முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் மீது ஓ பன்னீர் செல்வம் டுவிட்டரில் குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்குத் தொகுதி  சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக இரு அணிகள் சார்பில்


பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். வேட்பாளர் தேர்வை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும். இந்த பொதுக்குழுவிற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் நீக்கப்பட்டவர்களும் அழைக்கப்பட வேண்டும். இறுதியில் தேர்வாகும் வேட்பாளரின் வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என உத்தரவிட்டனர். இந்த நிலையில்,

இந்த உத்தரவு என்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக அவர்கள் தரப்பில் பார்க்கப்படுகிறது. அதிமுகவில் 2573 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில் 2000 க்கும் அதிகமானவர்கள் எடப்பாடி கே.பழனிச்சாமி பக்கம் தான் உள்ளனர். அதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படும். நிலையில் தான் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரெசார்ட்டில் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நேற்று முன் தினம்  தீவிர ஆலோசனை நடந்ததில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வு செய்யும்படி  கூறியது சாதகமாக இருந்தாலும் கூட பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதிக்குள் அதனை தாக்கல் செய்வது என்பது சவாலானதாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் ஓ பன்னீர் செல்வம் உள்பட கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்களையும் பொதுக்குழுவில் இணைத்து கருத்து கேட்க உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் அதனை எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறதனால் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு மட்டும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை பொதுக்குழு கூட்டப்படாமல் ஆதரவு கடிதம் பெறப்பட்டால் அதனை தேர்தல் ஆணையம் ஏற்குமா? இல்லையா? அடுத்து என்ன? செய்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாகவும்  சொல்லப்பபடுகிறது.


அதன்படி இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இந்தக் கடிதங்கள் வாங்கப்படுகிறது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தொடர்பான அம்சங்களை எழுத்துப்பூர்வமாக திங்கட்கிழமை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம் தேர்தல் ஆணையத்தில் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பணியை நேற்று முன்தினம் இரவே எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு துவக்கி உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களில்  முழுவீச்சில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று இன்று திங்கட்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க அவர்கள் தரப்பில்  ஆர்வமாக உள்ளது தெரிகிறது.


 இந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயல் என ஓ.பண்னீர் செல்வம் தரப்பு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயல் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம்  தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க நீதிமன்றம் சார்பில் பொதுக் குழுவை கூட்டி முடிவெடுக்க நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்கள் இது சம்பந்தமாக அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.எந்த உணர்வுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ அந்த உணர்வையும், உருவத்தையும் அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்கள் அறவே நிராகரித்துள்ளார்.பொதுக் குழு உறுப்பினர்களுக்கு யார், யார் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் அளிக்க வேண்டியது அவரது தலையாய கடமையாகும். இதை உச்சநீதிமன்றமும் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக திரு. பா.செந்தில் முருகன் தேர்தல் அதிகாரி முன்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்கள் அளித்துள்ள வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாதது மட்டுமல்ல, இன்னும் தேர்தல் அதிகாரி முன்பு வேட்புமனு தாக்கல் செய்யாத திரு. கே.எஸ்.தென்னரசு அவர்கள் பெயரை மட்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று அறிவித்து இருக்கிறார். அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது, முன்கூட்டியே அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்கள் ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால் அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று தெரிகிறது. இது நடுநிலை தவறிய காரியம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறவே மீறுவதாகும்.வேறு யாரேனும் வேட்பாளராக போட்டியிடுவதென்றால், பொதுக் குழு உறுப்பினர்களை முன்மொழியவும், வழிமொழியவும், அவற்றை அத்தகைய வேட்பாளர் ஒப்புக் கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்களால் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கு அனுப்பிய தபாலோடு இணைக்கப்படவும் இல்லை.அப்படியிருக்க, இதர வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற உரிமையை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்கள் தட்டிப் பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இதுவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானதாகும். முழு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, பொதுக் குழு உறுப்பினர்கள் யாருக்கு கூடுதலாக வாக்களிக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்து முடிவெடுக்க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் 


அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது, முன்கூட்டியே அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்கள் ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால் அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று தெரிகிறது. இது நடுநிலை தவறிய காரியம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறவே மீறுவதாகும்.

