திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார் அவருக்கு வயது 57
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர், முதலில் மிமிக்கிரி பலகுரல் கலையால் அறியப்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழ் திரையில் நுழைந்து சிறிய பெரிய வேடங்களில் நடித்தார். கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்தின் பணக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் . திரைப்படம் தாண்டி அரசியல் பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுதியவர்,
சென்னை சாலிகிராமத்தில் வசித்த இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, குடும்பத்தினர் சென்னை போரூரில் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் முன் அவரின் உயிரின் பிரிந்தது. அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.அவரை அறிந்த பலரது பதிவுகள் குறித்து பார்க்கும் போது
ஒரு உண்மையான இரங்கலிது "மெல்லிசை, மிமிக்ரி, கானா என
சென்னை மாநிலக் கல்லூரி பலருக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. பிரசிடென்சியின்
ராமன் -லட்சுமணன்,(லஷ்மன் ஸ்ருதி), சுகுமார் - ஈநாக்ஸ்,
கோபால் சர்மா (கின்னஸ் சாதனையாளன்), பாலாஜி -சீலிமா மற்றும் கருணாஸ் (கிரேஸி) என
வரிசையாய் எண்பதுகளின் இறுதிகளில் மெல்லிசை மேடைகளைக் கைப்பற்றின
ஜொலி ஜொலித்தார்.
மிமிக்ரி உலகில் முதன்முதல் ஆடியோ ரிலீஸ் செய்தது மயில்.
தீவிர எம்ஜிஆர் பித்தன்.
பிறர் முகம் வாட பார்த்து நிற்கும்
சக்தியற்ற மெய்தேவன்.
வேடிக்கையாய் கூட பொய் பேசா
நவீன அரிச்சந்திரன்.
தன் பசி குறித்த கவலை
எப்போதும் இல்லாத மயில்.
பிறர் பசி பொறுக்காது
கையேந்தியும் உதவிட்ட
கதையல்ல நிஜம் ஏராளம்.
சென்னை பெரு வெள்ளமோ
ஜல்லிக்கட்டு மக்கள் திரளோ
கொரோனா கொடுத்த லாக்டவுன் நெருக்கடியோ கையை மீறி
உதவிய வகையில் பணம்பூட்டி வேதாந்திகளை வெட்கப்பட வைத்தவன். போய் வா மாமா !
நீ இல்லை என்று உன்னை அறிந்தோர் யாரும் சொல்லவில்லை.
உன் பெயர் சொன்னாலே போதும்
உன் சந்ததிகள் அனைவருக்கும்
நடுக்காட்டிலும் தரமான சோறு கிடைக்கும்...எந்நாளும் மறவா
மாப்பிள்ளை" என அண்ணன் மூத்த பத்திரிகையாளர் ந.பா.சேதுராமனின்
கருத்தில் மயில் சாமியை அறிந்த யாரும் மாறுபட முடியாது.
கருத்துகள்