 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய்  முதலீடு பெறப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டுக்கான இலக்கில் 106 சதவீதமகும். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்றுள்ளதுடன், 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.



2023 ஜனவரி வரை 39 ஆயிரம் சிக்கல்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், 3500க்கும் மேற்பட்ட வகைகள் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன.

சேவைகள்: வலிமையின் ஆதாரம்

• கடந்த நிதியாண்டில் 8.4  சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்த சேவைத்துறை, இந்த நிதியாண்டில் 9.1  சதவீத வளர்ச்சி பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• கடந்த ஜூலை 2022 முதல் கொள்முதல் மேலாண்மைக் குறியீடு சேவைகளில் வலிமையான விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் சேவைத் துறையின் செயல்பாட்டைத் தெளிவாக உணர முடிகிறது.


• கடந்த 2021 ஆம் ஆண்டில் சேவைத்துறை சார்ந்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் பத்து இடத்தில் இந்தியாவும் இருந்தது.  உலக வர்த்தக சேவைகள் ஏற்றுமதியில் அதன் பங்கு 2015-ல் 3 சதவீதத்திலிருந்து  2021-ல் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

• கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திலும், டிஜிட்டல் மயமாக்கல், தொலைநிலை சேவையகங்கள், உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் போன்றவற்றின் தேவைகள் அதிகரித்ததன் விளைவாக புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு வித்திட்ட நிலையிலும், இந்தியாவின் சேவைத்துறையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க நிலையில் இருந்தன.


• கடந்த ஜூலை 2022 முதல் சேவைத் துறைக்கான வரவினம் 16 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.

• கடந்த நிதியாண்டில் சேவைத் துறையில் அமெரிக்க டாலர் மதிப்பில் 7.1  பில்லியன் அளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடு வரவு.

• இந்த நிதியாண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி விகிதங்களை மீட்டெடுக்க தொடர்பு-தீவிர சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

• ரியல் எஸ்டேட் துறையில் நிலையான வளர்ச்சி. கடந்த 2021 மற்றும் 2022 காலகட்டத்திற்கு இடையில் 50 சதவீத வளர்ச்சியுடன், தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்ட நிலைகளுக்கு வீட்டு விற்பனையைக் கொண்டு சென்றுள்ளது.


• விடுதிகளில் குடியிருப்போர் விகிதம் ஏப்ரல் 2021-ல் 30-32 சதவீதமாக இருந்த நிலையில், அது நவம்பர் 2022-ல் 68-70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

• சுற்றுலாத்துறையில் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகளைக் காண முடிகிறது. சர்வதேச விமானச்சேவை மீண்டும் தொடக்கம் மற்றும் கொவிட்-19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம், இந்த நிதியாண்டில் இந்தியாவிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது.

• டிஜிட்டல் தளங்கள் மூலம் இந்தியாவின் நிதிச் சேவைகள் மாற்றம் கண்டுள்ளது.

• இந்தியாவின் மின்னணு வர்த்தகச் சந்தை 2025 ஆம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் 18 சதவிகிதம் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிப் பிரிவு


• ஏப்ரல்-டிசம்பர் 2022-ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி அமெரிக்க டாலர் மதிப்பில்  332.8 பில்லியன் ஆக இருந்தது.

• இந்தியாவின் வர்த்தகச் சந்தைகளை பன்முகப்படுத்தல் மற்றும் அதன் ஏற்றுமதியை பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அதிகரிக்க செய்தது.

•வர்த்தகச் சந்தை அளவை அதிகரிக்கவும், சிறந்த வகையிலான முன்னெடுப்புகளை உறுதிப்படுத்தவும், 2022-ல், ஐக்கிய அரபு அமீரகத்துடன் விரிவான பொருளாதாரக் கூட்டு உடன்படிக்கை மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக உடன்படிக்கை ஆகியவை நடைமுறைக்கு வருகின்றன.

