முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதானி குழுமம் விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அமளி

அதானி குழுமம் விவகாரங்களில்


நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்ற நிலையில் அமளி ஏற்பாடு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இது இப்போது கவனம் பெறுகின்றன         உண்மை நிலை குறித்த ஆய்வு தான் இப்போது மக்கள் அறியத் தேவை என்பதால்,நாம் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அனைவரும் புரிந்து கொள்ள ஏதுவாக

இந்தக் கட்டுரையில் காணலாம் :-  கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 2 சதம்  சரிவாகி. முடிவில் சென்செக்ஸ் 874.16 புள்ளிகள் அல்லது 1.45 சதம் சரிவினக் கண்டு, 59,330.90 புள்ளிகளாக முடிவடைந்தது. இதே நிஃப்டி 287.60 புள்ளிகள் அல்லது 1.61சதம் சரிவினைக் கண்டு, 17,604.35 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. இந்த  வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், சர்வதேசச் சந்தை நிலவரம், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளின் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சமென பல காரணிகளுக்கு மத்தியில்

வரும் வாரத்திலும் இந்த நிலை தொடரலாமோ என அச்சமிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 23 முதல்  27 ஆம் தேதிகளுக்கிடையில் அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை முறையே சுமார் 7 சதம் சரிவிலும், அதானி பவர் பங்கானது 10 சதம் சரிவிலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 20 சதம் சரிவிலும், இதே அதானி டிரான்ஸ்மிஷன் 27 சதம் சரிவிலும், இதே அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, முறையே 25 சதம் மற்றும் 23 சதம் சரிவினைக் கண்டுள்ளது.. அது குறித்து சாமானிய மக்கள் புரிந்து கொள்ள ஒரு விளக்கம், நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள். பின்னர் அங்கு தங்கம் இருப்பதாக உள்ளூர் மக்களை நம்ப வைக்க உங்களுடன் ஒரு கும்பல்  சேர்ந்து பிரச்சாரம் செய்து 

இடத்தின் விலை மிகவும் உயர்கிறது. நீங்கள் நிலத்தை விற்கவில்லை ஆனால் அதன் பங்குகள் பலருக்கு விற்கத் தயாராக உள்ளது என்று கூறுகிறது.



பின்னர் ஒரு லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடி மதிப்பை நிர்ணயித்து நாற்பது சதவீத பங்குகளை மக்களுக்கு விற்கிறீர்கள். உங்களுக்கு அறுபது, எடுத்தவர்களுக்கு நாற்பது சதம்  பங்கு.                  ஒரு லட்சம்! 

செலவழித்துவிட்டு இப்போது உங்களிடம் இருப்பது காகிதத்தில் அறுபது லட்சம்.


இந்த அறுபது லட்சம் ரூபாய் பங்கை வங்கியில் அடகு வைத்து முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்குங்கள். பிறகு முன்பு செய்தது போல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முப்பது மனைகளை வாங்குவது. எல்லா இடங்களிலும் பிளாட்டினம் மற்றும் தாமிரம் இருப்பதாக பழைய சரக்குகளை விற்கிறார்கள்.

எனவே ஒரு பத்து அல்லது பதினைந்து சுழற்சிக்குப் பிறகு, நீங்கள் உலகின் பணக்காரர் ஆகி விடுவீர்கள். அது காகிதத்தில் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள் 


 இப்போது யாரோ ஒருவர் நீங்கள் வாங்கிய முதல் இடத்தில் தங்கம் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். என்ன நடந்திருக்கும் ?


