திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்
மறைந்த இயக்குனர் டி.பி. கஜேந்திரன், ஆரம்ப காலத்தில் நடிகரும் இயக்குநருமான விசுவின் திரைப்படங்கள் மூலம் ஆறியப்பட்டவர் அவர் இயக்கி விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம், புதிய சகாப்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும், எண்ணற்ற படங்களை இயக்கியும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வெடுத்தவர், சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குனர் டி. பி. கஜேந்திரன். இவர், புகழ்பெற்ற நடிகையான டி. பி.முத்துலட்சுமியின் மகனாவார். விசுவின் உதவியாளராக பணியாற்றியவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களைஇயக்கினார்.
எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிலாஸ் மாதவன், சீனா தானா ,வீடு மனைவி மக்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். பந்தா பரமசிவம், சந்திமுகி, வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடன் ஒரே கல்லூரியில் பயின்றவர்,
உடல்நல குறைவு காரணமாக ஓய்வில் இருந்தவர் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 72. சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பிரமுகர்கள் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட கஜேந்திரன் பிறந்தது, சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில். 8 -ஆம் வகுப்பு வரை சென்னை, ஆவிச்சி பள்ளியில் படித்து படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டூடியோக்களைச் சுற்றியவர் அவரது தந்தைக்கும் திரைப்பட நிருவனத்தில் வேலை அவர் காரைக்குடி தாலுகா கண்டனூர்- புதுவயலுக்கு அனுப்பி அங்கு அவரது சித்தப்பா வருவாய் அதிகாரியாக இருந்த நிலையில் அவர் படிக்க வந்த கதையை அவரே கூறியது "பட்டணத்துப் பையன் பட்டிக்காட்டுக்குப் போறதான்னு வீம்பு பண்ணிப் பார்த்து வலுக்கட்டாயமாக டி.சி யைக்கூட வாங்கமல் அனுப்பி வைத்த தந்தை புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில 9 - ஆம் வகுப்பில் சேர்ந்தேன் 1979-ஆம் ஆண்டில் திருமணம் அதே ஆண்டு, அதே மாதம் சினிமாவில் காலடி எடுத்து வச்சேன். 'மழலைப் பட்டாளம்' படம் கே.பாலச்சந்தர் தயாரிப்பு, லட்சுமி இயக்கினார். அந்தப் படத்தில் வேலை செய்'னு பாலச்சந்தர் சார் அனுப்பி வச்சார். அதற்குப் பிறகு 'தில்லு முல்லு', 'தண்ணீர் தண்ணீர்' படங்களில் அவரோட வேலை செஞ்சேன். சினிமா கத்துக்கிட்டதும், வாழ்க்கையோட சில நெறிமுறைகளைக் கத்துக்கிட்டதும் அவர்கிட்டதான். என்னைப் பெற்றவர்கள், வளர்த்த டி.பி.முத்துலட்சுமி அம்மாள், குருவாக இருந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் சார், கற்றுக் கொடுத்த விசு சார், வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள், உடன் பணியாற்றிய கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், என்னை இயக்கிய இயக்குனர்கள், எனக்கு உறுதுணையாக இருந்து வரும் குடும்பத்தினர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்” என அதில் கஜேந்திரன் மிகவும் உருக்கமாக அவரது பழைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்