• கடந்த 2022 ஆம் ஆண்டில் உலக அளவில்  இந்தியா அதிக அளவில் பணப்பரிமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க டாலர் மதிப்பில் 100 பில்லியனைப் பெறும்  நாடு இந்தியாதான். சேவை ஏற்றுமதிக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு நிதியுதவியின் இரண்டாவது பெரிய ஆதாரமாகப் பணப்பரிமாற்றம் திகழ்கிறது.

• டிசம்பர் 2022  நிலவரப்படி, அந்நியச் செலாவணிக் கையிருப்பு  9.3 மாத இறக்குமதியை உள்ளடக்கி  அமெரிக்க டாலர் மதிப்பில் 563 பில்லியன் ஆகும்.

• கடந்த 2022 நவம்பர் இறுதி நிலவரப்படி, உலகின் ஆறாவது பெரிய அந்நியச் செலாவணி இருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

• வெளிநாட்டுக் கடனின் தற்போதையக் கையிருப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பின் மூலமாக பாதுகாப்பான நிலையில் உள்ளது.

• இந்தியா ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே மொத்தக் கடனைக் கொண்டுள்ளது. மொத்த தேசிய வருமானத்தின் சதவீதமாகவும், குறுகிய காலக் கடனை மொத்தக் கடனின் சதவீதமாகவும் இந்தியா கொண்டு உள்ளது

செயல்பாடு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் நோக்கம்

• அரசு-தனியார் கூட்டாண்மை

o சாத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ், 2014-15 முதல் 2022-23 வரை, மொத்த திட்டச் செலவு ₹57,870.1 கோடியுடன் 56 திட்டங்களுக்கு முதன்மை ஒப்புதல் வழங்கப்பட்டது.


நிதியாண்டு 23-25 முதல் ₹150 கோடி செலவில் இந்திய உள்கட்டமைப்புத்  திட்ட மேம்பாட்டு நிதித்  திட்டம் 03 நவம்பர் 2022 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

• தேசிய உள்கட்டமைப்புத் திட்டம்

o 141.4 லட்சம் கோடி செலவில் 89,151 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன

5.5 லட்சம் கோடி மதிப்பிலான 1009 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன

தேசிய உள்கட்டமைப்பு திட்டம் மற்றும் திட்டக் கண்காணிப்புக் குழு வலைதள இணைப்புகளை விரைவாக செயல்படுத்துவதற்கான ஒப்புதல்கள் / திட்டங்களுக்கான அனுமதிகள்

• தேசிய பணமாக்கத் திட்டம்

 ₹ 9.0 லட்சம் கோடி என்பது மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்த முதலீட்டுத் திறன்.

கடந்த நிதியாண்டு 22ல் எதிர்பார்க்கப்பட்ட ₹0.8 லட்சம் கோடிக்கு மாறாக ₹ 0.9 லட்சம் கோடி பணமாக்குதல் இலக்கு எட்டப்பட்டது.

இந்த நிதியாண்டின் இலக்கு ₹1.6 லட்சம் கோடி (ஒட்டுமொத்த தேசிய பணமாக்க திட்டத்தின் இலக்கில் 27 சதவீதம்)

• விரைவு சக்தி (கதிசக்தி)

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம், அமைச்சகங்கள்/ துறைகள் முழுவதும் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் செயலாக்கத்திற்கான விரிவான தரவுத்தளத்தை உருவாக்குகிறது.

பொது மக்கள் மற்றும் சேவைப் பொருட்களின் தடையற்ற இயக்கத்திற்கான முக்கியமான இடைவெளிகளை சரி செய்யும் போது பல்முனை இணைப்பு மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எரிசக்தித் துறை மற்றும் புதுப்பிக்கத்த எரிசக்தித்துறை

• 30 செப்டம்பர் 2022 நிலவரப்படி, 16 மாநிலங்களில் 59 சூரியஒளி மின் உற்பத்திப் பூங்காக்களை மேம்படுத்த 40 ஜிகாவாட் என்ற முழு இலக்குத் திறனையும் அடைய மத்திய அரசு ஒப்புதல்.

• நிதியாண்டில் 17.2 லட்சம் ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது, இது கடந்த 2021 நிதியாண்டில், 15.9 லட்சம் GWh ஜிகாவாட் மணிநேர மின்சாரம் உற்பத்தி ஆக இருந்தது.