எல்லாம் செயின் கிராக்கர் போல உடைந்து விடும். இதைத்தான் அதானி எளிமையாகச் செய்தார் என்று ஹிண்டன்பெர்க் ஆய்வு விபரம் கூறுகிறது, 

இந்திய வரி செலுத்துவோர் பணத்தைக் கொள்ளையடித்த 28  இந்திய நாட்டு தொழிலதிபர்களின் பெயர்களாக

ஆஷிஷ் சுரேஷ் பாய், மெஹுல் சோக்ஸி, நிரவ் மோடி, நிஷான் மோடி, புஷ்பேஷ் பைத்யா, ஆஷிஷ், சன்னி கலரா, ஆர்ட்டி கலரிங், சஞ்சய் கலாரா, சுதீர் கலரா, ஜாதின் மேத்தா, உமேஷ் பரீக், கமலேஷ் பரீக், நிலேஷ் பரீக், வினய் மித்தல்,

ஏகலவ்யா கர்க்,

சேத்தன் ஜெயந்திலால்,

நிதின் ஜெயந்திலால்,

தீப்தி பெயின் சேத்தன், சாவியா சைத், ராஜீவ் கோயல்,

அலகா கோயல்,

லலித் மோடி,

ரித்தேஷ் ஜெயின்,

ஹிதேஷ், நாகேந்தர்பாய் படேல்,

மயூரிபைன் படேல், விஜய் மல்லையா,

ஆகியோர் வழியில் இழந்துபோன நாட்டின்   மொத்தத் தொகை

10,00,000/- (பத்து லட்சம் கோடி ரூபாய் மட்டுமே)

மக்கள் பணத்தை எப்படிக் கொள்ளையடித்தார்கள் இந்த வர்த்தக அரசியல் வாதிகள் 

இந்த முக்கியமான மிகப்பெரிய கொள்ளைக்குத் துணையாக இருந்தது யார், யார்? இந்த செய்தியை

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை உண்டு !

.ஆனால் இது இங்கு வேறு விதம் ..அதானி குழுமத்தில் உரிமைப் பங்கு வெளியீட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தவே ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் இப்படி அறிக்கை வெளியிட்டிருக்கலாம். அதானி குழுமத்தின் சரிவில் பலனடைய இப்படிச் செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்ததற்கிடையில் தொடர்ந்து சரிந்து வரும் பங்குகளின் மத்தியில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதியும், சந்தையின் போக்கினை கருத்தில் கொண்டும் FPO-வினை ரத்து செய்துள்ளது.   இதன் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணம் திரும்பக் கிடைக்கும் எனலாம். இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பாகவும் அமையும். மொத்தத்தில் அதானி குழுமத்தினால் பணம் போச்சே என நினைத்தவர்களுக்கு, அதானி குழுமம் பணத்தை திரும்பக் கொடுப்பதாக கூறி முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.இது அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிவிப்பால், 25 சதவீதம் வரையில் அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டது. தற்போது வரையில் இந்த சரிவில் இருந்தும் மீண்டபாடாக இல்லை எனலாம்.ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையால் அதானி குழுமம், தொடர்ந்து தனது சந்தை மதிப்பினை இழந்து வரும் நிலையில், உலக பில்லியனர்கள் பட்டியலிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அதானி குழுமத்தில் இத்தகைய குழப்பங்களுக்கும் மத்தியில், எஃப் பி ஓ முழுமைக்குமான பங்குகளுக்கு விண்ணப்பத்தினை அதானி குழுமம் பெற்றது தான்.  இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் புதியதாக ஒரு முதலீட்டுத் திட்டம், அன்னிய நிறுவனங்கள் கூட அதானி குழுமத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என கூறி மிகப்பெரிய முதலீட்டினை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இது அதானி குழுமத்திற்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், அதானி குழுமத்தின்  பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் தான் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்கு வெளியீட்டினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அதானி குழுமம், நாளுக்கு நாள் எங்களது பங்குகளில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக உள்ளது. இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, நாங்கள் முதலீட்டாளர்களின் நலனை கருதி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளோம்.ஆக பெறப்பட்ட முதலீடுகளை திருப்பி அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்கான நடவடிக்கையிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இன்னும் சில தினங்களில் இந்த பணம் உங்களுக்கு திரும்பும் என்றும் அறிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...