முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான சாந்திபூஷன் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான சாந்திபூஷன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சட்டத்துறைக்கான பங்களிப்புக்காகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய ஆர்வத்திற்காகவும், திரு சாந்தி பூஷன் அவர்கள் நினைவுகூரப்படுவார்” அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.எனக் குறிப்பிட்டுள்ளார்,
முதுமையான 97 வயதில் அவரது இல்லத்தில் காலமான சாந்தி பூசண் மகன் தான் பிரபலமான பிரசாந்த் பூசண் வழக்கறிஞர். அவரது தந்தை சாந்தி பூசணுடன் இணைந்து மக்கள் குறைகேட்பு ஆணையர் சட்டமுன் வரைவினைத் தயாரிப்பதில் உதவி புரிந்துள்ளார். இந்திய அரசு இந்த சட்ட முன்வரைவினை முன்னெடுத்துச் செல்ல அமைத்த கூட்டுக்குழுவில் குடிமக்கள் சார்பான 5 உறுப்பினர்களில் ஒருவராவார்
கருத்துகள்