• நிறுவப்பட்ட மொத்த மின் திறன் (1 மெகா வாட்  மற்றும் அதற்கு மேல் தேவைப்படும் தொழில்துறைகள்) 31 மார்ச் 2021 அன்று 460.7 ஜிகாவாட்- லிருந்து 31 மார்ச் 2022 அன்று 482.2 ஜிகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் இந்திய சரக்குப்போக்குவரத்துத் துறையில்  போட்டிபோடும் நிலையை ஏற்படுத்துதல்


• தேசிய சரக்குப்போக்குவரத்துக் கொள்கையானது, விரைவான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நாட்டில் தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த, செலவு-திறனுள்ள, மீள்திறன், நிலையான மற்றும் நம்பகமான சரக்குப்போக்குவரத்துச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

• தேசிய நெடுஞ்சாலைகளின்  வேகமான அதிகரிப்பு /  கடந்த 2016 நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகள்   6061  கிலோ மீட்டர் அளவில் இருந்த நிலையில் 2022 நிதியாண்டில் சாலைகள் 10457 கிலோ மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது.

• பட்ஜெட் செலவினம் 2020  நிதியாண்டில் ₹1.4 லட்சம் கோடியிலிருந்து ₹2.4  லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மூலதனச் செலவினங்களுக்குப் புத்துயிர் அளிக்கப்படும் விதமாக உள்ளது.

அக்டோபர் 2022  நிலவரப்படி, 2359 வேளாண் ரயில் போக்குவரத்து மூலம் ஏறத்தாழ 7.91 லட்சம் டன்கள் எளிதில் அழுகிப் போகக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லப்பட்டது.

• 2016 இல் தொடங்கப்பட்ட உதான் திட்டத்தின் பலனை ஒரு கோடிக்கும் அதிகமான விமானப் பயணிகள் பெற்றனர்.

• 8 ஆண்டுகளில் பெரிய துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகும்.


• உள்நாட்டு கப்பல்கள் போக்குவரத்துச் சட்டம் 2021, உள்நாட்டு நீர் போக்குவரத்தை ஊக்குவிக்கும் கப்பல்களின் இடையூறு இல்லாத இயக்கத்தை உறுதி செய்வதற்காக 100 ஆண்டுகள் பழமையான சட்டம் திருத்தப்பட்டது.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு

• ஒருங்கிணைந்த பணப்பரிமாற்றத் தளம்

o ஒருங்கிணைந்த பணப்பரிமாற்றத் தளம் -அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் மதிப்பு (121 சதவீதம்) மற்றும் தொகுதி அளவில் (115 சதவீதம்) 2019-22 க்கு காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்தது. அதன் விளைவாக சர்வதேச அளவில் பயன்படுத்த வழி வகுத்தது.

• தொலைபேசி மற்றும் வானொலி - டிஜிட்டல் அதிகாரமளித்தல்

இந்தியாவில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 117.8 கோடியாக உள்ளது (செப்.,22 வரை), கிராமப்புற இந்தியாவில் 44.3 சதவீத சந்தாதாரர்கள் உள்ளனர்.

மொத்த தொலைபேசி சந்தாதாரர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் கம்பியில்லா தொலைபேசி (வயர்லெஸ்) மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்.


மார்ச் 22 இல் இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு தொகுதி 84.8 சதவீதமாக இருந்தது.

o 2015 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில்  கிராமப்புற இணைய சந்தாக்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளன.

பிரசார் பாரதி (இந்தியாவின் தன்னாட்சி பொதுச் சேவை ஒளிபரப்பு அமைப்பு) - 479 நிலையங்களில் இருந்து 23 மொழிகளில், 179  வட்டார வழக்குகளில் ஒளிபரப்பப்படுகிறது. அதன் சேவை பரப்பளவில் 92 சதவீதத்தையும் மொத்த மக்கள் தொகையில் 99.1 சதவீதத்தையும் அடைகிறது.

