முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய ஏரிசக்தி அமைச்சர் பெங்களூருவில் இன்று துவங்கிய முதல் மின்பகிர்மானப் பணிக்குழுக் கூட்டத்தில் உரை

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாறுபாட்டிற்கு எதிராக ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் அழைப்பு


புதுதில்லி, பிப்ரவரி 05, 2023உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு சவால்களை முறியடிக்கும் முயற்சியில் ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும் என மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்  ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று துவங்கிய முதல் மின்பகிர்மானப் பணிக்குழுக் கூட்டத்தில்  உரையாற்றிய அவர், 2005 முதல் 2030ம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 2030ம் ஆண்டிற்குள், நாட்டின் 50 சதவீத மின் உற்பத்தித்திறனை, புதைப்படிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான  எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய  இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். 


பருவநிலை மாறுபாடு குறித்த செயல் குறியீட்டில், இந்தியா தற்போது  முதல் 5 நாடுகளுக்குள் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் பல்வேறு எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள் வாயிலாக, நாட்டின் கார்பன் உமிழ்வு ஆண்டுக்கு 267.9 மில்லியன் டன்னாக இருப்பதாகவும், இதன்மூலம், 18.5 பில்லியன் டாலர் நிதி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ஆர்.கே. சிங், தற்போது நடைமுறையில் கொண்டுள்ள எரிசக்தி தளத்தை இந்தியா எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், எரிசக்தி  பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து வளங்களையும் ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.


இக்கூட்டத்தில் சிறப்பு உரையாற்றிய, மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் திரு. பிரஹலாத் ஜோஷி, சுத்தமான எரிசக்திக்கான உலகளாவிய அணுகுமுறையை அடைய சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். இந்தியர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை முறையையும், இயற்கைவளம் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்டார். குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி என்றதே வாழ்வின் தாரக மந்திரம். நமது கலாச்சாரமும், வாழ்வியல் முறையும் சுற்றுப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த அம்சங்கள் என்றும்  அமைச்சர் கூறினார்.

எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், ஜி-20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த முதல் மின்பகிர்மானப் பணிக்குழுக்கூட்டம் நடைபெறுகிறது.  ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.



இக்கூட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை தலைவர் ரெனால்டோ டோமித்  காடின்ஹோ, பிரேசில்  வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. அலோக் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜி 20 உறுப்பு நாடுகள் உட்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள், 9 சிறப்பு அழைப்பாளர்கள், உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த 3 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,