நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட கருத்து பணம் பார்க்கும் செய்தித் தொலைககாட்சிகளுக்கு சம்மட்டி அடி, அவரது செய்திக்குறிப்பில் "திரைக்கதை மன்னர்", நடிகர் இயக்குனர் K.பாக்யராஜ் மறைவு மற்றும் நல்லடக்கம் நிகழ்வு குறித்து நடிகை.ராதிகா சரத்குமார் "50 ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி, சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி, குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பசகிதமாகப் பழகிய நாட்களை நினைவு கூறுகிறோம். அவரது இந்த தீடீர் பிரிவு குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் பேரதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், திடீரென மறைந்தார், இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவரை இழந்து தவிக்க...
RNI:TNTAM/2013/50347