• டிஜிட்டல் பொது பொருட்கள்

o 2009 இல் ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து குறைந்த செலவில் சேவைகளை அணுகிப் பெறும் நிலை அடைந்துள்ளது

o அரசு திட்டங்களின் கீழ், MyScheme, TrEDS, GEM, e-NAM, UMANG ஆகியவை வர்த்தக சந்தைப் பகுதிகளை மாற்றியமைத்து, பொது மக்கள் பல்வேறு துறைகளில் சேவைகளை அணுகுவதற்கு உதவியுள்ளன.

o கணக்கு நிறுவன தகவல்களை வழங்குபவரின் கீழ், ஒப்புதல் அடிப்படையிலான தரவுப் பகிர்வு கட்டமைப்பு தற்போது 110 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளில் உள்ளது.

o ஓபன் கிரெடிட் இனேபிள்மென்ட் நெட்வொர்க், எண்ட்-டு-எண்ட் டிஜிட்டல் கடன் விண்ணப்பங்களை ஏற்கும்  அதே வேளையில், கடன் வழங்கும் செயல்பாடுகளை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய செயற்கை நுண்ணறிவு வலைதளம் மூலம் 1520  கட்டுரைகள், 262 வீடியோக்கள் மற்றும் 120 அரசின்  முன்முயற்சிகளை வெளியிட்டுள்ளது. மேலும் மொழி சார்ந்த தடையை கடப்பதற்கான ஒரு கருவியாக செயல்படுகிறது எடுத்துக்காட்டு: ‘பாஷினி’.

o மேம்படுத்தப்பட்ட பயனாளிகளின் தனியுரிமைக்காகவும், நிலையான, வெளிப்படையாக  இயங்கக்கூடிய நெறிமுறைகளுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்காகவும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனநிதி அமைச்சகம்

மூலதன பங்குச்சந்தை வர்த்தகத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உள்நாட்டு அமைப்புகள்,  சில்லறை முதலீட்டாளர்களின் அதிக பங்களிப்பால், கடந்த ஆண்டில் இந்திய மூலதன பங்குச்சந்தை வர்த்தகத்தின் செயல்பாடுகள் சிறப்பான வகையில் இருப்பதாக பொருளாதார ஆய்வு அறிக்கை 2022-2023 தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

காப்பீட்டு சந்தையில் டிஜிட்டல் மயமாக்கல், அந்நிய நேரடி முதலீடு வரம்புகள் அதிகரிப்பு ஆகியவை இந்தியாவின் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

உலக அளவில் ஒட்டுமொத்தமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முன்னெப்போதும் இல்லாத  பணவீக்கம், நிதி ஆதாரக்கொள்கைகளில் கடுமையான வரம்புகள், நிலையற்ற சந்தைகள் போன்றவற்றின் மத்தியிலும் இந்தியாவின் மூலதனச் சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்த ஆண்டு சிறப்பாகவே இருந்தது என்றும் அந்த அறிக்கை விளக்கியுள்ளது.  கடந்த 2022 நிதியாண்டுடன் (நவம்பர் 2021 வரை) ஒப்பிடும்போது, ஆரம்ப பொது சலுகைகளுடன் வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்ககளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இதன் விளைவாக திரட்டப்பட்ட மொத்த நிதி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட நிதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.


இந்த ஆண்டு இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகைகளை பெற்றது.  மே 2022- ல் மத்திய அரசு இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளை மாற்றியமைத்து பங்குச் சந்தை பட்டியலில் கொண்டு வந்தது. இதன் மூலம் எல்ஐசியின் ஆரம்ப பொது சலுகைகளை இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகையாக மாற்றியது.பொருளாதார வளர்ச்சிக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அணுகல் மற்றும் பரவல்

ஊரக பகுதிகளில் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 200% அதிகரிப்பு

சமீபத்திய ஆண்டுகளில், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பங்கு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில், டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அணுகல் மற்றும் பரவல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வு அறிக்கை 2022 -23யில் கூறியுள்ளார்.

