முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி தென்னூரில் சிறப்பாக நடந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

காவிரிக்கரையிலமைந்த திருச்சிராப்பள்ளி


சங்க காலத்திலும்,  முற்காலச் சோழர்களின் காலத்திலும் தலைநகரம், இராமசாமியை ராமனென அழைப்பது போல தற்போது திருச்சி எனச் சுருக்கியழைக்கிறார்கள்..

திருச்சிராப்பள்ளி என்பது , திரு  சிராய் பள்ளி, அதாவது சிராய் (சிராய்- பாறை )  மலைக் கோட்டை அது சார்ந்த பல திருக்கோவில்கள், தென்னூர்,


சுமார் 450 ஆண்டுகள் கடந்த வரலாறு உண்டு   (1690-1710) க்கு முன் விஜநகர நாயக்க மன்னர் திருச்சிராப்பள்ளி  உறையூரை தலைமையாக்கி ஆண்ட  விசுவப்ப நாயக்கர் (மதுரை இராணி மங்கம்மாளின் உடன் பிறந்தவர்) மந்திரியான பிரதாணி தளவாய். அரிய நாத முதலியார் ஆலோசணையில்  சிறப்பாக ஆட்சி செய்த போது மன்னரின் மகள் இறந்து போக விரக்தியில், மன்னரால்  ஆட்சியில் கவனம் செலுத்த வில்லை.,



உறையூர் தென்னூர் பகுதியில் அவரது மகளைப் போலுள்ள  பெரியநாச்சியை வளர்த்து மகளாக சுவீகரித்தார்,  ஆனால், கணவர் இறந்த போது பெரியநாச்சியோ,  உடன்கட்டை ஏறி உயிர்நீத்து உறைந்த இடமே உறையூர்  பெரியநாச்சி உடன்கட்டை ஏறிய சூரியோதய நேரத்தில் சந்தனக் கட்டை முதலான அனைத்து விதமான உயர் ரக மரங்களை வைத்து சிதை மூட்டி, தனது கணவர் வீரிய பெருமாளை கையிலேந்தி சிதையில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.


பின்னர், நமது பெரியநாச்சி, மன்னரின் கனவில் தோன்றிய நிலையில் அது அப்பகுதியில் இரண்டு கோவிலானது வரலாறு.   "தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!

காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!

ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10-


என்ற பெரிய திருமொழி வைணவ நெறி ஆழ்வார்  பாசுரம் காட்டும்     .அவர்கள் காலம் தொட்டு அமைந்த ஸ்தலமாக திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை சாலையிலுள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக  நடைபெற்றது.



ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று நடந்த  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி மாலை வாஸ்து

பூஜை மற்றும் சிறப்பு ஆராதனைகளுடன் யாகசாலைப் பூஜைக்கான விழா தொடங்கியது அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம்  இரண்டாம் காலம், மூன்றாம் கால நிகழ்வுகள், யாகசாலை பூஜைகள் தொடங்கி பூரண ஆகுதி நடைபெற்றது.  பின் நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால நிகழ்வுகள் நடந்தது. காலை 8 மணிக்கு நான்காம் கால மகா பூர்ணாஹுதி நடைபெற்று . காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித நீர் திருக்குடங்கள் புறப்பட்டன. 9.30 மணிக்கு



விமான சம்பிரோக்ஷணமும்

. காலை 9.45 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு மகா சம்ரோக்ஷணமும் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு பஞ்ச தரிசனம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை ஸ்ரீ பாஞ்சாராத்திரி ஆகம முறைப்படி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெள்ளரை பெரிய கோவில் மிராஸ் அர்ச்சகரான  கோபாலகிருஷ்ணப் பட்டர் சர்வ சாதகராக இருந்து வேதாகம முறையில் குடமுழுக்கை நடத்தி வைத்தார். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி தில்லை நகர் திருவாளர் ஏ.ஆர். அண்ணாமலை செட்டியார்  குடும்பத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

மாலை 6 மணிக்கு மேல் சுவாமிகள் புறப்பாடு திருவீதியுலா நடைபெற்றது. 


கும்பாபிஷேக விழா மற்றும் பூஜைகளில் திருச்சிராப்பள்ளி சுற்றுவட்டாத்திலுள்ள திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலயத்தில்  தரிசித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,