வேறு யாரேனும் வேட்பாளராக போட்டியிடுவதென்றால், பொதுக் குழு உறுப்பினர்களை முன்மொழியவும், வழிமொழியவும், அவற்றை அத்தகைய வேட்பாளர் ஒப்புக் கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்களால் உருவாக்கப்படவில்லை. 


அப்படியிருக்க, இதர வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற உரிமையை அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்கள் தட்டிப் பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இதுவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானதாகும். முழு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, பொதுக் குழு உறுப்பினர்கள் யாருக்கு கூடுதலாக வாக்களிக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்து முடிவெடுக்க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்கள் கட்டுப்பட்டவர்

அப்படியிருக்க, ஒருவரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று அறிவித்தும், அவரை ஆதரிக்கிறீர்களா, மறுக்கிறீர்களா என்று கேட்டும் கடிதம் அனுப்பியிருந்தது வேட்பாளர் தேர்வு முறையாகாது. அது பொது வாக்கெடுப்பு (Referendum) முறையாகும். வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து அவருக்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது உச்ச நீதிமன்றமே எதிர்பார்க்காத ஒன்று என்றால் மிகையாகாது. இத்தகைய செயல் மூலம், அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்கள் நடுநிலை தவறியது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியையும் அறவே புறக்கணித்துவிட்டு, எடப்பாடி கே.பழனிச்சாமி பிரிவினரின் முகவராகவே இயங்கி இருக்கிறார் என்று பொதுக் குழு உறுப்பினர்கள் கருதுவதில் அர்த்தமுண்டு.வாக்களிக்கும் முறையை எடுத்துக் கொண்டால், வாக்குச் சீட்டை தபால் மூலம் தரவும், அத்தகைய வாக்குச் சீட்டுகளில் குறியீடு செய்து தபால் மூலம் திரும்ப அவைத் தலைவருக்கு அனுப்பவும் வழிவகை செய்திருக்க வேண்டும். பொதுத் தேர்தலில் எவ்வாறு தபால் வாக்கு முறை செயல்படுத்தப்படுகிறதோ அதே முறையை அவைத் தலைவர் கடைபிடித்து இருக்கலாம்.மாறாக, வாக்குச் சீட்டுகளை பொதுக் குழு உறுப்பினர்களிடையே நேராகக் கொடுத்து, அவர்கள் கையெழுத்தைப் பெற்று அப்படிக் கொடுத்தவர்களே திரும்பப் பெற்றுக் கொண்டு அவைத் தலைவரிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு தங்கள் விருப்பம்போல் வாக்களிக்கும் உரிமையும், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்ற ரகசியத்தை காப்பாற்றும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளன.நேரடியாக வாக்காளர்களை சந்தித்து வாக்குகளைப் பெறும் முறையில் ஆசை காட்டுவதும், அச்சமூட்டுவதும் இடம்பெறும் என்பதும், அத்தகைய தேர்தல் முறை நேர்மையாக நடைபெறாது என்பதும், பலவகையான துஷ்பிரயோகத்திற்கு இடம் தரும் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏன் இந்த முறையை அவர் கையாண்டார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.இத்தகைய நேர்மைக்கு மாறான முறையில் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையை காட்டுவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படும் சதிச் செயல் என்று நம்புவதற்கு இடமுண்டு. தேர்தல் முறை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும் என எண்ணும் நடுநிலையாளர்கள் இத்தகைய முடிவை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்?உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நல் உள்ளத்தோடு, நடுநிலைமை உணர்வுடன் வழங்கப்பட்டு இருந்தாலும், அவைத் தலைவர் திரு. தமிழ்மகன் உசேன் அவர்கள் அதைச் செயல்படுத்திய முறை உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணானது மட்டுமல்ல, நடுநிலை தவறி ஒருசாராரின் கைப்பாவையாகவே அவர் இயங்கி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.சட்டம் வெறுமனே செயல்படுத்தப்படுவது மட்டுமல்ல, அதற்கென உள்ள நெறிமுறையின்படி செயல்படுத்தப்பட வேண்டும், அதாவது due process of law. நெறிமுறை தவறி, ஒருசாராருக்காக, ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுவதை சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயலாக பொதுக் குழு உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.' என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த