டிஜிட்டல் இந்தியா மூலம் கடந்த 3 ஆண்டுகளில் (2019-21) கிராமப்புறங்களில் அதிக இணைய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர் . 95.76 மில்லியன் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் 92.81 மில்லியன் பேர் இணைந்துள்ளனர்.  கொவிட்-19 தொற்றின்போது கிராமப்புற இந்தியாவில் இணைய சந்தாதாரர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது  என்று ஆய்வு விளக்குகிறது. ஆனால் தற்போது 2015 மற்றும் 2021 க்கு இடையில் கிராமப்புற இணைய சந்தாக்களில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கையில், கிராமங்களில் 4G மொபைல் சேவைகளை செறிவூட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வடகிழக்குப் பிராந்தியம், தீவுப் பகுதியில் விரிவான தொலைத்தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

ஆதார் முதன்முதலில் தொடங்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் பயணம் குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததாக பொருளாதார ஆய்வு கூறுகிறது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் பயன்பாடுகளான ‘MyScheme’ மற்றும் புதிய தலைமுறை ஆளுமைக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (UMANG), ‘Bhashini’ மற்றும் பிற பல்வேறு துறைகளில் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் இணைய-அரசு சேவைகளை குடிமக்கள் அணுக உதவுகிறது.

சுகாதாரம், விவசாயம், ஃபின்டெக், கல்வி மற்றும் திறன் போன்ற துறைகளில் கோவிட்-19 இன் போது அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கம், இந்தியாவில் சேவைகளின் டிஜிட்டல் விநியோகம் பொருளாதாரத் துறைகளில் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது.அரசின் செலவினங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதற்கு சமூகத் துறை சாட்சியாக உள்ளது

நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை 2022-23-ல்,தொற்று பாதிப்பு மற்றும் நடைபெற்று வரும் போரின் தாக்கங்களிலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், இந்தியா தனது அமிர்த கால சூழலுக்கும் செல்ல தயாராகி வருகிறது  என்று தெரிவிக்கிறது. சமூக நலன் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் இந்த சகாப்தம் இருக்கும். ஒருவரையும் பின்தங்கி விடகூடாது என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அதன் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் தாக்கம் மற்றும் பலன்கள் எண்ணற்ற கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் புவியியல் பரப்பைக் கடந்து மக்கள் அனைவரையும் சென்றடையச் செய்வதை  உறுதிசெய்வதுடன், நாட்டின் உண்மையான செல்வத்தை உருவாக்கும் வகையில் உள்ளது.

விரிவான, தொலைநோக்குப் பார்வை மற்றும் மக்களை மையப்படுத்திய  உலகளாவிய மற்றும் மாற்றத்தக்க இலக்குகள் மற்றும் இலக்குகளின் தொகுப்பான 2030-ம் ஆண்டிற்கான ஐ நா-வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதால், சமகால சூழலில்  சமூக நலனில் கவனம் செலுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை மேலும் கூறுகிறது. இந்த 17 இலக்குகள் தனிநபர்களின் சமூக நல்வாழ்வைப் பற்றியது, அவை பின்வரும் தீர்வுகளைக் கொண்டுள்ளது: "தற்போது முதல் 2030-ம் ஆண்டிற்குள், அனைத்து பகுதிகளிலும் வறுமை மற்றும் பசியை முடிவுக்கு கொண்டு வருவது; நாடுகளுக்குள் மற்றும் நாடுகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போரிடுவது; அமைதி, நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களைக் கட்டமைப்பது; மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிகாரமளிப்பது; மேலும் புவி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நீடித்தப் பாதுகாப்பை உறுதி செய்வது. நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு நிலைகள் மற்றும் திறன்களைக் கருத்தில் கொண்டு, நிலையான, உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சி, பகிரப்பட்ட வளமை  மற்றும் அனைவருக்கும் கண்ணியமான பணிச் சூழலை உருவாக்குதல் போன்றவற்றிற்கும் தீர்வு காணப்படும்.

சமூகத் துறையின் செலவினங்கள்

சமூக சேவைகளுக்கான செலவினம் 2020-ம் நிதியாண்டைக் காட்டிலும் 2021-ம் நிதியாண்டில் 8.4% அதிகரித்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொற்று பாதிப்புக் காரணமாக 2021-ம் ஆண்டைக் காட்டிலும் 2022-ம் நிதியாண்டில்  31.4% அதிகரித்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் கூடுதல் செலவு தேவைப்பட்டது. 2015-16 -ம் ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சமூகத் துறையின் செலவினத் தொகை 9.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2023-ம் நிதியாண்டில் (BE) படிப்படியாக அதிகரித்து 21.3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

வறுமை

வறுமை என்பது தொடக்கத்தில் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கான பண வசதியின்மையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இருப்பினும்,  'வறுமை' என்பதற்கான வரையறையின்படி, பரந்த தாக்கங்களையம், அதே சமயம், பல்வேறு தீமைகளுக்கும்  வழிவகுக்கிறது - அவை மோசமான உடல்நலம் அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடு, சுகாதாரமின்மை, சுத்தமான குடிநீர் அல்லது மின்சாரம், மோசமான கல்வி போன்றவை. பல்முனை பரிமாண வறுமை தொடர்பான அளவீடுகள் விரிவான தோற்றத்தை உருவாக்க  பயன்படுத்தப்படுகின்றன.

சமூக சேவைகளை வழங்குவதில்  ஆதார்:

ஆதார் என்பது மாநிலத்தின் சமூக விநியோகத்திற்கான இன்றியமையாத கருவியாகும்.  மத்திய அரசின் 318 திட்டங்கள் மற்றும் 720-க்கும் மேற்பட்ட மாநில அரசின் நேரடிப் பணப் பரிமாற்றத்  திட்டங்கள் ஆகியவை ஆதார் சட்டம், 2016-ன் பிரிவு 7-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் நேரடிப் பலன் பரிமாற்றம், ஆதார் அடிப்படையிலான கட்டண முறைகள், ஜன்-தன், ஆதார் மற்றும் மொபைல்,ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை, கோ-வின் நிதிச் சேவைகள், மானியம்  மற்றும் பலன்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இலக்காக கொண்டு  ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.2023-24-ஆம் நிதியாண்டில் மூலதன செலவு 37.4 சதவீதம் அதிகரித்து 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.

உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி திறன் வளர்ச்சியில் முதலீடுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2023-24 நிதியாண்டுக்கான  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது தெரிவித்தார்.

வளர்ச்சி மற்றும் முதலீடு - மூலதனத்திற்கான உந்து சக்தியாகும்:

2023-24-ல் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு  37.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 7.28 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  

நிதிக்கொள்கைக்கான அறிக்கைகள் 2019-20-ம் நிதியாண்டில் இருந்த மூலதன செலவை விட, மூன்று மடங்கு அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் முக்கிய உள்கட்டமைப்பு, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ரயில்வே, பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சகங்களும் அடங்கும். இந்த முதலீடுகளைக் கொண்டு, நாடு முழுவதும் சமமான  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளும். அடுத்த 25 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும்.

மாநிலங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, 2022-23-ம் நிதியாண்டில் நிதிக்கூட்டாட்சி முறையில், மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு, 1.3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். இது சென்ற நிதியாண்டை விட, 30 சதவீதம் அதிகம். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாகும்.

வருவாய் செலவினம்: 1.20 சதவீதம் அதிகரித்து, 35.02 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் செலவினங்களின் முக்கிய அம்சங்கள், வட்டி, மானியங்கள், அரசு ஊழியர்களின் ஊதியம், பாதுகாப்பு செலவுகள் மற்றும் நித்தி ஆயோக் மானியங்கள், மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றிற்கு மாநிலங்களுக்கு வழங்கப்படும். மத்திய தன்னாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.

வட்டி செலுத்துதல்: இந்தாண்டில் செலுத்த வேண்டிய வட்டி,10.8 லட்சம் கோடி ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 30 சதவீதமாகும்.

மானியங்கள்: இந்த நிதியாண்டில் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் 3.75 கோடி ரூபாயாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாகும். இது மொத்த வருவாயில் 10.7 சதவீதமாகும்.

நிதிக்குழுவுக்கான நிதி: 2023-24 நிதியாண்டில் 1.65 லட்சம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

ஓய்வூதியம்: ஓய்வூதிய செலவினம் கடந்த நிதியாண்டில் 2.07 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிதியாண்டில் இது 2.45 லட்சம் கோடி ரூபாயாகும்.

பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு  வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இந்த செலவின உயர்வுக்கு காரணம்.

மொத்த செலவினம்:  இந்த நிதியாண்டின் மொத்த செலவினம் 45.03 லட்சம் கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டைவிட, 7.5 சதவீதம் அதிகமாகும்.

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கான பகிர்வு, 9.48 லட்சம் கோடி ரூபாயாகும். மாநிலங்களுக்கான வரி பகிர்வு இந்த நிதியாண்டில்  10.21 லட்சம் கோடி ரூபாயாகும், மேலும் குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீதான தேசிய பேரிடர் தொகுப்பு வரி 16% உயர்வு: பட்ஜெட் 2023-24-ல் முன்மொழிவு

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023-24-ஐ இன்று தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தேசிய பேரிடர் தொகுப்பு வரியை திருத்தியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீதான இந்த வரி 16% வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் தொகுப்பு வரி (என்சிசிடி) குறிப்பிட்ட சிகரெட்டுகள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்டது.

சிகரெட்டுகள் மீதான தேசிய பேரிடர் தொகுப்பு வரி (02.02.2023 முதல் அமல்)

65 மில்லி மீட்டர் நீளத்திற்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் அல்லாத பிற சிகரெட்டுகள் மீதான வரி (1000 குச்சிகளுக்கு) 200 ரூபாயிலிருந்து 230 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

65 மில்லி மீட்டர் நீளத்திற்கு அதிகமான, ஆனால் 70 மில்லி மீட்டர் நீளத்திற்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் அல்லாத பிற சிகரெட்டுகள் மீதான வரி 1000 குச்சிகளுக்கு 250 ரூபாயிலிருந்து 290 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

65 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் 1000 குச்சிகளுக்கு 440 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக வரி உயர்த்தப்படுகிறது.

65 மில்லி மீட்டருக்கு அதிகமான, அதே சமயம் 70 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் மீதான வரி 440 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

70 மில்லி மீட்டருக்கு அதிகமான, அதே சமயம் 75 மில்லி மீட்டருக்கு குறைவான ஃபில்டர் சிகரெட்டுகள் 1000 குச்சிகளுக்கு 545 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக வரி உயர்த்தப்படுகிறது.



பிற சிகரெட்டுகளுக்கு 735 ரூபாயிலிருந்து 850 ரூபாயாகவும், புகையிலை மாற்று சிகரெட்டுகளுக்கு 600 ரூபாயிலிருந்து 690 ரூபாயாகவும் என்சிசிடி வரிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை  2023-24 ல்  தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமென தமிழ்நாடு  முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் நிதியாண்டிற்கான அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்புமின்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது வேதனையளிக்கிறது.ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம் மற்றும் இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மற்றும் மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன், மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது,போன்றவை வரவேற்கத்தக்கது தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, பழைய முறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.  மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தத் இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.

நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவானது, பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும்,  ஒரு வீட்டின் கட்டுமான விலையை  உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு இத்திட்டத்தின் கீழ், உயர்ந்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கரோனா பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கை  போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.


நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை  வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.                                 நாட்டின் பிரதமர் இந்தியாவின் வளர்ச்சிப்பாதை தொடர்பான விரிவான பகுப்பாய்வை பொருளாதார ஆய்வறிக்கை வழங்குகிறது: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி பொருளாதார ஆய்வறிக்கை 2022-23 தொடர்பாக தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் வளர்ச்சிப்பாதை தொடர்பான விரிவான பகுப்பாய்வை  பொருளாதார ஆய்வறிக்கை முன்வைக்கிறது. இதில் நமது தேசத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை, உள்கட்டமைப்பின் கவனம் செலுத்துதல், வேளாண் வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி மற்றும் எதிர்கால துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை அடங்கும். https://www.indiabudget.gov.in/economicsurvey/index.php”

இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த